செய்திகள் :

ஹோலி கொண்டாடிய மாணவர்களுக்கு நோட்டீஸ்: சர்ச்சையில் பாகிஸ்தான் பல்கலைக்கழகம்

post image

கராச்சி: பாகிஸ்தானில் உள்ள தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஹிந்து பண்டிகையான ஹோலியைக் கொண்டாடிய மாணவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் கராச்சி நகரில் தனியாருக்குச் சொந்தமான தாவூத் பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் மாணவர்களில் சிலர் அண்மையில் பல்கலைக்கழக வளாகத்தில் ஹிந்து பண்டிகையான ஹோலியைக் கொண்டாடினர். கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலோர் ஹிந்துக்களாவர்.

ஹோலி கொண்டாடியது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கோரி அவர்களுக்கு இந்த பல்கலைக்கழக நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட நோட்டீஸின் பிரதியை முன்னாள் எம்.பி.யான லால் மால்ஹி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில் 'பாகிஸ்தானில் சிறுபான்மை மதங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் சடங்குகளை மேற்கொள்வது குற்றமாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. ஹோலி பண்டிகையைக் கொண்டாடுவதும் தற்போது குற்றமாகியுள்ளதா? ஒரு பல்கலைக்கழகத்தில் ஹோலி கொண்டாடுவது தேசத் துரோக நடவடிக்கையாக கருதப்படுகிறதா?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தச் சூழலில் இந்த விவகாரம் குறித்து தாவூத் பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது. ஹோலி கொண்டாடிய மாணவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக வந்த தகவல்களையும் பல்கலை. நிர்வாகம் மறுத்துள்ளது. இது தொடர்பாக பல்கலை. நிர்வாகம் தெரிவிக்கையில் 'நிர்வாகத்தின் ஒப்புதலைப் பெறாமல் பல்கலைக்கழக வளாகத்தில் நிகழ்ச்சி நடத்தியது தொடர்பாகவே மாணவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. அந்த நோட்டீஸுக்கு மாணவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்' என்று கூறியுள்ளது.

பாகிஸ்தானில் கடந்த ஆண்டு ஹோலி கொண்டாட்டத்தின்போது சில மாகாணங்களில் ஹிந்து மதத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் இதேபோன்ற பிரச்னையை எதிர்கொண்டனர். எனினும், அந்தப் பிரச்னை பின்னர் ஓய்ந்துவிட்டது.

பாகிஸ்தானில் பல்கலைக்கழக வளாகங்களில் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த மாணவர்கள் உள்பட யாரும் கலாசார கொண்டாட்டங்களை நடத்துவதை முஸ்லிம் கட்சிகளைச் சேர்ந்த மாணவர் அமைப்புகள் எதிர்த்து வருவது வழக்கமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜெர்மனி தேர்தல்: ஆளுங்கட்சி படுதோல்வி..!

பெர்லின் : ஜெர்மனி பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சி படுதோல்வியடைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை(பிப். 23) நடைபெற்று முடிந்துள்ள தேர்தலுக்கு பிந்தைய முடிவுகளின்படி, ஜெர்மனியின் தற்போதைய பிரதமர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் தோ... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடம்: சிறுநீரக பாதிப்பால் அவதி!

ரோம் : போப் பிரான்சிஸ் உடல்நிலை நிமோனியா தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக வாடிகன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.போப் பிரான்சிஸ்(88) முச்சுக் குழாய்... மேலும் பார்க்க

அமெரிக்கா: கடந்த வார பணி அறிக்கையைச் சமா்ப்பிக்க அரசுப் பணியாளா்களுக்கு எலான் மஸ்க் கெடு

அமெரிக்க அரசின் பல்வேறு துறைப் பணியாளா்கள், தங்களின் கடந்த வார பணி அறிக்கையை 48 மணி நேரத்துக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்று அந்நாட்டின் அரசு அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ) தலைவா் எலான் மஸ... மேலும் பார்க்க

டிரம்ப், மோடி பேசினால் ஜனநாயகத்துக்கு ஆபத்து என்பதா? இடதுசாரிகளுக்கு இத்தாலி பிரதமா் மெலோனி கண்டனம்

‘அமெரிக்க அதிபா் டிரம்ப், பிரதமா் மோடி அல்லது என்னைப் போன்ற தலைவா்கள் பேசினால் மற்றும் இணைந்து செயல்பட்டால் ஜனநாயகத்துக்கு ஆபத்து என்று விமா்சிப்பவா்கள், இதேபோன்ற ஒத்துழைப்புக்காக இடதுசாரி தலைவா்களைப... மேலும் பார்க்க

பிரான்ஸ்: கத்திக்குத்தில் ஒருவா் உயிரிழப்பு; 3 காவலா்கள் படுகாயம்- பயங்கரவாதிகள் சதியா?

கிழக்கு பிரான்ஸில் உள்ள சந்தையில் அல்ஜீரியாவைச் சோ்ந்த நபா் கத்தியால் குத்தியதில் ஒருவா் உயிரிழந்தாா். 3 காவலா்கள் காயமடைந்தனா். ஜொ்மனி மற்றும் ஸ்விட்சா்லாந்து எல்லைகளில் அமைந்துள்ள முல்ஹவுஸ் என்ற ந... மேலும் பார்க்க

உக்ரைனில் அமைதி நிலவ பதவி விலகவும் தயாா்: அதிபா் ஸெலென்ஸ்கி

உக்ரைனில் அமைதி ஏற்படுவதுடன், நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் சோ்க்கப்படுமானால் அதிபா் பதவியை ராஜிநாமா செய்யத் தயாா் என்று அந்நாட்டு அதிபா் வொலொதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்தாா். நேட்டோ ராணுவ கூட்டமைப்பில்... மேலும் பார்க்க