செய்திகள் :

ஆசியான் மாநாட்டில் கலந்துகொள்ளாத மோடி; ட்ரம்ப்பும், வர்த்தக பேச்சுவார்த்தையும் காரணமா?

post image

வரும் 26 - 28 தேதிகளில், மலேசியாவில் 47-வது ஆசியான் உச்சி மாநாடு நடக்க உள்ளது.

இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரேசில் அதிபர் லூலா உள்ளிட்ட பல உலக தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இதில் இந்திய பிரதமர் மோடியும் கலந்து கொள்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கு காரணம், 2014-ம் ஆண்டு, இந்திய பிரதமராக மோடி பதவியேற்றதில் இருந்து 2022-ம் ஆண்டு மட்டும் தான் ஆசியான் உச்சி மாநாட்டில் மோடி கலந்து கொள்ளாமல் இருந்திருக்கிறார்.

மற்றப்படி, ஒவ்வொரு ஆண்டுமே தவறாமல் ஆசியான் மாநாட்டில் கலந்துகொள்வார்‌ மோடி.

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

கலந்து கொள்ளமாட்டார்

ஆனால், இந்த ஆண்டு மோடி இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளமாட்டார் என்பதை உறுதி செய்திருக்கிறார் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம்.

இது குறித்த அவரது சமூக வலைதள பதிவில், 'இந்தியாவில் தீபாவளி பண்டிகை இன்னும் கொண்டாடப்பட்டு வருவதால் ஆன்லைனில் கலந்து கொள்வதாக மோடி தெரிவித்துள்ளார்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்னொரு பக்கம், பீகார் தேர்தல் பிரசாரமும் காரணமாக கூறப்படுகிறது.

ட்ரம்பே மிக முக்கிய காரணம்

இவை அனைத்தையும் தாண்டி, ஆசியான் மாநாட்டில் மோடி கலந்து கொள்ளாததற்கு ட்ரம்ப் ஒரு முக்கிய காரணம் என்றே கூறலாம்.

இந்தியா - அமெரிக்கா இடையை வர்த்தக பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.

இந்தப் பேச்சுவார்த்தை முடிவதற்குள்‌ ட்ரம்ப் மோடியை சந்தித்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்.

ஆனால், இந்தியாவின் வழக்கப்படி, ஒப்பந்தத்தை எட்டியப்பின் தான், குறிப்பிட்ட நாட்டு தலைவரை சந்திப்பார் இந்திய தலைவர்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

ட்ரம்ப் எந்த வழக்கத்திற்குள்ளும் வரமாட்டார் என்று அனைவருக்கும் தெரியும். வர்த்தக பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும் சூழலில் ட்ரம்ப் - மோடி சந்திப்பு ஒருவேளை கசப்பில் முடிந்தால், அது பேச்சுவார்த்தையைப் பாதிக்கும், இந்திய வர்த்தகத்தைப் பாதிக்கும் என இந்திய தரப்பு கருதுகிறது.

ஆசியான் உச்சி மாநாட்டிற்கு சென்றால், மோடி - ட்ரம்ப் தனிப்பட்ட சந்திப்பு நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இதன் காரணமாகவே, இந்த உச்சி மாநாட்டில் நேரடியாக கலந்துகொள்வதை மோடி தவிர்க்கிறார் என்று மிக முக்கியமாக கூறப்படுகிறது.

அவருக்கு பதிலாக, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொள்வார் என்றும் கூறப்படுகிறது.

ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு‌ அமெரிக்கா தடை: பாதிக்கும் ரிலையன்ஸ்; இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

ரஷ்ய எண்ணெய் இறக்குமதி'இனி இந்தியா மெல்ல மெல்ல ரஷ்ய எண்ணெய் வாங்குவதைத் குறைக்கும்' - இது கடந்த இரண்டு - மூன்று நாள்களில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திரும்ப திரும்ப கூறிக் கொண்டிருக்கும் ஒன்று.இன்னொரு பக... மேலும் பார்க்க

வம்பிழுத்த ‘இன்பமான’ எம்.பி; வறுத்தெடுத்த தலைமை டு இடத்தை மாற்றிய கதைசொல்லியார்! | கழுகார் அப்டேட்ஸ்

கடுப்பில் சூரியக் கட்சி நிர்வாகிகள்!சுயநலத்தால் தொகுதியைத் தாரைவார்க்கும் ‘சாமி’ சீனியர்..?தேர்தல் நேர உள்ளடிகள், பின்னலாடை மாவட்டச் சூரியக் கட்சிக்குள் தற்போதே சூட்டைக் கிளப்பியிருக்கிறது. அந்த மாவட்... மேலும் பார்க்க

`இப்போதுகூட வேகமாக நடக்கவில்லை'- கொள்முதல் அலட்சியம்; தேங்கிக் கிடக்கும் நெல்; துயரில் விவசாயிகள்

தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சுமார் 6 லட்சம் ஏக்கர் பரப்பில் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்துள்ளனர். குறித்த நேரத்தில் மேட்டூர் திறக்கப்பட்டது, போதுமான அளவில் விவசாயத்திற்... மேலும் பார்க்க

இந்திய-ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தம் இழுபறி; பியூஷ் கோயல் பயணம் வெற்றியைத் தருமா?

இந்திய மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது... பதினான்காவது கட்ட பேச்சுவார்த்தை முடிந்தும், இன்னும் அதில் இழுபறி நீடித்து வருகிறது.என்ன பேச்சுவார்த்தை?இந... மேலும் பார்க்க

Bihar: தொகுதி பங்கீடு சிக்கல் டு முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி வரை - பீகார் தேர்தல் அப்டேட்ஸ்!

பீகார் தேர்தல்: பீகார் சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் இரண்டு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. முதற்கட்டத் தேர்தல் நவம்பர் 06-ம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தல் நவம்பர் 11-ம் தேதியும் நடைபெறும். வாக்கு... மேலும் பார்க்க

``விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதில் தாமதம், முறைகேடு'' - திமுக-வுக்கு சீமானின் 9 கேள்விகள்

மழையில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள்தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்துவரும் கனமழையால் டெல்டா மாவட்ட நெல் விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.ஒருபக்கம் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்க... மேலும் பார்க்க