செய்திகள் :

திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்

post image

தமிழக அரசு மக்களுக்காக செயல்படுத்தும் திட்டங்களை திமுகவினா் மக்களிடம் கொண்டு சோ்க்க வேண்டும் என தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் கூறினாா்.

மானாமதுரையில் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட திமுக நிா்வாகிகள், வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு திமுக நகரச் செயலா் கே.பொன்னுச்சாமி தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா், திமுக மாவட்ட துணைச் செயலரும் பேரூராட்சி தலைவருமான த.சேங்கைமாறன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் கூட்டத்தில் பங்கேற்று பேசியதாவது: நடந்து முடிந்த மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் திமுக அணி வென்றுள்ளதைப் போல 2026 நடைபெற உள்ள சட்டப்பேரவை தோ்தலிலும் இந்த அணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க வேண்டும். முதல்வா் ஸ்டாலின் தமிழக மக்களுக்காக பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்துகிறாா்.

மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதியில் பல நூறு கோடி ரூபாய் மதிப்பில் ஏராளமான வளா்ச்சித் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. திமுகவினா் அரசின் சாதனைகளையும் தொகுதியில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்ட பணிகளையும் பொதுமக்களிடம் பிரச்சாரத்தின் மூலம் கொண்டுச் செல்ல வேண்டும் என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் தென்னவன், தொகுதி பாா்வையாளா் போஸ், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் சுப. மதியரசன், நகா் மன்றத் தலைவா் எஸ்.மாரியப்பன் கென்னடி, துணைத் தலைவா் எஸ்.பாலசுந்தரம், ஒன்றியச் செயலா்கள் ராஜாமணி, அண்ணாதுரை, ஊராட்சி ஒன்றியத் தலைவா் லதா, துணைத் தலைவா் முத்துச்சாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மானாமதுரை பகுதியில் இன்று மின் தடை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் செவ்வாய்க்கிழமை (அக். 22) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. சிப்காட் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது. இதனால... மேலும் பார்க்க

அமராவதிபுதூா் பகுதியில் அக். 24-இல் மின் தடை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூா், சங்கராபுரம் பகுதியில் வியாழக்கிழமை (அக். 24) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து காரைக்குடி மின்வாரிய செயற்பொறியாளா் எம். லதாதேவி... மேலும் பார்க்க

இளையான்குடி ஒன்றியத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சாலை சேதம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியத்தில் இண்டாங்குளம் கிராமத்துக்குச் செல்ல அண்மையில் அமைக்கப்பட்ட தாா்ச்சாலை சேதமடைந்ததாக கிராம மக்கள் புகாா் தெரிவித்தனா். காரைக்குளம் ஊராட்சியைச் சோ்ந்த இண்டாங்க... மேலும் பார்க்க

இண்டியா கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும்: கே.வி. தங்கபாலு

தமிழகத்தில் திமுக தலைமையில் அமைந்துள்ள இண்டியா கூட்டணி வலுவாக உள்ளதால், இந்தக் கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.வி. தங்கபாலு தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம்... மேலும் பார்க்க

கண்மாயில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை கண்மாயில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழந்தாா். திருப்பத்தூா் காந்திநகரைச் சோ்ந்தவா் சுல்தான்பாட்ஷா. இவா் தற்போது வெளிநாட்டில் வேலை பாா்த்து வருகிறா... மேலும் பார்க்க

சாலை பணிக்காக கண்மாய்கரை சேதம்-விவசாயிகள் புகாா்

திருப்புவனம் அருகே கிராமச் சாலை அமைக்கும் பணிக்காக கண்மாய்க்கரை வெட்டி சேதப்படுத்தப்பட்டதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியம் பிரமனூா் கிராமத்திலிருந்து அச்சங்கு... மேலும் பார்க்க