செய்திகள் :

ஜம்முவில் கனமழை: பாறை உருண்டதில் தாய், மகன் பலி!

post image

ஜம்முவில் மூன்றாவது நாளாகப் பெய்துவரும் கனமழைக்கு தாய், மகன் ஆகிய இருவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜம்முவின் உயரமான பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டதால் 270 கி.மீ நீளமுள்ள ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை உள்பட பல்வேறு சாலைகள் மூடப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை உதம்பூர் மாவட்டத்தில் உள்ள மௌங்கரி அருகே ஒரு மலையிலிருந்து பாறை உருண்டதில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஷானோ தேவி (50) மற்றும் அவரது மகன் ரகு(25) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் கதுவா மாவட்டத்தின் ராஜ்பாக் பகுதியில் உள்ள உஜ் ஆற்றிலிருந்து 11 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் காவல்துறை மற்றும் மாநில பேரிடர் மீட்புப்படை கூட்டுக் குழுவால் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜம்முவில் உள்ள நிகி தாவி பகுதியில் இன்று காலை காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினரால் கூட்டு நடவடிக்கையில் ஓட்டுநர் ஒருவரும் மீட்கப்பட்டார்.

வியாழக்கிழமை மாலை 7 மணியளவில் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது, இதனால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சிக்கித் தவித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராகி நல்லாவில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக படோட்-தோடா சாலையில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பதேர்வா-சம்பா, முகல் சாலை மற்றும் சிந்தன் சாலை உள்ளிட்ட பல சாலைகளில் கடும் பனிப்பொழிவு காரணமாக மூடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இயர்ஃபோன் பயன்படுத்தலாம்? ஆனால்..

இயர்ஃபோன், ஹெட்ஃபோன் போன்றவற்றை அதிக நேரம் தொடர்ந்து பயன்படுத்துவது ஆபத்து என்று எத்தனையோ பேர் சொல்லியிருப்பார்கள், அதனை மத்திய சுகாதாரத் துறையே தற்போது எச்சரிக்கையாக வெளியிட்டிருக்கிறது.காது மற்றும் ... மேலும் பார்க்க

கோவாவில் ராட்சத அலையில் சிக்கிய ரஷியாவைச் சேர்ந்த 4 பேர் மீட்பு

கோவாவில் ராட்சத அலையில் சிக்கிய ரஷியாவைச் சேர்ந்த 4 பேர் பத்திரமாக மீட்டகப்பட்டனர். வடக்கு கோவாவில் உள்ள மேன்டிரம் கடற்கரையில் ரஷிய நாட்டினர் வியாழக்கிழமை பிற்பகல் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது தி... மேலும் பார்க்க

ராய்காட் கடற்கரையில் மீன்பிடி படகு தீப்பிடித்தது: 18 பணியாளர்கள் மீட்பு!

மகாராஷ்டிரம் ராய்காட் கடற்கரையில் தீப்பிடித்த மீன்பிடி படகில் இருந்த 18 பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். ராய்காட் மாவட்டத்தில் உள்ள அலிபாக் அக்ஷி கடற்கரையில் சுமார் 6 - 7 கடல் மைல் தொலைவில் ராகேஷ... மேலும் பார்க்க

உத்தரகண்ட் பனிச்சரிவில் சிக்கிய 57 தொழிலாளர்கள்!

உத்தரகண்ட்டில் ஏற்பட்டுள்ள பனிச்சரிவில் சிக்கிய 57 தொழிலாளர்களில் 16 பேர் மீட்கப்பட்டனர். உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்திலுள்ள மனா என்கிற உயரமான எல்லைக் கிராமத்தில் பனிச்சரிவு ஏற்பட்டது. இந்தப... மேலும் பார்க்க

'பெண்களின் தலை வழுக்கையானதற்கு கோதுமை காரணமல்ல' - விவசாயிகள் மறுப்பு!

மகாராஷ்டிரத்தில் புல்தானா மாவட்ட மக்களின் முடி உதிர்தல் பிரச்னைக்கு கோதுமை காரணமல்ல என்று பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் கூறியுள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களைச் சேர்ந... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் ஐரோப்பிய ஆணையத் தலைவர் சந்திப்பு!

இந்தியா வந்துள்ள ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான்டர் லியனை பிரதமர் மோடி வரவேற்றார். ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வாண்டர் லியன் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். தேசிய தலைநகரில் உள்ள... மேலும் பார்க்க