செய்திகள் :

புதுச்சேரி: `நிரூபித்துவிட்டால், அரசியலை விட்டே விலகுகிறேன்’ - நமச்சிவாயம் ஆவேசத்தின் பின்னணி என்ன?

post image

சாடும் நாராயணசாமி

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க தலைமையிலான கூட்டணி ஆட்சியில் அமர்ந்ததில் இருந்து, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார் முன்னாள் முதல்வர் நாராயணசாமி. இந்த நிலையில் கடந்த அக்டோபர் 20-ம் தேதி தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி, ``புதுச்சேரியில் அரசியல்வாதிகள், அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரும் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியிருக்கிறார்கள். புதுச்சேரி மாநில வரலாற்றில் முதல் முறையாக ரமேஷ், பாலாஜி, ஜான்சன் என்ற மூன்று பி.சி.எஸ் (Provincial Civil Service) அதிகாரிகள் ஊழலில் சிக்கி, சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றனர். இப்படியான உயரதிகாரிகள் மட்டுமல்ல, சில அரசு ஊழியர்களும் ஊழல் புகாரில் சிக்கி வருகின்றனர்.

நாராயணசாமி

அந்த வகையில் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றி வரும் ரவிக்குமார் என்பவரது வீட்டில், சி.பி.ஐ அதிகாரிகள் 5 நாட்கள் சோதனை நடத்தியிருக்கின்றனர். அப்போது ரவிக்குமார் தன்னுடைய பெயரிலும், மனைவி பிரியதர்ஷினி மற்றும் மாமியார் குமுதம் பெயரிலும், ரூ.106 கோடி சொத்துகள் சேர்த்திருப்பதாக வழக்கு பதிவு செய்திருக்கும் சி.பி.ஐ, அந்த பட்டியலையும் எஃப்.ஐ.ஆரில் இணைத்திருக்கிறது.

இந்த ரவிக்குமாரிடம் பல அமைச்சர்கள் தொடர்பில் இருக்கின்றனர். அதனால்தான் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. புதுச்சேரி நாடாளுமன்றத் தேர்தலின்போது, இந்த ரவிக்குமாரின் வீட்டில் அதிகாரிகள் இரண்டு முறை சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு சென்ற அமைச்சர் நமச்சிவாயம், அந்த அதிகாரிகளிடம் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதிலிருந்தே இருவருக்கும் எந்த அளவுக்கு தொடர்பிருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது” என்றார் அதிரடியாக.

அதன் தொடர்ச்சியாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நமச்சிவாயம், ``முன்னாள் முதல்வர் நாராயணசாமி என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவதையே வழக்கமாக வைத்திருக்கிறார். தேர்தல் நேரத்தில் என்னுடைய பகுதியில் பிரச்னை நடக்கிறது என்று என்னுடைய கவனத்திற்கு வந்ததால், அங்கு சென்று அதை சரி செய்தேனே தவிர, எந்த குற்றவாளிகளுக்கும் ஆதரவாக நான் ஒரு போதும் இருந்ததில்லை. அந்த ரவிக்குமார் என்பவர் குற்றம் செய்திருந்தால், சம்மந்தப்பட்ட துறை அதற்கான நடவடிக்கையை எடுக்கப் போகிறது. அவர் ரூ.106 கோடி சொத்து சேர்த்திருந்தால், குற்றம் செய்திருந்தால், அதற்கான முகாந்திரம் இருந்தால் வருமான வரித்துறையும், சி.பி.ஐ-யும் அதற்கான நடவடிக்கையை எடுக்கப் போகின்றன.

நாராயணசாமியை அவருடைய கட்சியில் யாரும் மதிப்பதில்லை. அதனால் தன்னுடைய இருப்பை காட்டிக் கொள்வதற்காக, நானும் ரௌடிதான் என்று இப்படியான அறிக்கைகளை கொடுத்துக் கொண்டிருக்கிறார். வருமானத்துக்கு அதிகமாக 106% சதவிகிதம் சொத்துகள் சேர்த்திருப்பதாகத்தான் சி.பி.ஐ-யின் அறிக்கையில் இருக்கிறதே தவிர, ரூ.106 கோடி என்று இல்லை.

