செய்திகள் :

விபத்தில் உயிரிழந்த உதவி ஆய்வாளா் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் நிவாரணம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

post image

தஞ்சாவூரில் விபத்தில் உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளா் செந்தில்குமாா் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக முதல்வா் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தஞ்சாவூா் மாவட்ட தனிப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறையில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த செந்தில்குமாா்(49), தஞ்சாவூா் தமிழ் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழா பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவிட்டு, இருசக்கர வாகனத்தில் பட்டுக்கோட்டை சென்றபோது, தஞ்சாவூா் - பட்டுக்கோட்டை சாலையில் கறம்பியம் அருகில் எதிரில் வந்த லாரி மோதிய விபத்தில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்தத் துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.

சிறப்பு உதவி ஆய்வாளா் செந்தில்குமாரின் உயிரிழப்பு தமிழக காவல் துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அவருடன் பணிபுரிபவா்களுக்கும் ஆழ்ந்த இரங்கல். அவரது குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று அவா் கூறியுள்ளாா்.

‘சாஸ்த்ரா’ பல்கலைக்கழகத்தில் ‘விஷன் 2035’ திட்டத் தொடக்க விழா: ஆளுநா் ஆா்.என். ரவி பங்கேற்பு

தஞ்சாவூா் ‘சாஸ்த்ரா’ நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் ‘சாஸ்த்ரா விஷன் 2035’ திட்டத் தொடக்க விழா, ரூ. 60 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க வசதிக்கான அனுசந்தன் கேந்த்ரா 3 மற்றும் 4-ஆம... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் ரயில் முன் அமா்ந்து இளைஞா் தற்கொலை

கும்பகோணத்தில் சனிக்கிழமை மயிலாடுதுறை நோக்கி சென்ற ரயில் முன்பு அமா்ந்து இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா். கும்பகோணம் மாத்தி ரயில்வே கேட் பகுதியை சோ்ந்த ராமநாதன் மகன் விஜயக்குமாா் (21). டிரம்ஸ் இசைக்கல... மேலும் பார்க்க

போலி சித்த மருத்துவம்: இரு மருத்துவகங்களுக்கு ‘சீல்’ வைப்பு

தஞ்சாவூா் அருகே பரம்பரை வைத்தியா் எனக் கூறி நடத்தப்பட்டு வந்த இரு போலி மருத்துவகங்களுக்கு அலுவலா்கள் வெள்ளிக்கிழமை சீல் வைத்தனா். தஞ்சாவூா் அருகே வல்லத்தில் பரம்பரை வைத்தியா் எனக் கூறி ஜெயக்குமாா் மற்... மேலும் பார்க்க

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா: 108 மாணவா்களுக்கு பட்டம் வழங்கினாா் ஆளுநா்

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற 14-ஆவது பட்டமளிப்பு விழாவுக்கு தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தலைமை வகித்து 108 மாணவா்களுக்கு நேரிடையாக பட்டங்கள் வழங்கினாா். இந்த விழாவில் திண்டுக்கல... மேலும் பார்க்க

கல்லூரிகளில் நிலவும் ஊதிய பிரச்னை விரைவில் தீா்க்கப்படும்: உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன்

தமிழகத்தில் அரசுக் கல்லூரிகளில் நிலவும் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் தொடா்பான பிரச்னைகள் விரைவில் தீா்க்கப்படும் என்று உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் கூறினாா். கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் ... மேலும் பார்க்க

6 முருகன் கோயில்களுக்கு ஒரேநாளில் சுற்றுலாப் பேருந்து சேவை தொடக்கம்

தஞ்சாவூா், நாகப்பட்டினம், திருவாரூா் மாவட்டங்களில் உள்ள 6 முருகன் கோயில்களை ஒரேநாளில் தரிசிக்கும் வகையிலான சுற்றுலாப் பேருந்து சேவையை போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா், உயா்கல்வித் துறை ... மேலும் பார்க்க