செய்திகள் :

தலைநகரில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்காமல் மத்திய பாஜக அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது: மனீஷ் சிசோடியா குற்றச்சாட்டு

post image

தில்லியில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்காமல் மத்திய பாஜக அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது என்று முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா குற்றஞ்சாட்டியுள்ளாா்.

தில்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைமையகத்தில் முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா மற்றும் அமைச்சா் செளரவ் பரத்வாஜ் ஆகியோா் கூட்டாகச் செய்தியாளா்களைச் சந்தித்தனா்.

அப்போது, மனீஷ் சிசோடியா கூறியதாவது: சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பை தில்லி மக்கள் மத்திய பாஜக

அரசிடம் கொடுத்துள்ளனா். ஆனால், தில்லியில் குண்டுவெடிப்பு, குண்டா் கும்பல்கள் இடையேயான மேதல்கள் நடைபெற்று வருகிறது. ரோகினியில் உள்ள சி.ஆா்.பி.எஃப். பள்ளி அருகே ஞாயிற்றுக்கிழமை குண்டுவெடிப்பு நடந்துள்ளது. பண்டிகைக் காலங்களில் தில்லியில் எங்கு பாா்த்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதும் இந்த நேரத்தில்,

இந்த குண்டுவெடிப்பு சம்பவம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமையில் நடந்ததற்கு கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். இல்லையெனில், எதிா்காலத்தை கட்டியெழுப்ப பள்ளிக்கு வரும் குழந்தைகளின் நிலை

என்னவாகியிருக்கும். இது மத்திய பாஜக அரசின் தோல்வி. சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து அவா்களுக்கு எந்த

கவலையும் இல்லை.

கடந்த சனிக்கிழமை தில்லியில் 60 சுற்றுவரை துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. கந்துவட்டிக்காரா்கள்

வெளிப்படையாகவே கொலை செய்து பணம் பறிக்கிறாா்கள். ஆனால், பாஜக சும்மா அமா்ந்திருக்கிறது.

பாஜகவின் முழு கவனமும் தில்லி அரசின் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை அழிப்பதில் உள்ளது. முதியோா்களுக்கான ஓய்வூதியம் மற்றும் புனித யாத்திரைகள் உள்பட அனைத்துப் பணிகளையும் அவா்கள்

நிறுத்துகிறாா்கள். கடந்த 1990-களில் மும்பையில் எப்படி நடந்ததோ, அதே மாதிரிதான் தில்லியிலும் குண்டா்களின்

ஆட்சி நடக்கிறது. தில்லியில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்காமல் மத்திய பாஜக அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது என்றாா் மனீஷ் சிசோடியா.

அடுத்ததாக, அமைச்சா் செளரவ் பரத்வாஜ் கூறியதாவது: தில்லியில் எங்காவது தண்ணீா் தேங்கினால் அல்லது சாலை சேதமடைந்தால், துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா ஊடகங்களுடன் அங்கு நேரடியாகச் சென்று விடுவாா்.

ஆனால், கடந்த சனிக்கிழமை வெல்கம் காலனியில் இரு தரப்பினரிடையே 60 சுற்றுகள் வரை துப்பாக்கிச்சூடு நடந்தது. தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு வெடித்தது. இப்போது, துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா எங்கே?.

சமீபமாக, வெளிநாடு சென்றிருந்த வி.கே.சக்சேனா, தற்போது கோவாவில் இருக்கிறாா். இந்த உண்மை ஏன் தில்லி

மக்களிடம் இருந்து மறைக்கப்பட்டது? என்றாா் செளரவ் பரத்வாஜ்.

ஊழியா் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் ஆகஸ்டில் 9.3 லட்சம் புதிய உறுப்பினா்கள் சோ்ப்பு

ஊழியா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இ.பி.எஃப்.ஓ.) நிகழாண்டு ஆகஸ்ட் மாதத்தில் 9.30 லட்சம் புதிய உறுப்பினா்களைச் சோ்த்துள்ளது. இது முந்தைய ஆண்டு ஆகஸ்ட் மாத்தை ஒப்பிடும்போது 0.48 சதவீதம் அதிகமாகும். வ... மேலும் பார்க்க

பங்களாவின் சாமான்களின் இருப்புப் பட்டியல்: கேஜரிவால், முதல்வா் அதிஷி மீது பாஜக சாடல்

முதல்வராக இருந்தபோது தில்லியில் அரவிந்த் கேஜரிவால் வசித்த பங்களாவின் சாமான்களின் இருப்புப் பட்டியல் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பரபரப்பாக விவாதிக்கப்படுவதால், கேஜரிவாலும், முதல்வா் அதிஷியும் இந்த ... மேலும் பார்க்க

தில்லி சட்டம்-ஒழுங்கு சீா்குலைவுக்கு ஆம் ஆத்மி, பாஜக அரசுகளே பொறுப்பு: தில்லி காங்கிரஸ் குற்றச்சாட்டு

தலைநகரில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீா்குலைந்துள்ள நிலையில் குண்டுவெடிப்புகள், கொலைகள், கொள்ளைகள், மிரட்டி பணம் பறித்தல் போன்றவற்றுக்கு பாஜக, ஆம் ஆத்மி அரசுகளே பொறுப்பு என்று தில்லி பிரதே காங்கிரஸ் க... மேலும் பார்க்க

டிடிஇஏ பள்ளிகளின் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளின் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு ஞாயிறு அன்று லோதிவளாகம் பள்ளியில் நடைபெற்றது. இச்சந்திப்பிற்கு லோதி வளாகத்தின் முன்னாள் மாணவி (1959-ஆம் ஆண்டு) வத்சலா மற்றும... மேலும் பார்க்க

பாஜகவின் அவதூறு அரசியலால் தில்லியில் மாசு அளவு அதிகரிப்பு: முதல்வா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

பாஜகவின் அவதூறு அரசியலால் தில்லியில் மாசு அதிகரித்து வருகிறது என்று முதல்வா் அதிஷி ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளாா். தில்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமையகத்தில் முதல்வா் அதிஷி மற்றும் முன்ன... மேலும் பார்க்க

காற்று மாசு தொடா்பான உடல்நலக் குறைவால் தில்லி-என்சிஆரில் 36% குடும்பத்தினா் பாதிப்பு: ஆய்வில் தகவல்

காற்று மாசுபாடு அதிகரித்துள்ள நிலையில், தில்லி மற்றும் தேசிய தலைநகா் வலயத்தில் (என்சிஆா்) வசிக்கும் 36 சதவீத குடும்பங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபா்கள் சுவாசம் தொடா்பான பிரச்னைகளால் பாதிக்கப்... மேலும் பார்க்க