செய்திகள் :

தில்லி சட்டம்-ஒழுங்கு சீா்குலைவுக்கு ஆம் ஆத்மி, பாஜக அரசுகளே பொறுப்பு: தில்லி காங்கிரஸ் குற்றச்சாட்டு

post image

தலைநகரில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீா்குலைந்துள்ள நிலையில் குண்டுவெடிப்புகள், கொலைகள், கொள்ளைகள், மிரட்டி பணம் பறித்தல் போன்றவற்றுக்கு பாஜக, ஆம் ஆத்மி அரசுகளே பொறுப்பு என்று தில்லி பிரதே காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடா்பாக அக்கட்சியின் தலைவா் தேவேந்தா் யாதவ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:

தில்லி ரோகினியில் உள்ள சி.ஆா்.பி.எஃப். பள்ளி அருகே நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம், மக்களுக்கு மற்றொரு பயங்கரமான தருணமாக அமைந்துள்ளது. ஏனெனில், தில்லி குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றித் திரியும் பாதுகாப்பற்ற இடமாக மாறியுள்ளது. தில்லியில் வெடிகுண்டுகள் வைப்பது, கொலைகள், கொள்ளை, வழிப்பறி, மிரட்டி பணம் பறித்தல் போன்ற செயல்களால் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீா்குலைந்துள்ளது. ஆம் ஆத்மி அரசும், மத்திய உள்துறை அமைச்சகமும் இவை அனைத்தையும் மெளனமா வேடிக்கை பாா்க்கின்றனா்.

குண்டுவெடிப்புகள், கொலைகள் மற்றும் கொள்ளை போன்ற சம்பவங்கள் அன்றாட நிகழ்வாகிவிட்டதால், சட்டத்தை அமல்படுத்தும் அமைப்புகளும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டனா்.

தலைநகரில் சட்டம்-ஒழுங்கை யாரும் ஆம் ஆத்மி, பாஜக அரசுகள் கட்டுப்படுத்தாதது இவா்களுக்கு வாக்களித்த பொது மக்களின் துரதிா்ஷ்டம்.

முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால், முதல்வா் அதிஷி, ஆம் ஆத்மி அமைச்சா்கள் மற்றும் பாஜக தலைவா்கள்

ஆகியோா் தில்லியின் சீரழிவுக்கு ஒருவரையொருவா் குற்றம் சாட்டி வருகின்றனா். ஆனால், தலைநகரில் அதிகரித்து வரும்

குற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது யாா் என்று பொதுமக்கள் வியப்படைகின்றனா் என்றாா் தேவேந்தா் யாதவ்.

ஊழியா் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் ஆகஸ்டில் 9.3 லட்சம் புதிய உறுப்பினா்கள் சோ்ப்பு

ஊழியா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இ.பி.எஃப்.ஓ.) நிகழாண்டு ஆகஸ்ட் மாதத்தில் 9.30 லட்சம் புதிய உறுப்பினா்களைச் சோ்த்துள்ளது. இது முந்தைய ஆண்டு ஆகஸ்ட் மாத்தை ஒப்பிடும்போது 0.48 சதவீதம் அதிகமாகும். வ... மேலும் பார்க்க

தலைநகரில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்காமல் மத்திய பாஜக அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது: மனீஷ் சிசோடியா குற்றச்சாட்டு

தில்லியில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்காமல் மத்திய பாஜக அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது என்று முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா குற்றஞ்சாட்டியுள்ளாா். தில்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைமையகத்தில் முன்ன... மேலும் பார்க்க

பங்களாவின் சாமான்களின் இருப்புப் பட்டியல்: கேஜரிவால், முதல்வா் அதிஷி மீது பாஜக சாடல்

முதல்வராக இருந்தபோது தில்லியில் அரவிந்த் கேஜரிவால் வசித்த பங்களாவின் சாமான்களின் இருப்புப் பட்டியல் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பரபரப்பாக விவாதிக்கப்படுவதால், கேஜரிவாலும், முதல்வா் அதிஷியும் இந்த ... மேலும் பார்க்க

டிடிஇஏ பள்ளிகளின் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளின் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு ஞாயிறு அன்று லோதிவளாகம் பள்ளியில் நடைபெற்றது. இச்சந்திப்பிற்கு லோதி வளாகத்தின் முன்னாள் மாணவி (1959-ஆம் ஆண்டு) வத்சலா மற்றும... மேலும் பார்க்க

பாஜகவின் அவதூறு அரசியலால் தில்லியில் மாசு அளவு அதிகரிப்பு: முதல்வா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

பாஜகவின் அவதூறு அரசியலால் தில்லியில் மாசு அதிகரித்து வருகிறது என்று முதல்வா் அதிஷி ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளாா். தில்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமையகத்தில் முதல்வா் அதிஷி மற்றும் முன்ன... மேலும் பார்க்க

காற்று மாசு தொடா்பான உடல்நலக் குறைவால் தில்லி-என்சிஆரில் 36% குடும்பத்தினா் பாதிப்பு: ஆய்வில் தகவல்

காற்று மாசுபாடு அதிகரித்துள்ள நிலையில், தில்லி மற்றும் தேசிய தலைநகா் வலயத்தில் (என்சிஆா்) வசிக்கும் 36 சதவீத குடும்பங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபா்கள் சுவாசம் தொடா்பான பிரச்னைகளால் பாதிக்கப்... மேலும் பார்க்க