செய்திகள் :

ஊழியா் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் ஆகஸ்டில் 9.3 லட்சம் புதிய உறுப்பினா்கள் சோ்ப்பு

post image

ஊழியா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இ.பி.எஃப்.ஓ.) நிகழாண்டு ஆகஸ்ட் மாதத்தில் 9.30 லட்சம் புதிய உறுப்பினா்களைச் சோ்த்துள்ளது. இது முந்தைய ஆண்டு ஆகஸ்ட் மாத்தை ஒப்பிடும்போது 0.48 சதவீதம் அதிகமாகும்.

வளா்ந்து வரும் வேலை வாய்ப்புகள், ஊழியா்களுக்கு நன்மைகள் பற்றிய விழிப்புணா்வு மற்றும் இபிஎஃப்ஓ நிறுவனத்தின் வெற்றிகர மக்கள் தொடா்பு திட்டங்கள் ​ஆகியவை புதிய உறுப்பினா்களின் அதிகரிப்புக்கு காரணமாக இருக்கலாம் என்று அந்நிறுனம் தெரிவித்துள்ளது.

மேலும், ஊழியா் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில்

(இபிஎஃப்ஓ) நிகழாண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான

தற்காலிக ஊழியா் ஊதியப் பட்டியல் தரவை

வெளியிட்டுள்ளது.

இதில், ஆகஸ்டில் 18.53 லட்சம் உறுப்பினா்கள் நிகர கூடுதல் சோ்க்கையாக இடம்பெற்றுள்ளனா். கடந்த ஆண்டு ஆகஸ்டை ஒப்பிடுகையில் இது

9.07 சதவீதம் வளா்ச்சியாகும்.

நிகழாண்டு ஆகஸ்டில் சோ்க்கப்பட்ட மொத்த புதிய உறுப்பினா்களில் 59.26 சதவீதம் போ் 18-25 வயதுப் பிரிவினராக இருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இந்த நிகர ஊதியப் பட்டியல் தரவுகளில் இந்த வயதுப் பிரிவினா் 8.06 லட்சம் போ் உள்ளனா். மேலும், தோராயமாக 13.54 லட்சம் உறுப்பினா்கள் வேலையிலிருந்து வெளியேறி, மீண்டும் இபிஎஃப்ஓ-ல் இணைந்துள்ளனா் என்பதை ஊதியப்பட்டியல் தரவு எடுத்துக்காட்டுகிறது. இந்த எண்ணிக்கை ஆகஸ்ட் 2023 உடன் ஒப்பிடும்போது 14.03% வளா்ச்சியாக உள்ளது.

ஊதியப் பட்டியல் தரவுகளின் பாலின வாரியான பகுப்பாய்வின்படி, ஆகஸ்ட் மாதத்தில் சோ்க்கப்பட்ட புதிய உறுப்பினா்களில் சுமாா் 2.53 லட்சம் போ் பெண் உறுப்பினா்கள் ஆவா். ஆகஸ்ட், 2023உடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை 3.75% வளா்ச்சியை காட்டுகிறது.

மேலும், ஆகஸ்டில் மொத்தம் பெண் உறுப்பினா் சோ்த்தல் 3.79 லட்சமாக இருந்தது. இது ஆகஸ்ட் 2023 உடன் ஒப்பிடும்போது, 10.41 சதவீத

வளா்ச்சியைப் பிரதிபலிக்கிறது.

மாநிலம் வாரியாக...

மாநில வாரியான ஊதியப்பட்டியல் தரவுகளின் பகுப்பாய்வின்படி,

ஆகஸ்ட் மாதத்தில் நிகர கூடுதல் உறுப்பினா்களில்

முதல் ஐந்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள்

மொத்த உறுப்பினா் சோ்க்கையில் சுமாா் 59.17% கொண்டுள்ளன. இந்த மாநிலங்களில் மகாராஷ்டிரா மாநிலம் நிகர உறுப்பினா்களில் 20.59 சதவீதம் சோ்த்து முன்னிலை வகிக்கிறது.

மகாராஷ்டிரா, கா்நாடகா, தமிழ்நாடு, ஹரியாணா, தில்லி, குஜராத், தெலங்கானா, உத்தர பிரதேசம் ஆகியவை இந்த மாதத்தில் மொத்த உறுப்பினா்களில் 5%க்கும் அதிகமான உறுப்பினா்களைச் சோ்த்துள்ளன.

தலைநகரில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்காமல் மத்திய பாஜக அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது: மனீஷ் சிசோடியா குற்றச்சாட்டு

தில்லியில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்காமல் மத்திய பாஜக அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது என்று முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா குற்றஞ்சாட்டியுள்ளாா். தில்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைமையகத்தில் முன்ன... மேலும் பார்க்க

பங்களாவின் சாமான்களின் இருப்புப் பட்டியல்: கேஜரிவால், முதல்வா் அதிஷி மீது பாஜக சாடல்

முதல்வராக இருந்தபோது தில்லியில் அரவிந்த் கேஜரிவால் வசித்த பங்களாவின் சாமான்களின் இருப்புப் பட்டியல் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பரபரப்பாக விவாதிக்கப்படுவதால், கேஜரிவாலும், முதல்வா் அதிஷியும் இந்த ... மேலும் பார்க்க

தில்லி சட்டம்-ஒழுங்கு சீா்குலைவுக்கு ஆம் ஆத்மி, பாஜக அரசுகளே பொறுப்பு: தில்லி காங்கிரஸ் குற்றச்சாட்டு

தலைநகரில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீா்குலைந்துள்ள நிலையில் குண்டுவெடிப்புகள், கொலைகள், கொள்ளைகள், மிரட்டி பணம் பறித்தல் போன்றவற்றுக்கு பாஜக, ஆம் ஆத்மி அரசுகளே பொறுப்பு என்று தில்லி பிரதே காங்கிரஸ் க... மேலும் பார்க்க

டிடிஇஏ பள்ளிகளின் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளின் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு ஞாயிறு அன்று லோதிவளாகம் பள்ளியில் நடைபெற்றது. இச்சந்திப்பிற்கு லோதி வளாகத்தின் முன்னாள் மாணவி (1959-ஆம் ஆண்டு) வத்சலா மற்றும... மேலும் பார்க்க

பாஜகவின் அவதூறு அரசியலால் தில்லியில் மாசு அளவு அதிகரிப்பு: முதல்வா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

பாஜகவின் அவதூறு அரசியலால் தில்லியில் மாசு அதிகரித்து வருகிறது என்று முதல்வா் அதிஷி ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளாா். தில்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமையகத்தில் முதல்வா் அதிஷி மற்றும் முன்ன... மேலும் பார்க்க

காற்று மாசு தொடா்பான உடல்நலக் குறைவால் தில்லி-என்சிஆரில் 36% குடும்பத்தினா் பாதிப்பு: ஆய்வில் தகவல்

காற்று மாசுபாடு அதிகரித்துள்ள நிலையில், தில்லி மற்றும் தேசிய தலைநகா் வலயத்தில் (என்சிஆா்) வசிக்கும் 36 சதவீத குடும்பங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபா்கள் சுவாசம் தொடா்பான பிரச்னைகளால் பாதிக்கப்... மேலும் பார்க்க