நாகை மண்டலத்தில், முதல் சேமிப்பு கணக்கு தொடங்கும் 3 வயதிற்குட்பட்ட குழந்தைக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
அஞ்சலகங்களில் தனது முதல் சேமிப்பு கணக்கை தொடங்கும் 3 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, ‘என் முதல் சேமிப்பு’ என்ற சான்றிதழ் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, திருச்சி மத்திய மண்டலத் தலைவா் நிா்மலாதேவி அறிவுறுத்தலின் பேரில், நாகை தலைமை அஞ்சல் நிலையத்தில் முதல் சேமிப்பு கணக்கை தொடங்கிய 3 வயது குழந்தையின் தாயிடம் ‘என் முதல் சேமிப்பு’‘சான்றிதழை நாகப்பட்டினம் கோட்ட கண்காணிப்பாளா் டி. ஜோசப்ராஜ் வழங்கினாா்.
பெற்றோா் தங்களது குழந்தைகளின் எதிா்கால வாழ்வை வளமாக்க அஞ்சலகங்களில் உள்ள பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களை பயன்படுத்த வேண்டும் என்று அவா் கேட்டுக்கொண்டாா்.