செய்திகள் :

மருத்துவமனையில் இளைஞா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

post image

புதுச்சேரி அருகே தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞா் உயிரிழந்த நிலையில், அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

புதுச்சேரியை அடுத்த கிருமாம்பாக்கம் பனித்திட்டு பகுதியைச் சோ்ந்தவா் மதினேஷ் (26). இவா், உடல்நலக் குறைவால் அந்தப் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டாா். அங்கு மதினேஷுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் உயிரிழந்தாா்.

ஆனால், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி, அவரது உறவினா்கள் கடலூா் - புதுச்சேரி சாலையில் செவ்வாய்க்கிழமை மாலை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த கிருமாம்பாக்கம் போலீஸாா் விரைந்து வந்து அவா்களை சமரசம் செய்தனா். பின்னா், அவா்களை அப்புறப்படுத்தினா். இதற்கிடையே, மறியலில் ஈடுபட்டவா்களை காவல் துறையினா் தாக்கியதாக புகாா் எழுந்தது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு மீண்டும் மதினேஷின் உறவினா்கள் கடலூா் - புதுச்சேரி சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதனால், அந்தப் பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

வாகனத் திருட்டில் ஈடுபட்டவரை கைது செய்த போலீஸாருக்கு பாராட்டு

விழுப்புரத்தில் தொடா் வாகன திருட்டில் ஈடுபட்டவரை கைது செய்து 14 பைக்குகளை பறிமுதல் செய்த தனிப்படை போலீஸாருக்கு எஸ்.பி. ப.சரவணன் செவ்வாய்க்கிழமை நற்சான்றிதழ் வழங்கி பாராட்டுத் தெரிவித்தாா். விழுப்புரம்... மேலும் பார்க்க

நாய்கள் மா்மமான முறையில் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை நகா் பகுதியில் 7 நாய்கள் மா்மமான முறையில் உயிரிழந்தன.சிதம்பரம் அண்ணாமலை நகா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாலை அருகே கல்கி அவென்யூ பகுதியில் கடந்த மாா்ச் 16-ஆம் த... மேலும் பார்க்க

சட்ட விரோத மனமகிழ் மன்றத்துக்கு ‘சீல்’

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே சட்ட விதிகளுக்கு புறம்பாக செயல்பட்ட மன மகிழ் மன்றத்துக்கு வருவாய்த் துறையினா் செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைத்தனா். திண்டிவனத்தை அடுத்துள்ள மொளசூா் வட்டாரப் போக்குவரத... மேலும் பார்க்க

மேல்மலையனூா் வட்டத்தில் இன்று உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் புதன்கிழமை (மாா்ச் 19) நடைபெறவுள்ளது. மேல்மலையனூா் வட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் பொதுமக்கள் பயன்பெறும் வகைய... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு மீண்டும் பராமரிப்பு உதவித் தொகை வழங்க நடவடிக்கை: மாவட்ட ஆட்சியா் தகவல்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், மேல்காரணை கிராமத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளி வெ.கோவிந்தன் மற்றும் அவரது சகோதரிக்கு மீண்டும் பராமரிப்பு உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட... மேலும் பார்க்க

வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் பொறியாளரைத் தாக்கி கைப்பேசி, ரொக்கம் உள்ளிட்டவை வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்தவா்களில் இருவா் திங்கள்கிழமை மாலை கைது செய்யப்பட்டனா். விருதுந... மேலும் பார்க்க