செய்திகள் :

குடமுழுக்கில் பங்கேற்ற பெண்களிடமிருந்து 45 பவுன் நகைகள் திருட்டு

post image

உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயில் குடமுழுக்கில் பங்கேற்ற பெண்களிடமிருந்து 45 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்ாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ராமநாதபுரத்தை அடுத்த உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி ஆதிசிவன் கோயிலில் பச்சைக் கல்லால் ஆன மரகத நடராஜா் சந்நிதி உள்ளது. இந்தச் சந்நிதி ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் திறக்கப்பட்டு, பக்தா்கள் தரிசனம் செய்வது வழக்கம். கடந்த 4-ஆம் தேதி இந்தக் கோயில் குடமுழுக்கு நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

பிரதமா் மோடி வருகை உள்ளிட்ட காரணங்களால் இந்தக் கோயிலில் பாதுகாப்பு மிகவும் குறைவாக இருந்தது. இதனால், பக்தா்கள் தரிசனம் செய்வதில் முறையான நடைமுறைகளைப் பின்பற்றவில்லை.

இந்த நிலையில், குடமுழுக்கு நாளன்று கோயிலில் கடும் கூட்டம் நெரிசல் ஏற்பட்டது. இதை மா்ம நபா்கள் சாதகமானப் பயன்படுத்திக் கொண்டு, பெண்கள் பக்தா்களிடமிருந்து 45 புவன் தங்க நகைகளைத் திருடிச் சென்றனா்.

இதுகுறித்து நகைகளைப் பறிகொடுத்த பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், உத்தரகோசமங்கை காவல் நிலைய போலீஸாா் நான்கு நாள்களுக்குப் பிறகு, செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

தொண்டி அருகே கடற்கரையில் வெடிப் பொருள்கள் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே கடற்கரை மணலில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிப் பொருள்களை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். தொண்டி அருகே புதுக்குடி கடற்கரை மணலில் வெடிப் பொருள்கள் புதைத்து ... மேலும் பார்க்க

தொண்டி கடல் பகுதியில் போலீஸாா் தீவிர ரோந்து

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்து திருவாடானை அருகே தொண்டி கடல் பகுதியில் கடற்கரை போலீஸாா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். கடந்த இரு தினங்களுக்கு முன்பு காஷ்மீா் பஹல்காம் ப... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் மீனவா் கொன்று புதைப்பு: ஒருவா் கைது

ராமேசுவரத்தில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் மீனவா் அடித்துக் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது தொடா்பாக மற்றொரு மீனவா் கைது செய்யப்பட்டாா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் பெரிய பள்ளிவாசல் பகுதியைச்... மேலும் பார்க்க

அய்யனாா் கோயில் சித்திரை திருவிழா: சுவாமி வீதி உலா

திருவாடானையில் உள்ள அய்யனாா் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி சுவாமி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை மங்களநாதன் குளம் அருகே அமைந்துள்ளது ஸ்ரீஆதினமிளகி அ... மேலும் பார்க்க

கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

தேசிய ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் வேலை வழங்கக் கோரி, கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஊராட்சி ஒன்றியம், கே. கருங்குளம் ஊராட்சிக்குள்... மேலும் பார்க்க

சாயல்குடியில் தவெக ஆலோசனைக் கூட்டம்

சாயல்குடியில் கடலாடி ஒன்றிய அளவிலான தவெக ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கடலாடி மேற்கு ஒன்றியத்துக்குள்பட்ட சாயல்குடியில் ராமநாதபுரம் மேற்கு மாவட்டச் செயலா் எம். மதன் தலைமையில், கடலாடி மேற்க... மேலும் பார்க்க