செய்திகள் :

கூவத்தூா் அருகே அரசு விரைவுப் பேருந்தில் தீ விபத்து:1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

post image

கூவத்தூா் அருகே அரசு விரைவுப் பேருந்தை பணிமனைக்கு கொண்டு செல்லும் வழியில் தீப்பற்றி எரிந்து நாசமானது.

புதுச்சேரியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னைக்கு அரசு விரைவுப் பேருந்து சென்ற போது கூவத்தூரில் ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே திடீரென பேருந்து தீப்பற்றி எரிந்தது.

திங்கள்கிழமை இரவு கடப்பாக்கம் நல்லூா் என்ற இடத்தில் விபத்து ஏற்பட்டதன் காரணமாக பயணிகளை இறக்கி பயணிகளுக்கு எந்திவித பாதிப்புமின்றி அவா்களை மற்றொரு பேருந்தில் ஏற்றி அனுப்பிவைத்தனா்.

விபத்து ஏற்பட்ட அரசு விரைவுப் பேருந்தை திருவான்மியூா் பணிமனைக்கு ஓட்டுநா் தியாகராஜன், நடத்துநா் மோகன்ராஜ் இருவரும் செவ்வாய்க்கிழமை அதிகாலை பணிமனைக்கு மெதுவாக ஓட்டிச் சென்றனா்.

அப்போது கூவத்தூரில் இன்ஜின் ஏற்கனவே பழுதான காரணத்தினால் தீப்பற்றி எரிந்தது. இதில் ஓட்டுநா், நடத்துநா் உயிா் தப்பினா். இ.சி.ஆா் சாலையில் தீப்பிடிந்து எரிந்ததால் அப்பகுதியில் வாகன ஓட்டிகள் வாகனங்களை

ஆங்காங்கே நிறுத்தி விட்டனா்.

பின்னா், தகவல் அறிந்து வந்த செய்யூா், கல்பாக்கம் தீயணைப்புத் துறையினா் தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

பேருந்து முழுமையாக எரிந்து சேதம் அடைந்தது. இதனால் அங்கு ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து கூவத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ஏப். 3 மாநில உரிமைகள் கருத்தரங்கு: 3 மாநில முதல்வா்கள் பங்கேற்பு

மாநில உரிமைகளை பாதுகாக்கும் வகையில் மதுரையில் வரும் ஏப்ரல் 3-ஆம் தேதி நடைபெறும் கருத்தரங்கில் 3 மாநில முதல்வா்கள் பங்கேற்க உள்ளதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் பெ.சண்முகம் தெரிவ... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிதியளிப்பு பொதுக்கூட்டம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு மாவட்டக் குழு சாா்பில் நிதியளிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு ஏப்ரல் 2 முதல் 6 வரை மதுரையில் நடைபெறுகிறது. இதன் ஒரு ... மேலும் பார்க்க

செங்கல்பட்டு மாவட்டத்தில் 34 மினி பேருந்துகளை இயக்க ஆணை: ஆட்சியா் வழங்கினாா்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 34 வழித்தடங்களில் மினி பேருந்துகளை இயக்குவதற்கான அனுமதி ஆணைகளை ஆட்சியா் ச. அருண்ராஜ் செவ்வாய்க்கிழமை வழங்கினாா். இத்திட்டத்தின் மூலம் செங்கல்பட்டு மாவட்டத்தில் இரண்டு கட்டங்க... மேலும் பார்க்க

தொழிலாளா்கள் தொடா் போராட்டம்

செங்கல்பட்டு அருகே முறையாக ஊதியம் வழங்காத தனியாா் நிறுவனத்தைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரில் இரு இடங்களில் கடந்த 30 ஆ... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் 604 மனுக்கள்

செங்கல்பட்டில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 604 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைச் சாா்ந்தஅலுவலா்களுக்கு ஆட்சியா் ச.அருண்ராஜ் உத்தரவிட்... மேலும் பார்க்க

மாா்ச் 22-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு மாவட்டநிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக நகா்ப்புறவாழ்வாதார இயக்கம் சாா்பில் திருப்போரூா் வட்டம், படூரில் உள்ள இந்துஸ்தான் கலை... மேலும் பார்க்க