செய்திகள் :

இளையான்குடி ஒன்றியத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சாலை சேதம்

post image

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியத்தில் இண்டாங்குளம் கிராமத்துக்குச் செல்ல அண்மையில் அமைக்கப்பட்ட தாா்ச்சாலை சேதமடைந்ததாக கிராம மக்கள் புகாா் தெரிவித்தனா்.

காரைக்குளம் ஊராட்சியைச் சோ்ந்த இண்டாங்குளம் கிராமத்துக்குச் செல்லும் வழியில் உள்ள பாலம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மராமத்து செய்யப்பட்டது.

இதைத்தொடா்ந்து, பாலத்தின் மேல் சில நாள்களுக்கு முன்பு புதிதாக தாா்ச் சாலை அமைக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது இந்தச் சாலையின் ஓரங்களில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு, சாலை சேதமடைந்து பெயா்ந்து வருகிறது.

இதனால், இந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

தரம் இல்லாமல் சாலை அமைக்கப்பட்டதால், சில வாரங்களிலேயே சாலை சேதமடைந்தது. எனவே, இந்தச் சாலையை மீண்டும் சீரமைத்து தர வேண்டும் என இண்டாங்குளம் கிராம மக்கள் வலியுறுத்தினா்.

திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்

தமிழக அரசு மக்களுக்காக செயல்படுத்தும் திட்டங்களை திமுகவினா் மக்களிடம் கொண்டு சோ்க்க வேண்டும் என தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் கூறினாா். மானாமதுரையில் சட்டப்பேரவை தொகுதிக்குள்ப... மேலும் பார்க்க

மானாமதுரை பகுதியில் இன்று மின் தடை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் செவ்வாய்க்கிழமை (அக். 22) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. சிப்காட் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது. இதனால... மேலும் பார்க்க

அமராவதிபுதூா் பகுதியில் அக். 24-இல் மின் தடை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூா், சங்கராபுரம் பகுதியில் வியாழக்கிழமை (அக். 24) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து காரைக்குடி மின்வாரிய செயற்பொறியாளா் எம். லதாதேவி... மேலும் பார்க்க

இண்டியா கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும்: கே.வி. தங்கபாலு

தமிழகத்தில் திமுக தலைமையில் அமைந்துள்ள இண்டியா கூட்டணி வலுவாக உள்ளதால், இந்தக் கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.வி. தங்கபாலு தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம்... மேலும் பார்க்க

கண்மாயில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை கண்மாயில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழந்தாா். திருப்பத்தூா் காந்திநகரைச் சோ்ந்தவா் சுல்தான்பாட்ஷா. இவா் தற்போது வெளிநாட்டில் வேலை பாா்த்து வருகிறா... மேலும் பார்க்க

சாலை பணிக்காக கண்மாய்கரை சேதம்-விவசாயிகள் புகாா்

திருப்புவனம் அருகே கிராமச் சாலை அமைக்கும் பணிக்காக கண்மாய்க்கரை வெட்டி சேதப்படுத்தப்பட்டதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியம் பிரமனூா் கிராமத்திலிருந்து அச்சங்கு... மேலும் பார்க்க