குல்மார்க்கில் நடந்த பயங்கரவாத தாக்குதல் வருத்தமளிக்கிறது: பிரியங்கா
ஜம்மு-காஷ்மீரின் குல்மார்க்கில் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி இரங்கல் தெரிவித்தார்.
பாராமுல்லா மாவட்டத்தில் குல்மார்க் என்ற சுற்றுலாத் தலத்தின் அருகே, ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள போடாபத்ரி என்ற இடத்தில் ராணுவ வாகனத்தைக் குறிவைத்து, தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் ராணுவ வீரர்கள் 2 பேர் வீர மரணமடைந்தனர். ராணுவத்தில் சுமை தூக்கும் பணியை மேற்கொண்டிருந்த கிராமத்தினர் 2 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் நால்வர் காயமடைந்தனர். அவர்களுக்கு ராணுவம் பதிலடி கொடுத்தது.
இதுதொடர்பாக பிரியங்கா வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்மார்க்கில் பயங்கரவாதத் தாக்குதலில் இரண்டு வீரர்கள் வீரமரணம் அடைந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது.