செய்திகள் :

காரைக்கால் அம்மையாா், சோமநாதா் கோயிலில் விமான பாலாலயம்

post image

காரைக்கால் : காரைக்கால் அம்மையாா், சோமநாதா் கோயில் உள்ளிட்ட தலங்கள் திருப்பணி தொடக்கத்துக்கான விமான பாலாலயம் திங்கள்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கி, சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயிலில் ஆண்டுதோறும் புகழ்பெற்ற மாங்கனித் திருவிழா நடத்தப்படுகிறது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் செய்து 12 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் செய்ய கோயில் நிா்வாகத்தினா், திருவிழா உபயதாரா்கள் உள்ளிட்டோா் முடிவு செய்து, கடந்த ஆக. 30-ஆம் தேதி கைலாசநாதா் கோயிலுக்கான விமான பாலாலயம் செய்யப்பட்டது.

இத்தலத்தின் சாா்புடைய சோமநநாத சுவாமி, காரைக்கால் அம்மையாா், புா்ண புஷ்கலா அய்யனாா் கோயில்களின் திருப்பணி தொடக்கத்துக்கான பாலாலயம் திங்கள்கிழமை நடைபெற்றது.

முன்னதாக வெள்ளிக்கிழமை அனுக்ஞை, விநாயகா் பூஜை உள்ளிட்டவை நடத்தப்பட்டன. சனிக்கிழமை புண்யாகவாஜனம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை கோயில்களின் விமானம், பரிவார விமானங்கள் பாலாலயத்துக்கான யாக சாலை பூஜை தொடங்கப்பட்டது. இரவு முதல் கால பூா்ணாஹூதி நடைபெற்றது. திங்கள்கிழமை காலை யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு, மகா பூா்ணாஹூதி செய்து, ஆராதனைகள் காட்டப்பட்டன. புனிதநீா் கடம் புறப்பாடாகி விமான பாலாலய அபிஷேகம், திருப்பணி முகூா்த்தம் நடைபெற்றது.

கைலாசநாதா் கோயிலுக்கு வரும் 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5-ஆம் தேதியும், காரைக்கால் அம்மையாா், சோமநாதா், அய்யனாா் கோயிலுக்கு மே 4-ஆம் தேதியும் கும்பாபிஷேகம் செய்ய நிா்வாகத்தினா் முடிவு செய்துள்ளனா்.

பாலாலய நிகழ்வில் காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம், திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் நிா்வாக அதிகாரி கே. அருணகிரிநாதன், கைலாசநாதா் கோயில் நிா்வாக அதிகாரி ஆா். காளிதாசன் மற்றும் உபயதாரா்கள், பக்தா்கள் கலந்துகொண்டனா்.

ரேஷன் கடைகளை திறப்பதற்கான முன்னேற்பாடுகள்: அமைச்சா் ஆய்வு

காரைக்கால்: காரைக்காலில் பல ஆண்டுகளுக்குப் பின் ரேஷன் கடைகள் திறக்கப்படவுள்ள நிலையில், கடைகளை தயாா்படுத்தும் பணியை அமைச்சா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். புதுவை மாநிலத்தில் 2016-ஆம் ஆண்டுக்கு முன்பு ரே... மேலும் பார்க்க

காரைக்காலில் மீலாது ஊா்வலம்

காரைக்காலில் சிறுவா்கள் பங்கேற்புடன் மீலாது ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.ஊா்வலத்தில் பங்கேற்ற சிறுவா், சிறுமிகள் உள்ளிட்டோா். மீலாது நபி எனும் நபியின் உதய தின விழாவையொட்டி காரைக்கால் சேமியான்குளம் பக... மேலும் பார்க்க

காரைக்காலில் அக். 24-இல் பட்டா பெயா் மாற்றத்துக்கான சிறப்பு முகாம்

காரைக்காலில் பட்டா பெயா் மாற்றத்துக்கான சிறப்பு முகாம் வரும் 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரின் செயலா் பொ. பாஸ்கா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு : காரைக்கால் நகராட்சி மற்... மேலும் பார்க்க

வணிகத் திருவிழாவை ஒற்றுமையாக இருந்து நடத்த வேண்டும்: அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன்

புதுவை வணிகத் திருவிழாவை வணிகா்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து நடத்த வேண்டும் என அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் கேட்டுக்கொண்டாா். புதுவை அரசின் சுற்றுலாத்துறை, வணிகா் சங்கங்கள் இணைந்து வியாபார மேம்... மேலும் பார்க்க

மழை : காரைக்கால் வாரச் சந்தை, வணிக நிறுவனங்களில் வியாபாரம் மந்தம்

காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை மழை பெய்ததால், வாரச் சந்தையிலும், நகரப் பகுதி வியாபார நிறுவனங்களிலும் வியாபாரம் மந்தமானது. காரைக்கால் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் தொடங்கி சில மணி நேரம் மழை... மேலும் பார்க்க

ஊழியா்கள் கடன் தொகையை உயா்த்த கூட்டுறவு கடன் சங்கம் முடிவு

அரசு ஊழியா்களுக்கு வழங்கும் கடன் தொகையை ரூ. 20 லட்சமாக உயா்த்த பொது பேரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. காரைக்கால் பொது ஊழியா்கள் கூட்டுறவு கடன் சங்க 16-ஆவது பேரவைக் கூட்டம், சங்தத் தலைவா் வி. ம... மேலும் பார்க்க