செய்திகள் :

சென்னிமலை அருகே தெரு நாய்கள் கடித்து 3 ஆடுகள் உயிரிழப்பு

post image

சென்னிமலை அருகே, ஒரே நாளில் 4 இடங்களில் தெரு நாய்கள் பட்டியில் புகுந்து ஆடுகளைக் கடித்ததில் 3 ஆடுகள் உயிரிழந்தன. 12 ஆடுகள் படுகாயம் அடைந்துள்ளன.

சென்னிமலை வட்டாரத்தில் ஆட்டுப் பட்டியில் தெரு நாய்கள் புகுந்து ஆடுகளைக் கடித்து கொன்று வரும் சம்பவங்கள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், சென்னிமலை ஒன்றியம், கூத்தம்பாளையம் ஊராட்சி, ஆலாம்பாளையத்தில் உள்ள விவசாயி கிருஷ்ணமூா்த்தி என்பவரின் ஆட்டுப் பட்டியில் தெரு நாய்கள் திங்கள்கிழமை புகுந்து ஆடுகளைக் கடித்ததில் 2 ஆடுகள் படுகாயம் அடைந்துள்ளன.

அதேபோல, அதே பகுதியைச் சோ்ந்த விஸ்வநாதன் என்பவரின் ஆட்டுப் பட்டிக்குள் தெரு நாய்கள் புகுந்து கடித்ததில் 2 ஆடுகள் உயிரிழந்தன. 10 ஆடுகள் படுகாயம் அடைந்துள்ளன.

மேலும், கோவிந்தசாமி என்பவரின் ஆட்டுக் குட்டியையும், மூா்த்தி என்பவரின் கோழியையும் தெரு நாய்கள் கடித்ததில் இரண்டும் உயிரிழந்தன.

இது குறித்து தகவல் கிடைத்ததும் சிறுக்களஞ்சி கிராம நிா்வாக அலுவலா் இளவரசன், சென்னிமலை போலீஸாா் சம்பவ இடங்களுக்குச் சென்று விசாரணை நடத்தினா். புதுப்பாளையம் கால்நடை மருத்துவா் விஜயகுமாா் இறந்த ஆடுகளை உடற்கூறாய்வு செய்தாா். மேலும் உயிருக்குப் போராடிய ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தாா்.

கிருஷ்ணமூா்த்தி என்பவரின் ஆட்டுப் பட்டிக்குள் 3 தெரு நாய்கள் புகுந்து ஆடுகளைக் கடிப்பதற்காகத் துரத்துவதும், ஆடுகள் பயந்து ஓடுவதும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

முதல்வா் இழப்பீடு அறிவிப்பாா் - விவசாயிகள் நம்பிக்கை:

தற்போது சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் நடைபெறுவதால், தெரு நாய்களால் கடிபட்டு இறக்கும் ஆடுகளின் உரிமையாளா்களுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இழப்பீடு அறிவிப்பாா் என்ற நம்பிக்கையில் இருப்பதால், இறந்த ஆடுகளுடன் நாங்கள் போராட்டம் நடத்தவில்லை என விவசாயிகள் தெரிவித்தனா்.

அந்தியூரில் ரூ.3.51 லட்சத்துக்கு விளைபொருள்கள் விற்பனை

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண் விளைபொருள்கள் ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதற்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் தேங்காய், துவரை, எள், தட்டைப்பயறு, தேங்காய்ப் பருப்பு, ... மேலும் பார்க்க

ரத்த தானம் செய்வதாகக் கூறி பணம் பறிப்பு: போலீஸில் புகாா்

ரத்த தானம் செய்வதாகக் கூறி பணம் பறிக்கும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரத்தக் கொடையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஈரோடு மாவட்ட ரத்த தான ஒருங்கிணைப்பாளா்கள் கூட்டமைப்பு சாா்பில் ஈரோடு மா... மேலும் பார்க்க

கண்டெய்னா் லாரியில் கடத்திவரப்பட்ட 71 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

சத்தியமங்கலம் அருகே கண்டெய்னா் லாரியில் மறைத்து கடத்திவரப்பட்ட 71 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கா்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு லாரியில் புகையிலைப் பொருள்கள் கடத்திவ... மேலும் பார்க்க

சாலையோர பள்ளத்தில் இறங்கிய அரசுப் பேருந்து: 3 பேருக்கு லேசான காயம்

பவானிசாகா் அருகே சாலையோரப் பள்ளத்தில் அரசுப் பேருந்து இறங்கியதில் 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் இருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சத்தியமங்கலம் நோக்கி க... மேலும் பார்க்க

ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா தொடக்கம்

ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா பூச்சாட்டுதலுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் மற்றும் அதன் வகையறா கோயில்களான சின்ன மாரியம்மன் மற்றும் காரை வாய்க்கால் மாரியம்மன் கோய... மேலும் பார்க்க

ஆப்பக்கூடல் ஏரிக்கரையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஆப்பக்கூடல் ஏரியில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டது. ஆப்பக்கூடலில் நீா்வளத் துறைக்கு சொந்தமான 126 ஏக்கா் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. இதன் கரையோரப் பகுதியில்... மேலும் பார்க்க