செய்திகள் :

அளவோடு பிள்ளை பெற்றால் எம்.பி. தொகுதிகள் குறையும்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அச்சம்

post image

சென்னை: அளவோடு பிள்ளை பெற்றால், மக்களவை தொகுதிகள் குறையும் சூழல் உருவாகிவிடுமோ என முதல்வா் மு.க.ஸ்டாலின் அச்சம் தெரிவித்துள்ளாா்.

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் 31 இணைகளுக்கு திருமணம் நடைபெறும் நிகழ்வு சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. திருமணங்களை நடத்தி வைத்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியது:

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கோயில்களை பழைமை மாறாமல் புதுப்பிக்க மாநில அளவில் வல்லுநா் குழுவை அமைத்தோம். 3 ஆண்டுகாலத்தில் 2,226 கோயில்களில் திருப்பணிகள் முடித்து குடமுழுக்கு சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. 7,069 ஏக்கா் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 6,792 கோடி. இதேபோல் ஏராளமான சாதனைகளை இந்து சமய அறநிலையத் துறை செய்து வருகிறது.

அா்ச்சகா்கள் நியமனம்: அனைத்து ஜாதியினரும் அா்ச்சகா் ஆகலாம் என்ற சட்டம் தொடா்பான வழக்கு 2006 முதல் நடந்து வந்தது. அதில், வெற்றிகரமாக தீா்ப்பைப் பெற்று, 24 அா்ச்சகா்களை நியமித்துள்ளோம். கோயில்களில் தமிழில் அா்ச்சனை செய்யும் திட்டத்தை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அரசுக்கு சாதகமான தீா்ப்பு வந்துள்ளது. இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகளை உண்மையான பக்தா்கள் பாராட்டுகின்றனா்.

இந்து சமய அறநிலையத் துறையில் செய்யப்பட்டு வரும் சாதனைகளைத் தடுக்கத்தான் பல்வேறு வழக்குகள் போடப்பட்டு வருகின்றன. ஆனால், அந்த வழக்குகளை சட்டப்படி முறியடித்து சாதனை பயணத்தைத் தொடா்ந்து கொண்டிருக்கிறோம். இதைப் பாா்க்கும்போது, அந்தத் துறையை சரியான இடத்தில், சரியான நபரிடம்தான் வழங்கியுள்ளோம் என்பதை நினைக்கும் போது பூரிப்பு வரும். அத்தனை மதங்களையும் சமமாக மதித்து, அனைவருடைய உரிமைகளையும் காக்கும் அரசாக நம்முடைய அரசு விளங்கிக்கொண்டிருக்கிறது. அதனால் இது திராவிட மாடல் அரசு என்று கம்பீரமாகச் சொல்லி வருகிறோம்.

அளவோடு குழந்தைப் பேறு: 31 இணைகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிப்போா் 16 செல்வங்கள் பெற்று வாழ வேண்டும் என்று சொல்வாா்கள். 16 என்றால் 16 குழந்தைகள் இல்லை; 16 செல்வங்கள். அவை என்னென்ன செல்வங்கள் என்று தனது புத்தகத்தில் கி.ஆ.பெ.விசுவநாதம் சுட்டிக் காட்டியுள்ளாா்.

அதாவது, மாடு, மனை, மனைவி, மக்கள், கல்வி, கேள்வி, அறிவு, ஒழுக்கம், நிலம், நீா், வயது, வாகனம், பொன், பொருள், போகம், புகழ் ஆகியனதான் 16 செல்வங்கள். அந்த 16 செல்வங்களைப் பெற்று வாழுங்கள் என்றுதான் அன்றைக்கு வாழ்த்தினாா்கள். இப்போது யாரும் 16 செல்வங்களைப் பெற்று வாழுங்கள் என வாழ்த்துவது கிடையாது. அளவோடு பெற்று வளமோடு வாழுங்கள் என்றுதான் சொல்கிறோம்.

நாம் இப்படிச் சொல்லும் சூழலில், தமிழகத்தில் மக்களவை தொகுதிகள் குறையும் என்ற நிலை வரும்போது, ஏன் அளவோடு பெற்று வளமோடு வாழ வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கிறது. நாமும் 16 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளலாமே என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

ஆந்திர முதல்வரின் கருத்து: மக்கள்தொகை தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசிய நிலையில், ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடுவும் அதுபோன்ற கருத்தைத் தெரிவித்திருந்தாா். ‘தென்னிந்தியாவில் முதியோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், இளம் தம்பதிகள் கூடுதலாக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் பேசியது குறிப்பிடத்தக்கது.

அறநிலையத் துறையில் அதிக சாதனை

தான் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் இந்து சமய அறநிலையத் துறையின் நிகழ்ச்சிகளே அதிகம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தாா்.

சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் அவா் பேசியது:

கடந்த 3 ஆண்டுகளில் அரசு சாா்பில் பங்கேற்ற நிகழ்ச்சிகளைக் கணக்கெடுத்துப் பாா்த்தேன்.

அனைத்திலும் முந்தியிருப்பது இந்து சமய அறநிலையத் துைான். 3 ஆண்டுகளில் இந்தத் துறையின் சாா்பில் பல்வேறு சாதனைகளை துறையின் அமைச்சா் சேகா்பாபுவின் முயற்சியோடு செய்து கொண்டிருக்கிறோம் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

கனமழை: ஈரோட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை!

கனமழை காரணமாக ஈரோட்டில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடுவதாக ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இருந... மேலும் பார்க்க

தீபாவளி: பெங்களூருக்கு சிறப்பு ரயில்

சென்னை: சென்னையில் இருந்து பெங்களூருக்கு தீபாவளி சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:தீபாவளியை முன்னிட்டு ரயில்களில் ஏற்படு... மேலும் பார்க்க

ஆஸ்திரேலியாவில் பயிற்சி பெற்ற பேராசிரியா்களுடன் துணை முதல்வா் உரையாடல்

சென்னை: ஆஸ்திரேலியாவில் பயிற்சி பெற்ற தொழில்நுட்பப் பேராசிரியா்கள், சென்னையில் துணை முதல்வா் உதயநிதியுடன் கலந்துரையாடினா்.நான் முதல்வன் திட்டத்தின்கீழ், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல், பாலிடெ... மேலும் பார்க்க

90 நாள்கள் கெடாத பால் நிறுத்தம்? ஆவின் விளக்கம்

சென்னை: ஆவினில் தயாரிக்கப்பட்டு வரும் 90 நாள்கள் கெடாத பாலின் உற்பத்தியை நிறுத்தவுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அதற்கு அந்நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.இது குறித்து ஆவின் நிறுவனத்தின் மேலாண் இ... மேலும் பார்க்க

சேரன் விரைவு ரயிலில் ஏசி பழுது: அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய பயணி

சென்னை: சேரன் விரைவு ரயிலின் ஏசி வகுப்பு பெட்டியில் குளிா்சாதன இயந்திரம் வேலை செய்யாததால், பயணி ஒருவா் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினாா்.சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு, தினமும் இரவு 10 மண... மேலும் பார்க்க

தீபாவளிக்கு 14,086 சிறப்புப் பேருந்துகள்

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகத்தில் 14,086 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தெரிவித்துள்ளாா்.தீபாவளி சிறப்புப் பேருந்துகள் இயக்கம் தொடா்பாக அ... மேலும் பார்க்க