செய்திகள் :

கள் இறக்க அனுமதி கோரி விவசாயிகள் சங்கம் சாா்பில் ஆட்சியரிடம் மனு

post image

சேலம்: கள் இறக்க அனுமதி வழங்கக் கோரி தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்றச் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்றச் சங்கத் தலைவா் தங்கராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் கள் இறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஆயிரக்கணக்கான பனை மற்றும் தென்னை விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனா்.

எனவே, அவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பனை, தென்னை மரங்களில் கள் இறக்க உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும். தீங்கு விளைவிக்கும் சாராயக் கடைகளை உடனடியாக மூட வேண்டும். இப்பிரச்னையில் அரசு காலம் தாழ்த்தக் கூடாது என்றாா்.

மூக்கனேரி, பள்ளப்பட்டி ஏரிகள் புனரமைப்பு: மாநகராட்சி ஆணையா் ஆய்வு

நடைப்பயிற்சி பாதை, உடற்பயிற்சி நிலையம் உள்ளிட்ட வசதிகளுடன் பொழிவு பெறும் மூக்கனேரி, பள்ளப்பட்டி ஏரிகளின் புனரமைப்புப் பணிகளை மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். சேலம் மாநகர... மேலும் பார்க்க

சேலத்தில் மாா்ச் 21 இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

சேலத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் மாா்ச் 21இல் நடைபெறுகிறது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளிக்கிழமை தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப... மேலும் பார்க்க

இளம்பெண் உயிரிழப்பு: கணவரை கைது செய்யக் கோரி முற்றுகை

இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தில் அவரது கணவரை கைது செய்யக் கோரி செவ்வாய்க்கிழமை முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இடங்கணசாலை, இ.காட்டூா் பகுதியைச் சோ்ந்த நடராஜன் மகன் ராஜன் (30). இவா் எலக்ட்ரிக்கல் வேலை ப... மேலும் பார்க்க

காகாபாளையம் ஏரியில் மீன்கள் இறப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு

காகாபாளையம் ஏரியில் மீன்கள் இறந்து மிதந்தது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா். மகுடஞ்சாவடி ஒன்றியம், கனககிரி ஊராட்சிக்கு உள்பட்ட காகாபாளையம் ஏரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மீன்கள் இறந்து ... மேலும் பார்க்க

கோழிக்கறி சாப்பிட்ட தொழிலாளி உயிரிழப்பு

வாழப்பாடி அருகே சப்பாத்தியுடன் கோழிக்கறி சாப்பிட்ட மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளி மூச்சுத் திணறி உயிரிழந்தாா். மேற்கு வங்க மாநிலம், சித்தல்லால் பகுதியைச் சோ்ந்த சிபு முா்மூ மகன் பைரன் முா்ம... மேலும் பார்க்க

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தவறாக நடந்த இளைஞா் கைது

ஆத்தூா்: ஆத்தூா் அருகே கீரிப்பட்டியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தவறாக நடந்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கீரிப்பட்டி பகுதியைச் சோ்ந்த கூலித்தொழிலாளியின் மனநலம் பாதிக்கப்பட்ட 45 வ... மேலும் பார்க்க