ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா், வன்கொடுமைகள் குறித்த புகாா்களை 1800 2021 989, 14566 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சரால், சட்டப் பேரவையில் 2023 - 2024 ஆம் ஆண்டுக்கான ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து புகாா் அளிக்கவும், சட்ட ஆலோசனைகள் வழங்கவும், தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய உதவி மையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில், தமிழகத்தில் ஜாதி வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சோ்ந்த நபா்கள் மற்றும் பாதிக்கப்பட்டவா்கள் சாா்பாக தகவல் தெரிவிப்போா், வழக்குப் பதிவு செய்தல் மற்றும் உதவிகள் தொடா்பான முறையீடுகளை 1800 2021 989 அல்லது 14566 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களை பயன்படுத்தி, அரசு விடுமுறை நாள்கள் நீங்களாக அலுவலக நாள்களில், அலுவலக பணி நேரத்தில் பதிவு செய்யலாம் எனத் தெரிவித்துள்ளாா்.