அமைச்சர் நமச்சிவாயம் | கோப்புப் படம்

ஆனால் நாராயணசாமி அதை ரூ.106 கோடி என்று கூறுகிறார். புதுச்சேரி சிறிய மாநிலம். அனைவரையும் அனைவருக்கும் தெரியும். அப்படியான நிலையில் இவர் அவருடைய பினாமி, அவர் இவருடைய பினாமி என்று இணைத்துப் பேசுவது அரசியல் நாகரீகம் இல்லை. நாராயணசாமி அதை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ரவிக்குமார் என்னுடைய பினாமி என்பதை நாராயணசாமி நிரூபித்துவிட்டால், நான் இந்த அரசியலை விட்டே விலகுகிறேன். அரசியல் ரீதியாக நான் வளர்ந்து கொண்டிருக்கிறேன்.

அந்த வளர்ச்சி நாராயணசாமியின் கண்களை உறுத்துகிறது. அரசியலில் இருப்பதற்காக நான் வெளிநாடு செல்லக் கூடாதா ? நான் எந்த நாட்டுக்கு சென்றாலும், அரசின் முன் அனுமதி பெற்று முறையாகத்தான் செல்கிறேன். சட்டத்தை மீறி நான் எதையும் செய்யவில்லை. புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. மக்கள் நிம்மதியாக இருக்கிறார்கள்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

தாராவியின் கதை: குடிசைகளை கோபுரமாக்க அடுத்தடுத்து டெண்டர்; களத்தில் இறங்கிய அதானி | பகுதி 4

மும்பை தாராவியில் உள்ள ஆயிரக்கணக்கான குடிசைகளை அகற்றிவிட்டு அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்கள் கட்டும் திட்டம் 15 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வந்த நிலையில், அத்திட்டத்தை செயல்படுத்தும் பொ... மேலும் பார்க்க

lady Justice Statue: `நீதி தேவதை சிலை மாற்றியமைப்பு' - உச்ச நீதிமன்ற பார் அசோசியேசன் எதிர்ப்பது ஏன்?

நீதியை சரிசமமாக வழங்குவதை நீதி தேவதை சிலை குறிக்கிறது. இந்த சிலை நீதிமன்றங்கள், சட்டக் கல்வி நிறுவனங்கள், சட்ட அலுவலகங்களில் நிறுவப்பட்டுள்ளது. அந்த சிலைகளில் கண்கள் கறுப்பு துணியால் கட்டப்பட்டும், இட... மேலும் பார்க்க

Vijay TVK: `சாதிகள்... அரசியல் புத்திசாலி... கலைஞர், ஜெயலலிதா!' - விஜய்யின் அரசியல் பார்வை

நாளை வி.சாலையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடக்கவிருக்கிறது. இதற்கென பிரமாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியின் தலைவராக இருக்கும்... மேலும் பார்க்க

தீவிரமடையும் பிரச்னை; `லாரன்ஸ் சகோதரர் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானம்' - NIA அறிவிப்பு

பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டின் மீது கடந்த ஏப்ரல் மாதம் குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் துப்பாக்கியால் சுட்டனர். இத்துப்பாக்கிச்சூடு தொடர்பாக மும்பை போலீஸார் விசார... மேலும் பார்க்க

TVK : காமராஜர், பெரியார், அம்பேத்கர், விஜய்... த.வெ.க கட்-அவுட் ‘காட்டும்’ அரசியல் ரூட் என்ன?

முதல் மாநாடுதமிழக வெற்றிக் கழகம்நடிகர் விஜய் புதிதாகத் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியைச் சுற்றியே அனைவரின் கண்களும் இருக்கிறது. கட்சி தொடங்கிய கையேடு கட்சியின் கொடி, பாடலையும் வெளியிட்ட... மேலும் பார்க்க

`தமிழ்த்தாய் வாழ்த்து தவறாகப் பாடப்படவில்லை..!" - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் தமிழ்த் தாய் வாழ்த்துப்பாடல் பாடப்படும் போது திராவிட திரு நல்நாடும் எனும் வரிகள் இல்லாமல் பாடப்பட்டது. அது தொடர... மேலும் பார்க்க