செய்திகள் :

தீவிரமடையும் பிரச்னை; `லாரன்ஸ் சகோதரர் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானம்' - NIA அறிவிப்பு

post image

பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டின் மீது கடந்த ஏப்ரல் மாதம் குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் துப்பாக்கியால் சுட்டனர். இத்துப்பாக்கிச்சூடு தொடர்பாக மும்பை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு சல்மான் கானை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக இதுவரை 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கோல்டி பிரர் தற்போது கனடாவில் பதுங்கி இருக்கிறார். சல்மான் கான் பண்ணை வீட்டிற்கு செல்லும்போது அவரை கொலைசெய்ய திட்டமிட்டு இருந்தது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது. சல்மான் கானை கொலை செய்ய பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்யவும் திட்டமிட்டு இருந்தனர்.

சல்மான் கான் நடவடிக்கையை லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் 70 பேர் தொடர்ந்து கண்காணித்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் மும்பையில் மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கும் இம்மாத தொடக்கத்தில் கொலை செய்யப்பட்டார். சல்மான் கானுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார் என்ற ஒரு காரணத்திற்காக பாபா சித்திக்கை லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் சுட்டுக்கொலை செய்தனர். சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கியால் சுட்டதில் லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அன்மோல் மற்றும் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளி கோல்டி பிரர் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்த சென்றவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அன்மோல், போனில் 9 நிமிடம் பேசியிருக்கிறார். சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்த அன்மோல் மற்றும் லாரன்ஸ் பிஷ்னோய் ஆகியோர் சேர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து சதித்திட்டம் தீட்டியதும் விசாரணையில் தெரிய வந்தது. இந்நிலையில் லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அன்மோல் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானமாக வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது. அன்மோல் அமெரிக்கா, கனடா அல்லது பாகிஸ்தானில் பதுங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

lady Justice Statue: `நீதி தேவதை சிலை மாற்றியமைப்பு' - உச்ச நீதிமன்ற பார் அசோசியேசன் எதிர்ப்பது ஏன்?

நீதியை சரிசமமாக வழங்குவதை நீதி தேவதை சிலை குறிக்கிறது. இந்த சிலை நீதிமன்றங்கள், சட்டக் கல்வி நிறுவனங்கள், சட்ட அலுவலகங்களில் நிறுவப்பட்டுள்ளது. அந்த சிலைகளில் கண்கள் கறுப்பு துணியால் கட்டப்பட்டும், இட... மேலும் பார்க்க

Vijay TVK: `சாதிகள்... அரசியல் புத்திசாலி... கலைஞர், ஜெயலலிதா!' - விஜய்யின் அரசியல் பார்வை

நாளை வி.சாலையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடக்கவிருக்கிறது. இதற்கென பிரமாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியின் தலைவராக இருக்கும்... மேலும் பார்க்க

புதுச்சேரி: `நிரூபித்துவிட்டால், அரசியலை விட்டே விலகுகிறேன்’ - நமச்சிவாயம் ஆவேசத்தின் பின்னணி என்ன?

சாடும் நாராயணசாமிபுதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க தலைமையிலான கூட்டணி ஆட்சியில் அமர்ந்ததில் இருந்து, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கி வ... மேலும் பார்க்க

TVK : காமராஜர், பெரியார், அம்பேத்கர், விஜய்... த.வெ.க கட்-அவுட் ‘காட்டும்’ அரசியல் ரூட் என்ன?

முதல் மாநாடுதமிழக வெற்றிக் கழகம்நடிகர் விஜய் புதிதாகத் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியைச் சுற்றியே அனைவரின் கண்களும் இருக்கிறது. கட்சி தொடங்கிய கையேடு கட்சியின் கொடி, பாடலையும் வெளியிட்ட... மேலும் பார்க்க

`தமிழ்த்தாய் வாழ்த்து தவறாகப் பாடப்படவில்லை..!" - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் தமிழ்த் தாய் வாழ்த்துப்பாடல் பாடப்படும் போது திராவிட திரு நல்நாடும் எனும் வரிகள் இல்லாமல் பாடப்பட்டது. அது தொடர... மேலும் பார்க்க

'பாஜக தொடர்பு... கட்சியை அழித்துவிட்டார்' - மயூரா ஜெயக்குமாருக்கு எதிராக கொதிக்கும் கோவை கதர்கள்

`கட்சி சித்தாந்தத்திற்கு எதிராக செயல்படுகிறார்’கடந்த 20.10.2024 அன்று கோவை மாநகர காங்கிரஸ் கமிட்டி சார்பில், 'கோவை காங்கிரஸ் கட்சியைக் காப்போம் காங்கிரஸ் கட்சியை வளர்ப்போம்' என்ற தலைப்பில் சிறப்புக் க... மேலும் பார்க்க