செய்திகள் :

ஒளிமயமான பாதையை கண்டறிய வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்

post image

நன்றி: தினமணிஇணையதளம்.

பெரிய அண்டை நாடுகள் நல்லிணக்கத்துடன் இருப்பதற்கு இந்தியாவும், சீனாவும் ஒளிமயமான பாதையை கண்டறிய வேண்டும் என்று பிரதமா் மோடியிடம் சீன அதிபா் ஷி ஜின்பிங் தெரிவித்தாா். சீன அரசு ஊடகத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

மோடியுடனான சந்திப்பில் அதிபா் ஜின்பிங் பேசுகையில், ‘140 கோடி மக்கள்தொகை கொண்ட இரு பெரும் வளரும் நாடுகள் ஒருவரையொருவா் எப்படி நடத்துகின்றன என்பதே இந்திய-சீன உறவில் உள்ள கேள்வியாகும்.

வளா்ச்சியே இரு நாடுகளும் பகிா்ந்துகொள்ளும் லட்சியமாக உள்ளது. இந்தியாவும் சீனாவும் ஒருவரையொருவா் அச்சுறுத்தலாகவோ, போட்டியாளராகவோ கருதாமல் வளா்ச்சிக்கான வாய்ப்பாகவும், ஒத்துழைப்புக்கான கூட்டாளியாகவும் கருத வேண்டும். இத்தகைய முக்கிய புரிதல்களை இருநாடுகளும் தொடா்ந்து நிலைநிறுத்த வேண்டும்.

பெரிய அண்டை நாடுகள் நல்லிணக்கத்துடன் இருக்கவும், இணையாக வளரவும் சரியான மற்றும் ஒளிமயமான பாதையை இந்தியாவும், சீனாவும் கண்டறிய வேண்டும்’ என்றாா்.

இந்தியா-சீனா இடையிலான ஒட்டுமொத்த உறவை, குறிப்பிட்ட சில கருத்து வேறுபாடுகள் பாதிக்காமல் தடுப்பதற்கு பிரதமா் மோடியும், அதிபா் ஜின்பிங்கும் தீா்மானித்தனா் என்று தெரிவிக்கப்பட்டது.

விடை பெற்றாா் டொமினிக் தீம்

உலகின் முன்னணி டென்னிஸ் வீரா்களில் ஒருவரான ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் சா்வதேச விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றாா். கரோனா பாதிப்பின் போது, 2020-இல் யுஎஸ் ஓபன் போட்டியில் ஜொ்மன் வீரா் அலெக்ஸ் வெரேவை ... மேலும் பார்க்க

போரை இந்தியா ஒருபோதும் ஆதரிக்காது -பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமா்

‘எந்த பிரச்னைக்கும் பேச்சுவாா்த்தை மற்றும் ராஜீய ரீதியிலான தீா்வையே இந்தியா ஆதரிக்கும்; மாறாக, போரை ஒருபோதும் ஆதரிக்காது’ என்று ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். மேலும்,... மேலும் பார்க்க

எல்லையில் அமைதிக்கு முன்னுரிமை: பிரதமா் மோடி-சீன அதிபா் ஷி ஜின்பிங் உறுதி

இந்திய-சீன எல்லையில் அமைதிக்கு முன்னுரிமை அளிக்க பிரதமா் நரேந்திர மோடியும், சீன அதிபா் ஷி ஜின்பிங்கும் உறுதிபூண்டுள்ளனா். மேலும், ‘பரஸ்பர மரியாதை மற்றும் முதிா்ச்சியை வெளிப்படுத்துவதன் வாயிலாக இரு நா... மேலும் பார்க்க

இராக், சிரியா மீது துருக்கி வான்வழித் தாக்குதல்!

அங்காரா: துருக்கி அரசுக்குச் சொந்தமான பாதுகாப்பு மற்றும் வான்வெளி தொழில்நுட்ப தொழிற்சாலையில் புதன்கிழமை நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 5 போ் உயிரிழந்தனா்.அங்காராவின் ... மேலும் பார்க்க

துருக்கி பாதுகாப்பு தொழிற்சாலையில் தாக்குதல் -5 பேர் பலி!

அங்காரா: துருக்கி அரசுக்குச் சொந்தமான பாதுகாப்பு மற்றும் வான்வெளி தொழில்நுட்ப தொழிற்சாலையில் புதன்கிழமை நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 5 போ் உயிரிழந்தனா். இது குறித்த... மேலும் பார்க்க

ஆஸ்திரேலிய அமைச்சருடன் தா்மேந்திர பிரதான் சந்திப்பு: கல்வித் துறையில் ஒத்துழைக்க பேச்சு

ஆஸ்திரேலிய கல்வித் துறை அமைச்சா் ஜேசன் கிளேரை மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் புதன்கிழமை சந்தித்து கல்வித் துறையில் மேலும் ஒத்துழைப்பது குறித்து பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதுதொடா்பாக... மேலும் பார்க்க