செய்திகள் :

டானா புயல்: உயிர் பலியில்லாத வகையில் முன்னெச்சரிக்கை- மோகன் சரண் மாஜி

post image

புவனேசுவரம்: டானா புயல் வியாழக்கிழமை நள்ளிரவு தொடங்கி வெள்ளிக்கிழமை காலை வரை கரையை கடந்தபோது, சூறைக்காற்றுடன் கனமழை பெய்த நிலையில், இந்த புயலால் ஒருவர் கூட பலியானதாகவோ காயமடைந்ததாகவோ தகவல் இல்லை என்று ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி தெரிவித்துள்ளார்.

ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தின் பிதா்கனிகா தேசிய பூங்கா மற்றும் பத்ரக் மாவட்டத்தின் தாம்ரா துறைமுகம் இடையே வியாழக்கிழமை நள்ளிரவில் டானா புயல் கரையைக் கடக்கத் தொடங்கியது.

புயல் கரையைக் கடக்கத் தொடங்குவதற்கு 6 மணி நேரத்துக்கு முன்பாகவே 15 கி.மீ. வேகத்தில் காற்று வீசத் தொடங்கிய நிலையில் கரையைக் கடக்கத் தொடங்கியபோது 110.கி.மீ. வரை பலத்த காற்று வீசியது. வெள்ளிக்கிழமை காலை கரையைக் கடக்கும் வேளையில் அதிகபட்சமாக 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசியுள்ளது.

டானா புயல் கரையைக் கடந்தபோது, ஒடிசா - மேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. ஒரு சில நாள்களுக்கு முன்பிருந்தே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது. லட்சக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு, ஒரு உயிரிழப்புக்கூட நேரிடாத வகையில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வந்தன.

இந்த நிலையில், ஒடிசா முதல்வர் பேசுகையில், ஒரு உயிரிழப்புக் கூட நேரிடக் கூடாது என்று வகையில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அதுபோல, சாலைகளில் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் அறுந்துவிழந்திருப்பதும் கூட வெள்ளிக்கிழமை பிற்பகலுக்குள் அகற்றப்படும் என்றும், ஏற்கனவே சீரமைப்புப் பணிகளும் முழு வீச்சில் நடந்து முடிந்திருப்பதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார். இன்று மாலை 6 மணிக்குள் அனைத்து இடங்களுக்கும் மின்சாரம் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை

டானா புயல் காரணமாக இரு மாநிலங்களிலும் லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனா். தென்கிழக்கு ரயில்வே மற்றும் கிழக்கு கடற்கரை ரயில்வே சாா்பில் இயக்கப்படும் 400-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டன; புவனேசுவரம், கொல்கத்தா விமான நிலைங்களில் விமானச் சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டன.

முன்னெச்சரிக்கையாக, கேந்திரபாரா, பத்ரக், பாலசோா் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 2,000-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 3.5 லட்சம் போ் வெளியேற்றப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டதாக மாநில பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் சுரேஷ் பூஜாரி தெரிவித்திருந்தார்.

கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டது. கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

மேற்கு வங்கத்தில் 2.5 லட்சம் போ் வெளியேற்றம்!

டானா புயல் முன்னெச்சரிக்கையாக, மேற்கு வங்கத்தின் தெற்கு பகுதி மாவட்டங்களில் சுமாா் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனா். ஒடிசா மேற்கு வங்கம் உள்பட 5 மாநிலங்களில் மொத்தம் 56 தேசிய பேரிடா் மீட்புப் படை குழுக்கள் உள்பட பல்வேறு மீட்புக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹரியாணா எம்எல்ஏக்கள் பதவியேற்பு!

ஹரியாணா முதல்வர் நயாப் சிங் சைனி மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் 15-வது மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களாக வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக... மேலும் பார்க்க

உ.பி.யில் தடம்புரண்ட சரக்கு ரயில்!

உத்தரப் பிரதேசத்தில் சரக்கு ரயில் தடம்புரண்டு வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானது.பஞ்சாப் மாநிலம் குரு ஹர் சஹாய் ரயில் நிலையத்தில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூர் ரயில் நிலையம் நோக்கி சென்று கொ... மேலும் பார்க்க

பெங்களூரு கட்டட விபத்தில் மேலும் ஒருவரின் உடல் மீட்பு: 9 ஆக உயர்ந்த பலி!

பெங்களூரு கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் இடிபாடுகளில் மேலும் ஒருவரின் உடல் வெள்ளிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. பெங்களூரூவில் கடந்த சில நாள்களாகப் பெ... மேலும் பார்க்க

கேரளத்தில் கனமழை: 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

கேரளத்தின் பல பகுதிகளில் இன்று காலை முதல் கனமழை பெய்துவருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனிடையே இந்திய வானிலை ஆய்வு மையம் மாநிலத்தில் ஐந... மேலும் பார்க்க

மகாராஷ்டிர தேர்தல்: காங்கிரஸ் இன்று முக்கிய ஆலோசனை!

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து தில்லியில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது. மகாராஷ்டிரத்தில் 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் மாதம் 20-ஆம் தேதி தோ்தல் நடைப... மேலும் பார்க்க

குல்மார்க்கில் நடந்த பயங்கரவாத தாக்குதல் வருத்தமளிக்கிறது: பிரியங்கா

ஜம்மு-காஷ்மீரின் குல்மார்க்கில் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி இரங்கல் தெரிவித்தார்.பாராமுல்லா மாவட்டத்தில் குல்மார்க் என்ற சுற்றுலாத் தலத்தின் அருகே, ரா... மேலும் பார்க்க