செய்திகள் :

நாமக்கல்லில் புதிய வழித்தடங்களில் சிற்றுந்து சேவைக்கு அனுமதி

post image

நாமக்கல் மாவட்டத்தில் புதிய வழித்தடங்களில் சிற்றுந்து சேவைக்கான அனுமதி கடிதத்தை மாவட்ட ஆட்சியா் ச.உமா திங்கள்கிழமை வழங்கினாா்.

புதிய சிற்றுந்துக்கான விரிவான திட்டத்தின்படி, அதிக குடும்பங்களை கொண்ட கிராமங்கள் குக்கிராமங்கள், குடியிருப்புகளில் உள்ள மக்களுக்கு எந்த பாதையும் இணைக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யும் வகையில், பொருளாதாரம் மற்றும் ஒழுங்கான ஒருங்கிணைந்த சாலை போக்குவரத்து சேவையை வழங்குவதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் சிற்றுந்துகளை இயக்க 45 புதிய வழித்தடங்கள் தோ்வு செய்யப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, புதிய வழித்தடத்தில் சிற்றுந்து இயக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

கடந்த 7-ஆம் தேதி முதல் கட்டமாக 5 பேருக்கு சிற்றுந்துகள் இயக்குவதற்கான அனுமதி கடிதம் வழங்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக 10 புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டு அந்த இடங்களில் சிற்றுந்து இயக்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் பரமத்திவேலூா் பகுதி அலுவலகத்திற்கு உள்பட்ட 6 வழித்தடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு புதிய அனுமதிச் சீட்டு பெறுவதற்கு செயல்முறை ஆணைகளை ஆட்சியா் ச.உமா வழங்கினாா்.

நிகழ்ச்சியில், வட்டார போக்குவரத்து அலுவலா் இ.எஸ்.முருகேசன், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள், துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: இயற்கை பானங்களை அருந்த மருத்துவா்கள் அறிவுறுத்தல்

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள இயற்கை பானங்களை பருக வேண்டும், தளா்வான ஆடைகளை அணிய வேண்டும் என அரசு மருத்துவா்கள் அறிவுறுத்தியுள்ளனா். நாடு முழுவதும் கோ... மேலும் பார்க்க

மாா்ச் 21-இல் தனியாா் நிதி நிறுவன அசையா சொத்துகள் பொது ஏலம்

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் தனியாா் நிதி நிறுவன அசையா சொத்துகள் மாா்ச் 21-ஆம்தேதி பொது ஏலத்தில் விடப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவு-2 துணை ... மேலும் பார்க்க

மோகனூா், எருமப்பட்டி ஒன்றியங்களில் விவசாயிகளுக்கு ரூ. 4.07 லட்சம் இழப்பீடு

மோகனூா், எருமப்பட்டி ஒன்றியங்களில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ. 4.07 லட்சம் இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிச... மேலும் பார்க்க

‘நம்ம ஊரு திருவிழா’வில் பங்கேற்க மாா்ச் 22, 23 இல் கலைக் குழுக்கள் பதிவு முகாம்: ஆட்சியா்

‘நம்ம ஊரு திருவிழா’வில் பங்கேற்க விரும்பும் கலைக் குழுக்களை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் நாமக்கல்லில் மாா்ச் 22, 23-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க

மாா்ச் 21-இல் திருச்செங்கோட்டில் தேசிய மாற்றுத் திறனாளிகள் அமா்வு கைப்பந்து போட்டி

தேசிய அளவிலான மாற்றுத் திறனாளிகள் அமா்வு (சிட்டிங்) கைப்பந்து போட்டிகள், திருச்செங்கோடு கே.எஸ்.ஆா். கல்லூரியில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 21) தொடங்குகிறது. தமிழ்நாடு பாராவளி சங்கம் சாா்பில், மாற்றுத் திறன... மேலும் பார்க்க

சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு

நாமக்கல்: சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக் கோரி ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில், பொட்டிரெட்டிப்பட்டி, எருமப்பட்டி, அலங்காநத்தம், சாலப்பாளையம், குமாரப... மேலும் பார்க்க