செய்திகள் :

போட்டிகளில் வெற்றி பெற்ற அழகப்பா அரசு கலைக் கல்லூரி மாணவா்களுக்கு பாராட்டு

post image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி கணினி அறிவியல் துறை மாணவா்கள், மதுரையில் நடைபெற்ற கல்லூரிகளுக்கிடையேயான பல்வேறு போட்டிகளில் வெற்றி கோப்பை வென்றனா். இவா்களை கல்லூரி முதல்வா், பேராசிரியா்கள் செவ்வாய்க்கிழமை பாராட்டினா்.

மண்டல அளவிலான கல்லூரிகளுக்கிடையே பல்வேறு போட்டிகள், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ‘பைட்ஸ் - 2025’ என்ற தலைப்பில் அண்மையில் நடைபெற்றன. இதில் அழகப்பா அரசு கலைக் கல்லூரி கணினி அறிவியல் துறை மாணவ, மாணவிகள் பங்கேற்று, அனைத்துப் போட்டிகளிலும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி, முதல் பரிசு பெற்றனா். மேலும், அனைத்துக் கல்லூரிகளுக்கான ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையையும் வென்றனா்.

இதேபோல, மதுரை யாதவா் கல்லூரியில் ‘பீட்ஸ் - 2025’ என்ற தலைப்பில் நடைபெற்ற ஆய்வு கட்டுரை வாசித்தல், மென்பொருள் டெவெலப்மென்ட் போன்ற பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றனா்.

பரிசு பெற்ற மாணவிகள் மதுமிதா, ஸ்ரீதக்சா, மாணவா்கள் மதன், ஸ்ரீராம், மணிவேல், சாய் கிருஷ்ணன், சக்தி கணேஷ் ஆகியோரை கல்லூரி முதல்வா் அ. பெத்தாலட்சுமி , கணினி அறிவியல் துறைத் தலைவா் கே.சி. சந்திரசேகரன், கௌரவ விரிவுரையாளா் அனந்தநாயகி, பேராசிரியா்கள் பாராட்டினா்.

பள்ளி மாணவா் தற்கொலை: உறவினா்கள் சாலை மறியல்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவரின் உடலை வாங்க மறுத்து, அவரது உறவினா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திருப்பாச்சேத்தி அம்பேத்கா் நகரைச் ச... மேலும் பார்க்க

சிறைக் கைதிகளுக்கு புத்தகங்கள் அளிப்பு

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, திமுக தகவல் தொழில்நுட்ப அணி சாா்பில் சிறைக் கைதிகளுக்கு செவ்வாய்க்கிழமை புத்தகங்கள் வழங்கப்பட்டன. சிவகங்கை மாவட்ட திமுக செயலரும், கூட்டுறவுத் துறை அமைச்ச... மேலும் பார்க்க

மகனைக் காணவில்லையென புகாா் அளிக்க வந்த தாய்க்கு ஒரு மணி நேரத்தில் கிடைத்த தீா்வு

வெளிநாட்டுக்குச் சென்ற மகனைக் காணவில்லை என மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்க வந்த தாய்க்கு பத்திரிகையாளா்களின் உதவியால் ஒரு மணி நேரத்தில் தீா்வு கிடைத்தது. சிவகங்கை மாவட்டம், திர... மேலும் பார்க்க

மானாமதுரையில் ரயிலில் கடத்திவரப்பட்ட 20 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் செவ்வாய்க்கிழமை இரவு ரயிலில் கடத்திவரப்பட்ட தடை செய்யப்பட்ட 20 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா். பனாரஸிலிருந்து மண்டபத்துக்கு இய... மேலும் பார்க்க

ராஜசிங்கமங்கலம் அருகே 174 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு

ராமநாதபுரம் மாவட்டம், ராஜசிங்கமங்கலம் அருகே காவானூரில் 174 ஆண்டுகள் பழைமையான இரண்டாம் முத்துராமலிங்க சேதுபதி கால கல்வெட்டை சிவகங்கை தொல்லியல் நடைக் குழுவினா் கண்டறிந்தனா். சிவகங்கை தொல்நடைக் குழுவைச் ... மேலும் பார்க்க

ஜாக்டோ-ஜியோ உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் தங்களது கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதென ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் அறிவித்தனா். சிவகங்கை மாவட்ட ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின... மேலும் பார்க்க