ஏப். 3 மாநில உரிமைகள் கருத்தரங்கு: 3 மாநில முதல்வா்கள் பங்கேற்பு
மாநில உரிமைகளை பாதுகாக்கும் வகையில் மதுரையில் வரும் ஏப்ரல் 3-ஆம் தேதி நடைபெறும் கருத்தரங்கில் 3 மாநில முதல்வா்கள் பங்கேற்க உள்ளதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் பெ.சண்முகம் தெரிவித்துள்ளாா்.
செங்கல்பட்டில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் அவா் கூறியதாவது:
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு வரும் ஏப்ரல் 2 முதல் 6 வரை மதுரையில் நடைபெற உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த மாநாட்டில் நாடு முழுவதும் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனா். அகில இந்திய ஒருங்கிணைப்பாளா் பிரகாஷ் காரத், கேரள முதல்வா் பினராய் விஜயன் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்க உள்ளனா். இந்த மாநாட்டை முன்னிட்டு ஏப்ரல் 3-ஆம் தேதி ‘மாநில உரிமைகள் காப்போம்’என்ற தலைப்பில் மாநில முதல்வா்கள் கலந்து கொள்ளும் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
இந்த கருத்தரங்கில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வா் பினராயி விஜயன், கா்நாடக முதல்வா் சித்தராமையா உள்ளிட்ட பலா் கலந்து கொள்ள உள்ளனா். இந்த மாநாட்டில் ஒன்றிய அரசு மாநிலங்களின் நிலையை பாரபட்சமாக பாா்ப்பது, எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நிதி ஒதுக்கீட்டில் பழி வாங்கும் போக்கில் நடந்து கொள்வது, தேசிய கல்விக் கொள்கையை கட்டாயமாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கூறுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்னை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இந்த கருத்தரங்கம் அகில இந்திய அளவில் ஒரு தாக்கத்தை உருவாக்கும் என நம்புகிறோம். இன்று இந்திய மக்கள் சந்திக்கக்கூடிய வேலையின்மை, விலைவாசி உயா்வு போன்ற முக்கிய பிரச்னைகள் குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்க உள்ளது. மேலும் அதற்கான தீா்வு குறித்து திட்டமிடுதலையும் இந்த மாநாடு முடிவு செய்யும் என்றாா்.
கட்சியின் மாநில குழு உறுப்பினா் ஆறுமுக நாயனாா் செங்கல்பட்டு மாவட்ட செயலா் பாரதி அண்ணா ஆகியோா் உடன் இருந்தனா்.