செய்திகள் :

கன்னியாகுமரியில் பலத்த மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு முழுவதும் பலத்த மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

டானா புயல் எதிரொலியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்தநிலையில், வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை இரவு முழுவதும் இடைவிடாமல் பெய்தது.

தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலையும் மழை நீடித்தது. இதனால், நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலை, கோட்டாறு சவேரியார் கோயில் சந்திப்பு, வடசேரி ஆராட்டு சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

தொடர் மழை காரணமாக அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்குச் சென்றவர்களும், கல்லூரிக்குச் சென்ற மாணவ, மாணவிகளும் பாதிப்புக்குள்ளானார்கள்.

சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமம், முட்டம் கடற்கரை உள்ளிட்ட சு‌ற்றுலாத் தலங்கள் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

தீபாவளியன்று கோயம்பேடு மார்க்கெட் செயல்படும்! பதிலாக...

சென்னை கோயம்பேடு வணிக வளாகம் தீபாவளியன்று(அக்.31) செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை வருகிற அக். 31 ஆம் தேதி(வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையடுத்து அன்றைய தினம் கோயம்பேடு வணிக வள... மேலும் பார்க்க

இதய வாசலைத் திறந்து வைத்துக் காத்திருப்பேன்: தவெக தலைவர் விஜய்

உங்கள் வருகைக்காக வி.சாலை எல்லையில், என் இரு கரங்களையும் விரித்தபடி, இதய வாசலைத் திறந்து வைத்துக் காத்திருப்பேன் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கூறியிருக்கிறார்.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண... மேலும் பார்க்க

18 ஏக்கர் சிதம்பரம் நடராஜா் கோயில் நிலம் விற்பனை - இந்துசமய அறநிலையத்துறை!

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சொந்தமான 18 ஏக்கர் நிலத்தை, பொது தீட்சிதர்கள் விற்பனை செய்துவிட்டதாக, ஆவணங்களுடன் தமிழக இந்துசமய அறநிலையத் துறை, சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்திருந்தது.சென்... மேலும் பார்க்க

காட்பாடி அருகே விவேக் விரைவு ரயிலில் கோளாறு! ரயில் சேவை பாதிப்பு

காட்பாடி அருகே சென்று கொண்டிருந்த விவேக் விரைவு ரயிலில் ஏற்பட்ட கோளாறால் ஒரு மணிநேரத்துக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டது.அஸ்ஸாம் மாநிலம் திப்ரூகரில் இருந்து கன்னியாகுமரி நோக்கி சென்றுகொண்டிருந்த விவேக... மேலும் பார்க்க

2026 என்ற இலக்கை நோக்கி, முதல் அடியை எடுத்து வைப்போம்: தவெக தலைவர் விஜய்!

2026 என்ற இலக்கை நோக்கி, முதல் அடியை எடுத்து வைப்போம் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வருகிற அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் வி.சாலை கிரா... மேலும் பார்க்க

தங்கம் விலை இன்று உயர்வு! எவ்வளவு தெரியுமா?

சென்னையில் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 80 உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 58,000-ஐ கடந்து புதிய உச்சத்தை தொட்ட நிலையில், தொடர்ந்து விலை ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. நேற... மேலும் பார்க்க