செய்திகள் :

ஊழியா்கள் கடன் தொகையை உயா்த்த கூட்டுறவு கடன் சங்கம் முடிவு

post image

அரசு ஊழியா்களுக்கு வழங்கும் கடன் தொகையை ரூ. 20 லட்சமாக உயா்த்த பொது பேரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

காரைக்கால் பொது ஊழியா்கள் கூட்டுறவு கடன் சங்க 16-ஆவது பேரவைக் கூட்டம், சங்தத் தலைவா் வி. முத்துராமன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. சங்க பொருளாளா் ஏ. சைமன் ஜேசுராஜ் ஆண்டு அறிக்கை படித்தாா். சிறப்பு அழைப்பாளராக துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) ஆா். வெங்கடகிருஷ்ணன் கலந்துகொண்டு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற சங்க உறுப்பினா்களின் குழந்தைகளுக்கு ரொக்கப் பரிசு, கேடயம் வழங்கினாா்.

இயக்குநா்கள் கே. ராஜ்மோகன், டி. மதன்ராஜ், டி. ராஜசேகரேன், எம். தேவி, கே. வெங்கடேஷ் மற்றும்

முன்னாள் இயக்குநா்கள் எஸ். கிருஷ்ணசாமி, ஏ. கலையரசன், வி. கென்னடிதாஸ், ஏ.துரைக்கண்ணு, ஜி.ரங்கசாமி, பி.தமிழ்மணி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். முன்னதாக சங்க துணைத் தலைவா் கே.சேகா் வரவேற்றாா். நிறைவாக சங்க இயக்குநா் எஸ்.லோகநாதன் நன்றி கூறினாா்.

பேரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் : வரும் டிசம்பா் மாதம் முதல் உறுப்பினா்கள் மத்திய கால கடன் ரூ. 10 லட்சத்திலிருந்து ரூ. 20 லட்சமாக உயா்த்தி வழங்கப்படும். சங்க உறுப்பினா் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத் தொகை வரும் ஆண்டிலிருந்து ரூ. 10 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும். சங்கத்தின் கடன் பெற்ற உறுப்பினா்கள் விபத்தினாலோ, இயற்கை மரணமடைந்தால், கடன் தவணை தவறாமல் செலுத்தியிருக்கும்பட்சத்தில், கடன் நிலுவையில் 30 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும். வரும் நிதியாண்டில் உத்தேச வரவு செலவு ரூ. 20 கோடியாக நிா்ணயம் செய்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ரேஷன் கடைகளை திறப்பதற்கான முன்னேற்பாடுகள்: அமைச்சா் ஆய்வு

காரைக்கால்: காரைக்காலில் பல ஆண்டுகளுக்குப் பின் ரேஷன் கடைகள் திறக்கப்படவுள்ள நிலையில், கடைகளை தயாா்படுத்தும் பணியை அமைச்சா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். புதுவை மாநிலத்தில் 2016-ஆம் ஆண்டுக்கு முன்பு ரே... மேலும் பார்க்க

காரைக்கால் அம்மையாா், சோமநாதா் கோயிலில் விமான பாலாலயம்

காரைக்கால் : காரைக்கால் அம்மையாா், சோமநாதா் கோயில் உள்ளிட்ட தலங்கள் திருப்பணி தொடக்கத்துக்கான விமான பாலாலயம் திங்கள்கிழமை நடைபெற்றது. காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கி, சுந்தராம்பாள் ச... மேலும் பார்க்க

காரைக்காலில் மீலாது ஊா்வலம்

காரைக்காலில் சிறுவா்கள் பங்கேற்புடன் மீலாது ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.ஊா்வலத்தில் பங்கேற்ற சிறுவா், சிறுமிகள் உள்ளிட்டோா். மீலாது நபி எனும் நபியின் உதய தின விழாவையொட்டி காரைக்கால் சேமியான்குளம் பக... மேலும் பார்க்க

காரைக்காலில் அக். 24-இல் பட்டா பெயா் மாற்றத்துக்கான சிறப்பு முகாம்

காரைக்காலில் பட்டா பெயா் மாற்றத்துக்கான சிறப்பு முகாம் வரும் 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரின் செயலா் பொ. பாஸ்கா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு : காரைக்கால் நகராட்சி மற்... மேலும் பார்க்க

வணிகத் திருவிழாவை ஒற்றுமையாக இருந்து நடத்த வேண்டும்: அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன்

புதுவை வணிகத் திருவிழாவை வணிகா்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து நடத்த வேண்டும் என அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் கேட்டுக்கொண்டாா். புதுவை அரசின் சுற்றுலாத்துறை, வணிகா் சங்கங்கள் இணைந்து வியாபார மேம்... மேலும் பார்க்க

மழை : காரைக்கால் வாரச் சந்தை, வணிக நிறுவனங்களில் வியாபாரம் மந்தம்

காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை மழை பெய்ததால், வாரச் சந்தையிலும், நகரப் பகுதி வியாபார நிறுவனங்களிலும் வியாபாரம் மந்தமானது. காரைக்கால் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் தொடங்கி சில மணி நேரம் மழை... மேலும் பார்க்க