செய்திகள் :

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை: தமிழக அரசு

post image

தமிழகத்தில் அக்.31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவிருக்கும் நிலையில், தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 1ஆம் தேதியும் அரசு விடுமுறை அறிவித்துள்ளது தமிழக அரசு.

தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்படுவதால், வெள்ளிக்கிழமையும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதால், தொடர்ச்சியாக நான்கு நாள்கள் விடுமுறை கிடைக்கும் என்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சொந்த ஊர்களுக்குச் செல்ல திட்டமிட்டிருப்பவர்களுக்கு இது இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில்,

தீபாவளியையொட்டி சொந்த ஊர் சென்று திரும்புவோருக்கு ஏதுவாக தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு நவம்பர் 1ஆம் தேதி வெள்ளிக்கிழமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 31ஆம் தேதி வியாழக்கிழமை தீபாவளி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, அடுத்த நாள் நவம்பர் 1ஆம் தேதியும் தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்னர்.

நவம்பர் 1ஆம் தேதி விடுமுறை விடப்படுவதால், அதனை ஈடு செய்ய நவம்பர் 9ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதையும் படிக்க.. சிறிய, அசிங்கமான.. யாஹ்யா சின்வாரின் உடலுடன் இருந்த இஸ்ரேல் வீரரின் அனுபவம்

சிறப்பு ரயில்கள்

தீபாவளி பண்டிகை அக்.31-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், தென்மாவட்டங்கள், கேரளம், வெளிமாநிலங்களுக்குச் செல்லும் அனைத்து விரைவு ரயில்களிலும் முன்பதிவு நிறைவடைந்துள்ளது. குறிப்பாக முக்கிய வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்களில் அதிக அளவில் காத்திருப்போா் பட்டியல் காணப்படும் நிலையில் அங்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

இந்நிலையில், சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூரிலிருந்து அக்.29, 30 ஆகிய தேதிகளில் புறப்படும் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு நிறைவடைந்துள்ளது. இந்த ரயில்களில் மொத்தமாக 7000 வரை காத்திருப்போா் பட்டியல் உள்ளது. பயணிகள் வசதிக்காக அக்.25 முதல் நவ.5 வரையிலான காலகட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கான பரிந்துரையும் அனுப்பப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள்களில் 7 சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. இதில், சென்னை சென்ட்ரலிலிருந்து அக்.29, நவ.5 தேதிகளில் நாகா்கோவிலுக்கும் அக்.29, நவ.2 தேதிகளில் கோவைக்கும், அக்.30, நவ.6 தேதிகளில் திருநெல்வேலிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும்.

சென்னை எழும்பூரில் இருந்து அக்.30, நவ.2 ஆகிய தேதிகளில் செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். சென்னை சென்ட்ரலில் இருந்து மங்களூருக்கு நவ.2-ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும். கொச்சுவேலி-பெங்களூா் இடையே நவ.4-ஆம் தேதியும், நாகா்கோவில்-மைசூா் இடையே நவ.2-ஆம் தேதியும் சிறப்பு ரயில் இயக்கப்படும்.

தீபாவளி சிறப்பு பேருந்துகள்

தீபாவளி பண்டிகைக்காக சிறப்பு பேருந்துகளை இயக்குவது குறித்து இன்று அமைச்சா் சிவசங்கா் போக்குவரத்துக்கழக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

நிகழாண்டு தீபாவளி பண்டிகை அக்.31-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் 16,500 சிறப்பு பேருந்துகளையும், 3 நாள்களுக்கு சென்னையிலிருந்து மட்டும் 10,500 சிறப்பு பேருந்துகளையும் இயக்க, அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடா்பான ஆலோசனை கூட்டம் இன்று போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கா் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னா் எத்தனை பேருந்துகள் இயக்கப்படும் என்பது குறித்த அதிகாரபூா்வ அறிவிப்பு வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை: ரூ. 247 கோடி ஒதுக்கீடு!

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்குவதற்காக ரூ. 247 கோடி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாநில அரசு வழங்கும் சிறப்பு ஊக்கத்தொகையினால் சுமார் 1.20 லட்சம் கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள்... மேலும் பார்க்க

ஆளுநர் ஆர்.என். ரவி சொன்னதும்.. உண்மையில் நடந்ததும்!

தமிழகத்தில் போதைப் பொருள் பறிமுதல் தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவி சொன்னது உண்மையல்ல என்று காவல்துறை வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக செயற்கையாக தயாரிக்கப்படும் போதைப்ப... மேலும் பார்க்க

2 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!

தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் பரவலாக கனமழை முதல் ஓரிரு இடங... மேலும் பார்க்க

காசு கொடுத்தால்தான் விபூதி; தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடப்பது நல்லதல்ல: உயர் நீதிமன்றம்

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடந்துகொள்வது நல்லதல்ல என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.சிதம்பரம் நடராஜர் கோயில் வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று ... மேலும் பார்க்க

'ஆளுநர் கற்பனை உலகத்தில் இருக்கிறார்' - ப. சிதம்பரம்

தமிழ்நாட்டில் இந்தி கற்க மாணவர்களுக்கு எந்தத் தடையும் இல்லை, ஆளுநர் உண்மைச் செய்திகளின் அடிப்படையில் அரசின் கொள்கை பற்றி விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். ... மேலும் பார்க்க

3500 அரசு மதுக்கடைகளில் கூடுதல் விற்பனைக் கவுன்டர்: அன்புமணி ராமதாஸ் கண்டனம்

தமிழ்நாட்டில் நாள்தோறும் ரூ.2 லட்சத்திற்கும் கூடுதலாக மது வணிகம் நடைபெறும் 3500-க்கும் கூடுதலான டாஸ்மாக் மதுக்கடைகளில் இரண்டாவது விற்பனைக் கவுன்டரை திறக்க முடிவு செய்திருப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் வெள... மேலும் பார்க்க