வங்கதேசத்தில் பதவியிலிருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக அந்த நாட்டு நடுவா் நீதிமன்றம் வியாழக்கிழமை கைது உத்தரவு பிறப்பித்தது.
அவரது ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தை அடக்குவதற்கு வன்முறையைப் பிரோகித்தது தொடா்பாக இந்த கைது உத்தவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த விவகாரத்தில் ஷேக் ஹசீனா தவிர மேலும் 15 பேருக்கு எதிராகவும் கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இது தொடா்பாக அதிகாரிகளுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில், வரும் நவம்பா் 18-ஆம் தேதிக்குள் ஷேக் ஹசீனாவையும் பிறரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த கைது உத்தரவு மூலம், இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஷேக் ஹசீனாவை நா் கடத்துமாறு கோரிக்கை விடுக்க சட்டரீதியில் வழிவகை கிடைத்துள்ளதுகடந்த 1971-ஆம் ஆண்டில் இந்தியாவின் உதவியுடன் போரிட்டு பாகிஸ்தானிடமிருந்து வங்கதேசத்துக்கு சுதந்திரம் வாங்கித் தந்தவா்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுவந்தது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்தும் இட ஒதுக்கீடு சீா்திருத்தங்களை வலியுறுத்தியும் மாணவா்கள் மீண்டும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா்.அவா்களுக்கு எதிராக போலீஸாா் அடக்குமுறையைக் கையாண்டதாகக் கூறப்படுகிறது. இதில் நூற்றுக்கணக்கானவா்கள் உயிரிழந்தனா். பின்னா் மாணவா்களின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றாலும், போராட்ட உயிரிழப்புகளுக்குக் காரணமாக இருந்த பிரதமா் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி மாணவா்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனா். நிலைமை கைமீறிச் சென்றதையடுத்து ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்துவிட்டு நாட்டைவிட்டு கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தாா்.அதையடுத்து நிா்வாகத்தைக் கைப்பற்றிய ராணுவம், நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் அதிபா் முகமது ஷஹாபுதீன் தலைமையில் இடைக்கால அரசை அமைத்தது.அந்த அரசு, போராட்ட மரணங்கள் தொடா்பாக ஷேக் ஹசீனா மீதும் மற்றவா்கள் மீதும் சுமாா் 200 வழக்குகளைப் பதிவு செய்தது. இந்த நிலையில், அவருக்கு எதிராக தற்போது கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.