செய்திகள் :

உலக நாடுகளுக்கு சீனா வைத்த செக்; 100% வரியை உயர்த்திய ட்ரம்ப் - என்ன நடந்தது?

post image

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தற்போது சீனா மீது கூடுதல் 100 சதவிகித வரியை விதித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை, அமெரிக்கா சீனா மீது 145 சதவிகிதம் வரை வரி விதித்தது. சீனாவும் அமெரிக்கா மீது 110 சதவிகித வரை வரி விதித்தது.

அதன் பின், இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட இந்த வரிகள் நிறுத்திவைக்கப்பட்டன. தற்போது அமெரிக்கா சீனா மீது 30 சதவிகித வரியை விதித்துள்ளது.

Donald trump - டொனால்ட் ட்ரம்ப்
Donald trump - டொனால்ட் ட்ரம்ப்

சீனா செக்

இந்த நிலையில், கடந்த வாரம், சீனா தனது அரிய கனிம வளங்களின் ஏற்றுமதியில் புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. அவை வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் கூறியுள்ளது.

இது இந்தியா, அமெரிக்கா உள்பட பல உலக நாடுகளைப் பாதிக்கும்.

பெரும்பாலான உலக நாடுகளுக்கு சீனா தான் அரிய கனிமங்களை ஏற்றுமதி செய்து வருகிறது. அதற்கு சீனா கட்டுப்பாடுகளை விதிக்கும் போது, உலக நாடுகளில் உற்பத்திகள் பாதிக்கும்.

ஏற்கெனவே ட்ரம்ப் வலியால் பாதித்துள்ள உலக நாடுகளுக்கு இது கூடுதல் நெருக்கடியைத் தரும்.

ட்ரம்ப் உத்தரவு

இதனையடுத்து தான், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீனா மீது கூடுதல் 100 சதவிகித வரியை விதித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், 'சீனாவின் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் உலக நாடுகளை மிகவும் பாதிக்கும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கூடுதல் வரி வரும் நவம்பர் மாதம் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் கூறியுள்ளார்.

இதனால், நவம்பர் 1-ம் தேதி முதல், சீன இறக்குமதிகளுக்கு அமெரிக்காவில் 130 சதவிகிதம் வரி விதிக்கப்படும்.

இதற்கு சீனா என்ன எதிர்வினையாற்றும் என்று நினைக்கிறீர்கள் மக்களே?

மதுரை: ”எங்களுக்குச் சிரித்துப் பேசவும் தெரியும்; கடித்துப் பேசவும் தெரியும்” - நயினார் நாகேந்திரன்

’தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' என்ற தலைப்பில் பிரசாரப் பயணத்தை மதுரையில் இன்று தொடங்கினார் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன். மதுரை அண்ணாநகரில் இன்று நடைபெற்ற இதன் தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் பாஜக... மேலும் பார்க்க

டெல்லி: ``செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்களுக்குத் தடையா?'' - தாலிபான் தரப்பு மறுப்பு

இந்தியாவிற்கு வருகை தந்துள்ள ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முட்டாக்கி டெல்லியில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்த... மேலும் பார்க்க

பிணைய கைதிகளை நாளை விடுவிக்கும் ஹமாஸ்: காஸாவிலிருந்து வெளியேற, ஆயுதங்களை கீழே போட மறுப்பு

பிணைய கைதிகள்பாலஸ்தீனத்தின் காசா நகரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எடுத்த தீவிர முயற்சியின் காரணமாக ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே ப... மேலும் பார்க்க

பீகார் சட்டமன்றத் தேர்தல்: முதல்வராகும் வாய்ப்பு யாருக்கு? வெல்லப்போகும் கூட்டணி? - கருத்துக்கணிப்பு

பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 243 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும், வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14-ம் தேத... மேலும் பார்க்க

`வெற்றிகரமாக முடிந்தது' - பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலடி தந்த ஆப்கானிஸ்தான்; காரணம் என்ன?

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் தாக்குதல் வெடித்துள்ளது. வியாழக்கிழமை நடந்த தாக்குதல் ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் அமைந்திருக்கிறது பாகிஸ்தான். கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 9), ஆப்கானிஸ்தான்... மேலும் பார்க்க

Nobel: இஸ்ரேலை ஆதரித்தவருக்கு அமைதிக்கான நோபல் பரிசா? - குவியும் கண்டனங்கள்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என வெளிப்படையாக டொனால்டு ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனாலும் டொனால்டு ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடை... மேலும் பார்க்க