செய்திகள் :

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய திடீர் தாக்குதல்; 3 கிரிக்கெட் வீரர்கள் பலி; என்ன நடந்தது?

post image

போர் நிறுத்தத்தை மீறி, ஆப்கானிஸ்தானில் 3 இடங்களில் குண்டுவீசி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதில், கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் உட்பட 10 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

கடந்த ஒரு வாரமாக, பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையே மோதல்களும், தாக்குதல்களும் நடந்து வருகின்றன. இதில் இரண்டு நாடுகளிலும் பாதிப்பும், உயிர்ச்சேதமும் ஏற்பட்டுள்ளன.

இதனால் இரு நாடுகளுக்கிடையே பெரும் போர் நடக்கக்கூடும் அபாயம் இருப்பதால், 48 மணி நேரம் போர் நிறுத்தம் செய்யப்பட்டு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த இரு நாடுகளும் முன்வர வேண்டும் எனக் கத்தார் நாடு அழைப்பு விடுத்திருந்தது.

ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் போர்
ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் போர்

ஆனால் இந்தப் போர் நிறுத்தத்தை மீறி, ஆப்கானிஸ்தானில் 3 இடங்களில் குண்டுவீசி தாக்குதல் நடத்தியிருக்கிறது பாகிஸ்தான். பாக்டிகா மாகாணத்தின் அர்குன் மற்றும் பர்மல் மாவட்டங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 10 பேர் உயிரிழந்திருக்கின்றனர், 12 பேர் பலத்த காயம் அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட 10 பேரில் கபீர், சிப்கத்துல்லா மற்றும் ஹாரூன் என மூன்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்களும் அடக்கம் என்பது தெரியவந்துள்ளது.

பாகிஸ்தான் தாக்குதலில் பலியான வீரர்கள்
பாகிஸ்தான் தாக்குதலில் பலியான வீரர்கள்

இந்நிலையில் இந்தப் பயங்கர சம்பவத்துக்கு எதிர்ப்பாக, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுடன் நடைபெறவிருந்த டி20 ட்ரை நேஷன் தொடரில் இருந்து விலகுவதாக ஆப்கானிஸ்தான் அறிவித்துள்ளது. இந்தச் சம்பவம், இரு நாடுகளுக்கிடையிலான கிரிக்கெட் உறவில் விரிசலை ஏற்படுத்தியிருக்கிறது.

தெலங்கானா முழுவதும் பந்த்; இட ஒதுக்கீடு கோரிக்கைக்காக ஒருங்கிணைந்த போராட்டம்; பின்னணி என்ன?

தெலங்கானா மாநிலத்தில் அக்டோபர் 18ம் தேதியான (இன்று) மாநிலம் முழுவதும் பந்த் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தெலங்கானா மாநில அரசு பிறபடுத்தப்பட்ட பிரிவினருக்கு (BC) 42% இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணை பிறப்பித்... மேலும் பார்க்க

டாலர் பிரச்னையால் திணறும் மாலத்தீவு; சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்; என்ன செய்யப்போகிறது இந்தியா?

மாலத்தீவு என்றாலே உடனே நினைவுக்கு வருவது சுற்றுலாதான். இந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவு, சுற்றுலாவுக்குப் பெயர்போன தீவு. ஆனால் கொரோனாவுக்குப் பிறகு மாலத்தீவின் சுற்றுலா வருமானம் மெல்ல சரிவை நோக்கித் ... மேலும் பார்க்க

Diwali Leave: ``அக்., 21 ஆம் தேதி பொது விடுமுறை" - தீபாவளி பண்டிகையையொட்டி தமிழக அரசு அறிவிப்பு

தீபாவளி பண்டிகை வரும் திங்கள் கிழமை (அக்டோபர் 20) வருவதை முன்னிட்டு வெளியூர்களில் வேலை பார்க்கும் பலரும் தங்களின் சொந்த ஊர் நோக்கி இன்றே படையெடுக்கத் தொடங்கிவிட்டனர்.தமிழகத்தில் சென்னை போன்ற பெருநகரங்... மேலும் பார்க்க

"ஆணவப் படுகொலையை தடுக்க ஆணையம்; விரைவில் உரிய சட்டம்" - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

நெல்லை கவின் ஆணவப்படுகொலை, திண்டுக்கல் ராமச்சந்திரன் என நாடுமுழுவதும் தினமும் ஆணவப்படுகொலைகள் சாதியின் பெயரால் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. சாதியவாத சக்திகள் சாதிப் பெருமையைப் பரப்புவதால் ஏற்படும் வி... மேலும் பார்க்க

`கேள்வியே கேட்கக் கூடாதா?’ - வேல்முருகன் VS துரைமுருகன்; களேபரமான சட்டமன்றம்!

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் 4வது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. நீர்வளத்துறை தொடர்பான விவாதம் இன்று நடைபெறுகையில் சோளிங்கர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ஏ.எம்.முனிரத்தினம்சோளிங்கர் ஏரி மதகு அடைபட்டு ... மேலும் பார்க்க

"கரூர் உயிரிழப்பு குறித்த விசாரணை ஆணையம்; தமிழ் அதிகாரிகள் இடம்பெறக் கூடாதா?" - சீமான் கண்டனம்

கரூரில் நடைபெற்ற தவெக பரப்புரையில் 41 பேர் உயிரிழந்த கொடுந்துயர நிகழ்வு குறித்த உண்மையைக் கண்டறிய உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள விசாரணை ஆணையத்தில் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட அதிகாரிகள் இடம்பெறக் ... மேலும் பார்க்க