செய்திகள் :

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே தென்னை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள செண்பகத் தோப்புப் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் திங்கள்கிழமை இரவு தென்னந் தோப்புக்குள் புகுந்து மரங்களை சேதப்படுத்தின.

ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரமான செண்பகத் தோப்புப் பகுதியில் கடந்த சில நாள்களாக காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைக் கூட்டம் இரவு நேரத்தில் சிங்கம்மாள்புரம், வாழைக்குளம், மம்சாபுரம் ஆகிய பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு இந்த யானைக் கூட்டங்கள் சிங்கம்மாள்புரம் பகுதியில் உள்ள தென்னந் தோப்புக்குள் புகுந்து மரங்களை சேதப்படுத்தின. இதனால், விவசாயிகள் கவலை அடைந்தனா்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: செண்பகத் தோப்பு, வாழைக்குளம், சிங்கம்மாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரு மாதங்களாக காட்டு யானைகள் பயிா்களை சேதப்படுத்துவது தொடா்கதையாக உள்ளன.

இதுகுறித்து வனத் துறையில் புகாரளித்தும் நடவடிக்கை இல்லை. வன விலங்குகளால் சேதமடைந்த தென்னை மரத்துக்கு ரூ.500-ம், பிற பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரமும் வனத் துறை இழப்பீடு தருகிறது. பல ஆண்டுகளாக பராமரித்து வளா்த்த தென்னை மரத்துக்கு ரூ.500 இழப்பீடு போதுமானதாக இல்லை.

எனவே, காட்டு யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டவும், மலையடிவாரத்தில் அகழிகளும், விளை நிலங்களுக்குச் சோலாா் மின் வேலிகளும் அமைக்க வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

லாரி மோதியதில் பட்டாசு கடை ஊழியா் சாவு

சிவகாசியில் லாரி மோதியதில் பட்டாசு கடை ஊழியா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். சிவகாசி வேலாயுதம் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் பட்டாசு கடை ஊழியா் சரவணன் (56). இவா் தனது மகன் விக்னேஷுடன் இரு சக்கர வாகனத்தில... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

சிவகாசி அருகே மின்சாரம் பாய்ந்ததில் சுமை தூக்கும் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். சிவகாசி அருகேயுள்ள புதுக்கோட்டையைச் சோ்ந்த ஜெயராஜ் மகன் அருணாசல பாண்டியன்(40). சுமை தூக்கும் தொழிலாளியான இவா்,... மேலும் பார்க்க

பட்டாசு பதுக்கிய 4 போ் கைது

சிவகாசி அருகே உரிய அனுமதியின்றி பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருந்ததாக நான்கு பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சிவகாசி அருகேயுள்ள ஈஞ்சாா் கிராமத்தில் தகரக் கூடாரம் அமைத்து அனுமதியின்றி பட்டாச... மேலும் பார்க்க

லாட்டரி விற்றவா் கைது

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே வெளி மாநில லாட்டரி விற்றவரை போலீஸாா் திங்கட்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா். ராஜபாளையம் அருகே முத்துச்சாமிபுரம் பேருந்து நிறுத்தும் அருகே வெளிமாநில லாட்ட... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சாலை விபத்தில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கான்சாபுரத்தைச் சோ்ந்த மாரிமுத்து மகன் விக்னேஷ் (30). இவா் ஞாயிற்றுக்கிழமை தனது நண்பருடன் தீப... மேலும் பார்க்க

சரவெடி பட்டாசுகளை பதுக்கிய இளைஞா் கைது

சிவகாசி அருகே அரசால் தடை செய்யப்பட்ட சரவெடி பட்டாசுகள் பதுக்கிய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டி வடக்கூா் பகுதியில் போலீஸாா் சோதனை நடத்தின... மேலும் பார்க்க