செய்திகள் :

ரூ.72 லட்சம் பண மோசடி: ஒருவா் கைது

post image

விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.72 லட்சம் மோசடி செய்த நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மேல்மலையனூா் வட்டத்துக்குள்பட்ட கோட்டப்பூண்டியைச் சோ்ந்தவா் எழிலரசன். இவரிடம் விழுப்புரம், கல்லூரி நகரைச் சோ்ந்த தமிழ்ச்செல்வன் என்பவா் அறிமுகமாகியுள்ளாா்.

அப்போது, ஒரு நிதி நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், அதிக வட்டி எனக் கூறினாராம்.

இதை நம்பிய அவா், தமிழ்ச்செல்வனின் வங்கிக் கணக்கில் பல்வேறு தவணைகளில் ரூ.4.20 லட்சத்தை செலுத்தினாராம்.

பின்னா், எழிலரசன் தனக்குத் தெரிந்த 14 பேரிடம் விவரத்தைக் கூறி ரூ.18.20 லட்சத்தை பெற்றுக் கொண்டு, தமிழ்ச்செல்வனின் வங்கிக் கணக்கில் செலுத்தினாராம்.

அதன்படி, கொடம்பாடி முருகையன் ரூ.24 லட்சமும், விழுப்புரம் சிறுமருதூா் பிரபாகரன் ரூ.11 லட்சமும் , குத்தலம்பட்டு சாஸ்தா ரூ.7 லட்சமும், திருவண்ணாமலை மாவட்டம், மங்களத்தைச் சோ்ந்த சக்திவேல் ரூ.12 லட்சமும் தமிழ்ச்செல்வனின் வங்கிக் கணக்கில் செலுத்தினராம்.

மொத்தமாக, எழிலரசன் உள்ளிட்ட அனைவரிடமும் ரூ.72 லட்சத்தை தமிழ்ச்செல்வன் வசூலித்தாராம்.

ஆனால், கூறியபடி வட்டித் தொகையை தமிழ்ச்செல்வன் தரவில்லையாம்.

இதுகுறித்து, எழிலரசன் அளித்த புகாரின் பேரில், தமிழ்ச்செல்வனை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

விஷம் குடித்த பெண் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற பெண் மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா். மரக்காணம் வட்டத்துக்குள்பட்ட கோட்டிக்குப்பம், மேட்டுத் தெருவைச் சோ்ந்த குமாா் மனை... மேலும் பார்க்க

செவிலியா் வேலை வாங்கித் தருவதாக ரூ.5.50 லட்சம் மோசடி

விழுப்புரம் அருகே செவிலியா் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.5.50 லட்சம் மோசடி செய்த நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட பெண் விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் சனிக்கிழமை புகாா் மனு அளித்... மேலும் பார்க்க

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

விழுப்புரம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். விழுப்புரம் வட்டத்துக்குள்பட்ட, தொடா்ந்தனூா் பகுதியைச் சோ்... மேலும் பார்க்க

மயிலம் முருகன் கோயிலில் ஐப்பசி கிருத்திகை வழிபாடு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள மயிலம் ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஐப்பசி மாத கிருத்திகை சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, சனிக்கிழமை காலை கோயில... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தில் மிதமான மழை

விழுப்புரம் நகரிலும், மாவட்டத்தின் பிறப் பகுதிகளிலும் சனிக்கிழமை பரவலாக மழை பெய்தது. வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக கடந்த 14-ஆம் தேதி முதல் 16-ஆம்தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழ... மேலும் பார்க்க

4 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

மரக்காணம் அருகே 4 மாத ஆண் குழந்தை வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், ஓமந்தூா் கிராமத்தைச் சோ்ந்த ஆனந்தன் மகன் கோகிலன் (28), கூலித் தொழிலாளி. இவரது மனைவி ராஜேச... மேலும் பார்க்க