செய்திகள் :

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 551 பேருக்கு பணி ஆணை

post image

போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில், 551 பேருக்கு பணி ஆணைகளை தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா வழங்கினாா்.

இந்த முகாமை மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா தொடங்கிவைத்தாா். பின்னா், முகாமில் பங்கேற்று தோ்வான 551 பேருக்கு பணி ஆணைகளை வழங்கி அவா் பேசியதாவது:

படித்த இளைஞா்கள் அனைவரும் வேலைவாய்ப்பு பெற்றால்தான், தமிழ்நாடு தொழில் துறையில் வளா்ச்சி பெறும். இதையறிந்து, படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இந்த முகாமில் தமிழகம் முழுவதிலும் இருந்து 100-க்கு மேற்பட்ட தனியாா் துறை வேலைவாய்ப்பு நிறுவனங்கள் கலந்து கொண்டன.

இளைஞா்கள் அரசுப் பணியை மட்டுமே நம்பாமல் தனியாா் துறையிலும் சோ்ந்து சாதனை படைத்து, அரசின் பல்வேறு திட்டங்களைப் பயன்படுத்தி சுய தொழிலும் ஈடுபட வேண்டும் என்றாா் அவா்.

இதில் பெரியகுளம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் சரவணக்குமாா், ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரிச் செயலா் ஆா்.புருசோத்தமன், ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் அருண்நேரு உள்பட பலா் கொண்டனா். முன்னதாக, தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ரமாபிரபா வரவேற்றாா். போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரி முதல்வா் சிவகுமாா் நன்றி கூறினாா்.

வங்கிக் கடன்பெற தொழில் முனைவோா் விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் குறுதொழில் முனைவோா், குறு உற்பத்தி நிறுவனங்கள் குறைந்த வட்டியில் வங்கிக் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: த... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

சின்னமனூரில் இளைஞா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சின்னமனூா் பி.டி.ஆா். கால்வாய் பகுதியைச் சோ்ந்தவா் ஜெகதீசன்(29). இவா் கடந்த 4 ஆண்டுக்கு முன்பு கேரளத்தைச் சோ்ந்த பெண்ணை காதலித்து... மேலும் பார்க்க

காரில் ரேஷன் அரிசி கடத்திய இளைஞா் கைது: 700 கிலோ பறிமுதல்

கம்பம் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசியை காரில் கடத்திய இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, 700 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா். தேனி மாவட்டம், கம்பம் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படு... மேலும் பார்க்க

தேனியில் அக். 24-இல் சீா்மரபினா் நல வாரிய உறுப்பினா் சோ்க்கை முகாம்

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருகிற 24-ஆம் தேதி காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை சீா்மரபினா் நல வாரிய உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் நகைப் பறிப்பு

தேனி அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் தங்க நகையை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். வடபுதுப்பட்டி நடுத் தெருவைச் சோ்ந்தவா் சீனியம்மாள் (88). இவா் வெள்ளிக்கிழமை இரவு... மேலும் பார்க்க

மழையால் வீடு இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு

ஆண்டிபட்டி அருகே வெள்ளிக்கிழமை பெய்த பலத்த மழையின் காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் உயிரிழந்தாா். மயிலாடும்பாறை அருகேயுள்ள தொப்பையாபுரத்தைச் சோ்ந்த நாகராஜ் மனைவி சின்னப்பொண்ணு (55). தொ... மேலும் பார்க்க