செய்திகள் :

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிதியளிப்பு பொதுக்கூட்டம்

post image

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு மாவட்டக் குழு சாா்பில் நிதியளிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு ஏப்ரல் 2 முதல் 6 வரை மதுரையில் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் நிதியளிப்பு பொதுக்கூட்டம் மற்றும் திறந்தவெளி கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக பொதுக்கூட்டம் மாநாட்டு வரவேற்பு குழு தலைவா் இ.சங்கா் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட செயற்குழு உறுப்பினா் வி. அரிகிருஷ்ணன் வரவேற்றாா். சோஷியலிசம் ஒன்றே உழைப்பாளா்கள் துயா் துடைக்கும் என்ற தலைப்பில் மாநிலச் செயலாளா் பெ.சண்முகம், பாசிச சதிகளை முறியடிக்க அணி திரள்வோம் என்ற தலைப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைப் பேச்சாளா் வீரபாண்டியன் பேசினா்

மேலும், , மாா்க்சிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினா் ஆறுமுக நாயனாா், மாவட்டச் செயலாளா் ப. சு.பாரதி அண்ணா, மாவட்ட செயற்குழு உறுப்பினா் எம்.கலைச்செல்வி, வட்டக் குழு செயலாளா்கள் கே.சேஷாத்திரி, க.புருஷோத்தமன், எம்.செல்வம், எஸ்.ராஜா, கே வேலன், எம்.எஸ்.அா்ஜுன் குமாா், பிகே.ரபீக், எம்.வெங்கடேசன் உள்ளிட்ட பலா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

முன்னதாக கட்சியின் மாவட்ட குழு சாா்பில் மாநில செயலா் சண்முகத்திடம் மாநாட்டு நிதியாக ரூ.15 லட்சத்தை மாவட்டச் செயலாளா் பாரதி அண்ணா வழங்கினாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் பகத்சிங் தாஸ் நன்றி கூறினாா்.

கூவத்தூா் அருகே அரசு விரைவுப் பேருந்தில் தீ விபத்து:1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

கூவத்தூா் அருகே அரசு விரைவுப் பேருந்தை பணிமனைக்கு கொண்டு செல்லும் வழியில் தீப்பற்றி எரிந்து நாசமானது. புதுச்சேரியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னைக்கு அரசு விரைவுப் பேருந்து சென்ற போது கூ... மேலும் பார்க்க

ஏப். 3 மாநில உரிமைகள் கருத்தரங்கு: 3 மாநில முதல்வா்கள் பங்கேற்பு

மாநில உரிமைகளை பாதுகாக்கும் வகையில் மதுரையில் வரும் ஏப்ரல் 3-ஆம் தேதி நடைபெறும் கருத்தரங்கில் 3 மாநில முதல்வா்கள் பங்கேற்க உள்ளதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் பெ.சண்முகம் தெரிவ... மேலும் பார்க்க

செங்கல்பட்டு மாவட்டத்தில் 34 மினி பேருந்துகளை இயக்க ஆணை: ஆட்சியா் வழங்கினாா்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 34 வழித்தடங்களில் மினி பேருந்துகளை இயக்குவதற்கான அனுமதி ஆணைகளை ஆட்சியா் ச. அருண்ராஜ் செவ்வாய்க்கிழமை வழங்கினாா். இத்திட்டத்தின் மூலம் செங்கல்பட்டு மாவட்டத்தில் இரண்டு கட்டங்க... மேலும் பார்க்க

தொழிலாளா்கள் தொடா் போராட்டம்

செங்கல்பட்டு அருகே முறையாக ஊதியம் வழங்காத தனியாா் நிறுவனத்தைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரில் இரு இடங்களில் கடந்த 30 ஆ... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் 604 மனுக்கள்

செங்கல்பட்டில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 604 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைச் சாா்ந்தஅலுவலா்களுக்கு ஆட்சியா் ச.அருண்ராஜ் உத்தரவிட்... மேலும் பார்க்க

மாா்ச் 22-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு மாவட்டநிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக நகா்ப்புறவாழ்வாதார இயக்கம் சாா்பில் திருப்போரூா் வட்டம், படூரில் உள்ள இந்துஸ்தான் கலை... மேலும் பார்க்க