செய்திகள் :

``இங்கு சிறுநீர் கழித்தால் என்ன ஆகும் என புரிய வேண்டும்'' - கோவை மக்களின் நூதன எச்சரிக்கை!

post image

பொது இடங்களில் சுகாதாரம் என்பது மிகவும் அவசியமானது. சுகாதாரத்தை காப்பதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், பல இடங்களில் எந்த பலனும் இல்லை. பொது இடங்களில் சிறுநீர் கழிப்பது, எச்சில் துப்புவது போன்ற செயல்களில் பொறுப்பற்ற சிலர் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். 

அதைத் தடுப்பதற்காக கோவை சிவானந்தா காலனி பகுதி மக்கள் எடுத்துள்ள நடவடிக்கை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சிவானந்தா காலனியில் இருந்து புதுப்பாலம் பகுதிக்குச் செல்லும் வழியில் ஏராளமான குடியிருப்பு பகுதிகள் உள்ள்ன.

கோவை

இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கூறுகையில், “இந்த வழியே செல்லும் பலர் சிறுநீர் கழிப்பது உள்ளிட்ட சுகாதார சீர்கேட்டில் ஈடுபடுகிறார்கள். நாங்கள் எவ்வளவு சொல்லியும் கேட்பதில்லை. ஜன்னலை திறந்து  வைத்தால் கூட குப்பென்று சிறுநீர் நாற்றம் அடிக்கிறது. இதுகுறித்து அரசுத்துறைகளில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதைத் தடுப்பதற்காக நாங்களே ஒரு முயற்சியில் இறங்கிவிட்டோம். தடுப்பு சுவர்களுக்கு முன்பு ஒயர் கட்டி, அதில் செருப்புகள், துடைப்பங்கள் உள்ளிட்டவற்றை மாட்டி விட்டுள்ளோம். இதைப் பார்க்கும்போது சிறுநீர் கழிக்க வருபவர்களுக்கு புரியும்.

செருப்பு, துடைப்பம் கட்டிய மக்கள்
செருப்பு, துடைப்பம் கட்டிய மக்கள்
செருப்பு, துடைப்பம் கட்டிய மக்கள்

இங்கு சிறுநீர் கழித்தால், என்ன ஆகும் என்று அவர்களை எச்சரிப்பதற்காகவே இப்படி செய்துள்ளோம். இது எங்களின் பாதுகாப்புக்காக நாங்களே எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை.” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

``டிரம்ப் ஆதரவாளர்களுக்கு தினமும் 1 மில்லியன் டாலர்!'' - எலான் மஸ்க் அறிவிப்பு; தடை விதித்த கோர்ட்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பிற்கு ஆதரவளிப்பவர்களுக்கு தினமும் ஒரு மில்லியன் டாலர் பரிசு அளிப்பதாக எலான் மஸ்க் அறிவித்திருந்தார். அதற்கு அமெரிக்க கோர்ட் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.அமெரிக்க அதிபர்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா தேர்தல்: அஜித்பவாரை எதிர்த்து மகன்; தர்மாராவை எதிர்த்து மகள்... சரத்பவாரின் வியூகம்..!

சரத்பவார் வெளியிட்ட வேட்பாளர் பட்டியல்மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 45 பேர் கொண்... மேலும் பார்க்க

வயநாடு வேட்புமனு தாக்கல்... பிரியங்கா - ராபர்ட் வதேரா சொத்து மதிப்பு விவரங்கள்!

நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவரான ராகுல் காந்தி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்டு, 2 தொகுதிகளிலும் வெற்றிபெற்றார். ஒருவர் 2 தொகுதிகளில் எம்.பி பதவி வகிக்க முடியாது... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா தேர்தல்: தாக்கரே வியூகத்தை உடைத்து சொந்த ஊரில் ஜெயிப்பாரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே?

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்கான வேலையில் அரசியல் கட்சிகள் முழுவேகத்தில் ஈடுபட்டுள்ளது. ஆளும் மஹாயுதி கூட்டணியிலும், எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடி கூட்டணியிலும் இன்னும் தொகுதி பங்கீடு முடிவு செய்... மேலும் பார்க்க

``உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு உதவும் வடகொரியா ராணுவம்'' - அமெரிக்கா குற்றச்சாட்டு

"ரஷ்யா சார்பில் ரஷ்ய - உக்ரைன் போரில் கலந்துகொள்ள 3,000 ராணுவ வீரர்கள் வட கொரியாவில் இருந்து ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது" என்று அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டி உள்ளனர். ரஷ்ய... மேலும் பார்க்க

BRICS: ``உலக அமைதிக்கு இந்திய - சீன உறவு அவசியம்'' பிரதமர் மோடி பேச்சு.. சீன அதிபர் ஜின் பிங் ஆதரவு!

கிட்டதட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு, பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின் பிங்கின் திட்டமிடப்பட்ட சந்திப்பு நேற்று நிகழ்ந்துள்ளது. பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கடந்த செவ்வாய்கிழமை, பிரதமர் மோடி ரஷ... மேலும் பார்க்க