புதுச்சேரி: `நிரூபித்துவிட்டால், அரசியலை விட்டே விலகுகிறேன்’ - நமச்சிவாயம் ஆவேசத...
``ரூ.200 செலுத்தினால் சாதி, இருப்பிடச் சான்றிதழ்...'' தூத்துக்குடியில் பரபரப்பை கிளப்பிய போஸ்டர்!
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ளது கொம்பன்குளம் ஊராட்சி. இந்த ஊராட்சியில், ஊராட்சி அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் இரண்டும் ஒரே வளாகத்தில் இயங்கி வருகிறது. இங்கு கிராம நிர்வாக அலுவலராக பிரபாகனி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், இந்த அலுவலக காம்பவுண்ட் சுவரில் மர்மநபர்கள் திடீரென ஒரு நோட்டீஸை ஒட்டியுள்ளனர்.
அதில், கொம்பன்குளம் கிராம நிர்வாக அலுவலகம் விலைப்பட்டியல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், சாதிச்சான்று, வருமானச்சான்று, இருப்பிடச்சான்று பெற ரூ.200 கட்டணம். 15 நாள்களில் வழங்கப்படும். இறப்புச்சான்று கட்டணம் ரூ.300 (4 நாள்களில் வழங்கப்படும்), வாரிசு சான்று சான்றிதழ் ரூ.500 கட்டணம், அடங்கல், கூட்டுப்பட்டா ரூ.1,000 (ஒரு நாளில் வழங்கப்படும்), தனிப்பட்டாவிற்கு ரூ.4,000 கட்டணம் (30 நாளில் வழங்கப்படும்) ஜி.பே மூலம் பணம் செலுத்தலாம்.
கடன் அட்டை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் நோட்டீஸ் அப்பகுதி மக்களிடம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலக ஊழியர், ஒட்டப்பட்டிருந்த அந்த நோட்டீஸை கிழித்து அகற்றியுள்ளனர்.
இதுகுறித்து கொம்பன்குளம் கிராம நிர்வாக அலுவலர் பிரபாகனியிடம் பேசினோம், “வி.ஏ.ஓ அலுவலகத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் விதமாக யாரோ இப்படி ஒரு நோட்டீஸை ஒட்டியுள்ளனர். இந்த நோட்டீஸ் விவகாரம் தொடர்பாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது” என்றார். இருப்பினும் இந்த நோட்டீஸ் விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.