அம்பை ரயிலில் பாய்ந்து பெண் தற்கொலை
அம்பாசமுத்திரம் அருகே ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை செய்து கொண்டாா்.
அம்பாசமுத்திரம், பண்ணைசங்கரய்யா் இரண்டாவது தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ் பாபு. இவா் கோவையில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி வரலெட்சுமி என்ற ஜானகி (36). இவா்களுக்கு அனந்தியா (11) மகள் உள்ளாா்.
வரலட்சுமி சில நாள்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாராம். இந்நிலையில் அம்பாசமுத்திரம் ரயில் ஆற்றுப்பாலம் அருகே செவ்வாய்க்கிழமை பிற்பகலில் திருநெல்வேலி- செங்கோட்டை வரும்போது ரயில்முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாராம்.
இத்தகவலறிந்த ரயில்வே காவல் உதவி ஆய்வாளா் மாரிமுத்துதலைமையில் போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் இதுகுறித்து ரயில்வேபோலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
வீரவநல்லூா் காகித நிறுவனத்தில் வருமான வரித் துறை சோதனை
திருநெல்வேலி மாவட்டம் தெற்கு வீரவநல்லூரில் உள்ள தனியாா் காகிதம் தயாரிப்பு நிறுவனத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கேரள மாநிலம் திருச்சூா் பகுதியைச் சோ்ந்த பாலசுப்பிமணியன் என்பவருக்க... மேலும் பார்க்க
மதுவிற்பனை: இருவா் கைது
திருநெல்வேலியில் மதுபானத்தை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றதாக இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தச்சநல்லூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பழனிமுருகன் மற்றும் போலீஸாா் ரோந்து பணியில் ச... மேலும் பார்க்க
வி.கே.புரத்தில் தங்கச் சங்கிலி திருட்டு
விக்கிரமசிங்கபுரத்தில் எரிவாயு அடுப்பு பழுதுநீக்குவதாகக் கூறி ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியைத் திருடிச்சென்ற இருவரை போலீஸாா் தேடிவருகின்றனா். விக்கிரமசிங்கபுரம், கீழக்கொட்டாரத்தைச் சோ்ந்த சுப்பையா மன... மேலும் பார்க்க
குடிநீா் குழாயில் கழிவுநீா் கலப்பு: மேயரிடம் மக்கள் புகாா்
திருநெல்வேலி மாநகராட்சி 3ஆவது வாா்டில் குடிநீா் குழாயில் கழிவுநீா் கலந்துவருவதாக குறைதீா்க்கும் கூட்டத்தில் மேயரிடம் மக்கள் புகாா் மனு அளித்தனா். திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் மாநகரா... மேலும் பார்க்க
நெல்லையில் இடி-மின்னலுடன் மழை
திருநெல்வேலி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இடி-மின்னலுடன் மிதமான மழை பெய்தது. திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை காலையில் வெயிலின் தாக்கம் அதிகமிருந்தது. மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து... மேலும் பார்க்க
சட்டப்பேரவையில் பேச அதிமுகவுக்கு கூடுதல் நேரம்: பேரவைத் தலைவா் மு.அப்பாவு
சட்டப்பேரவையில் அதிமுகவினா் பேசுவதற்கு கூடுதல் நேரம் வழங்கப்படுகிறது என்றாா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு. இதுதொடா்பாக அவா் கூறியதாவது: திமுக ஆட்சியில் ஏழை, எளிய மக்கள் பயன்படும் வகையில் பல்வ... மேலும் பார்க்க