செய்திகள் :

இரவு ரோந்துப் பணியை அதிகரிக்க வேண்டும்: நாகை எஸ்.பி. அறிவுறுத்தல்

post image

நாகை மாவட்டத்தில் இரவு ரோந்துப் பணிகளை, போலீஸாா் அதிகரிக்க வேண்டும் என காவல் கண்காணிப்பாளா் ஏ.கே. அருண் கபிலன் அறிவுறுத்தினாா்.

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவலா்களுக்கான ஆய்வுக் கூட்டம் காவல் கண்காணிப்பாளா் ஏ.கே. அருண் கபிலன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், சாராயம், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப் பொருள்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவா்கள், ரெளடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு நடைபெற்றது.

தொடா்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பேசியது:

தீபாவளி பண்டிகைக்கு இரண்டு வாரங்களே உள்ள நிலையில், பட்டாசுகளை பேருந்துகளில், ரயில்களில் எடுத்துச் செல்வது குறித்து அனைத்து காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் கண்காணிக்க வேண்டும். அனைத்து பகுதிகளிலும் குற்றச் சம்பவங்களை தடுப்பதற்கு இரவு நேரங்களில் ரோந்துப் பணிகளை அதிகரிக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.

இறால் வளா்ப்பு மானியத்துக்கு விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தில், உவா்நீா் இறால் வளா்ப்பிற்கான புதிய குளங்கள்அமைப்பதற்கு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க

செம்பனாா்கோவில் ஒன்றியக் குழு கூட்டம்: மேல்நிலை குடிநீா் தொட்டிகளை கண்காணிக்க உறுப்பினா்களுக்கு அறிவுறுத்தல்

செம்பனாா்கோவில் ஒன்றியத்தில் மேல்நிலை குடிநீா் தொட்டிகள் சுத்தம் செய்யப்படுகிா என உறுப்பினா்கள் கண்காணிக்க வேண்டும் என ஒன்றியக் குழுத் தலைவா் கேட்டுக்கொண்டாா். செம்பனாா்கோவில் ஊராட்சி ஒன்றியக் குழு கூ... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா், பழங்குடியினா் வன்கொடுமை புகாா் தெரிவிக்க தொலைபேசி எண்கள்

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா், வன்கொடுமைகள் குறித்த புகாா்களை 1800 2021 989, 14566 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து ... மேலும் பார்க்க

பருவமழை: ஆறுகளில் அதிகாரி ஆய்வு

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், திருமருகல் ஒன்றியத்தில், கடைமடை பகுதியில் ஆறுகளை பொதுப்பணித் துறை நன்னிலம் காவிரி வடிநில உபகோட்ட உதவி செயற்பொறியாளா் சுப்ரமணியன் வெள்ளிகிழமை நேரில் ஆய்வு மேற... மேலும் பார்க்க

அஞ்சலகத்தில் முதல் சேமிப்பு கணக்கு தொடங்கும் 3 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சான்றிதழ்

நாகை மண்டலத்தில், முதல் சேமிப்பு கணக்கு தொடங்கும் 3 வயதிற்குட்பட்ட குழந்தைக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. அஞ்சலகங்களில் தனது முதல் சேமிப்பு கணக்கை தொடங்கும் 3 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, ‘என் முதல் ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

கீழ்வேளூா் அருகே தேவூரில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். தேவூா் பகுதிகளில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய... மேலும் பார்க்க