செய்திகள் :

நத்தம் அருகே புளிய மரத்தில் அரசுப் பேருந்து மோதி விபத்து: 30-க்கும் மேற்பட்டோர் காயம்

post image

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே புளிய மரத்தில் அரசுப் பேருந்து மோதி விபத்துத்துக்குள்ளானதில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கோட்டப்பட்டியில் இருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றுக் கொண்டு

நத்தம் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு நகர பேருந்து செங்குளம் அருகே வந்துகொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்தவர்

மீது மோதாமல் இருப்பதற்காக பேருந்தை திருப்பியபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதையும் படிக்க |கோவையில் இருந்து கள ஆய்வை தொடங்குகிறேன்: முதல்வர் ஸ்டாலின் கடிதம்

இதில், பேருந்தில் இருந்த 30-க்கும் மேற்பட்டோர் பயணிகளில் காயமடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் மற்றும் போலீசார் பேருந்தில் இருந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் படுகாயம் அடைந்த 6-க்கும் மேற்பட்டோர் மேல்சிச்சக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தர்னா

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாக நுழைவு வாயில் பகுதியில் முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் வெள்ளிக்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ... மேலும் பார்க்க

சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக புதுச்சேரி பாஜக எம்.பி. அவகாசம்

புதுச்சேரி: ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.செல்வகணபதி 3 மாதம் அவகாசம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.புதுச்சேரி பாஜக தலைவரும் புதுச்சேரி ம... மேலும் பார்க்க

இனியாவது மதுக்கடைகளை மூடுமா திமுக அரசு?: ராமதாஸ் கேள்வி

மதுவிலக்கு அதிகாரம் மாநில அரசுகளுக்கு மட்டுமே இருப்பதாகவும், இதில் மத்திய அரசு தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், இனியாவது மதுக்கடைகளை மூடுமா திமுக அரசு? என பாமக நிறுவ... மேலும் பார்க்க

கோவையில் இருந்து கள ஆய்வை தொடங்குகிறேன்: முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: நமது அரசு நிறைவேற்றி வரும் திட்டங்களின் நிலை குறித்த மாவட்ட வாரியான கள ஆய்வை வரும் நவம்பர் 5,6 ஆம் தேதிகளில் கோவையில் இருந்து தொடங்குகிறேன் என திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொண்ட... மேலும் பார்க்க

மாநகரப் பேருந்து நடத்துநா் கொலை: பயணி மீது கொலை வழக்குப் பதிவு

சென்னை: சென்னை அமைந்தகரையில் பயணச் சீட்டு எடுப்பதில் ஏற்பட்ட தகராறில், மாநகரப் பேருந்து நடத்துநா் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பயணி கோவிந்தன் மீது கொலை வழக்குப் பதிவு செய... மேலும் பார்க்க

கோவை மெட்ரோ திட்டத்தினை துரிதப்படுத்துக: முதல்வருக்கு வானதி சீனிவாசன் கடிதம்

கோவை: ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டம் மற்றும் மாற்று ஆய்வு அறிக்கை ஆகிய ஆவணங்களை சமர்ப்பித்து கோவை மெட்ரோ திட்டத்தினை துரிதப்படுத்துமாறு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பாஜக தேசிய மகளிரணி தலைவரும்... மேலும் பார்க்க