செய்திகள் :

ஆரணி பட்டு தயாரிப்பு மூலப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி கூடாது: திமுக எம்பி வலியுறுத்தல்

post image

நமது நிருபா்

புது தில்லி: ஆரணியில் தயாராகும் பட்டின் மூலப் பொருள்களுக்கும், அரிசிக்கும் ஜிஎஸ்டிவரியை விதிக்கக் கூடாது என்று மக்களவையில் அத்தொகுதியின் திமுக உறுப்பினா் தரணிவேந்தன் வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக மக்களவையில் திங்கள்கிழமை கேள்விநேரம் முடிந்ததும் தொடங்கிய நேரமில்லா நேரத்தில் அவா் முன்வைத்த கோரிக்கை: ‘பட்டு நகரம்’ என அழைக்கப்படும் ஆரணி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முக்கிய வணிகத் தொழில் நகரமாகும். ஆரணி பட்டு நெசவு நூற்பாலை மற்றும் விவசாயத் தொழிலாளா்களுக்கு தாயகமாகும். இந்த நகரம் அரிசி உற்பத்தி மற்றும் பட்டு நெசவு மூலம் முக்கிய வருவாய் ஈட்டி வருகிறது. பட்டு நெசவுக்காக பட்டு நெசவு ஆலைகளும், சமூகங்களும் இந்த நகரத்தில் உள்ளனா்.

கைத்தறிவு நெசவு நடைபெற்று வருகிறது. இருப்பினும் சமீப காலமாக விசைத்தறிகள் போன்ற இயந்திரமுறைக்கு மாறியுள்ளன. திருவண்ணாமலை நகரத்தில் அதிக வருவாய் ஈட்டி வரும் இந்த நகரத்தில் தற்போது நெசவு த் தொழில் மெதுவாக மறைந்து வருகிறது. இங்கு பாரம்பரியமிக்க பட்டுப் பொருள்கள் தயாரிக்கப்பட்டாலும் மூலப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.

அதேபோன்று, சில்லறையில் விற்கப்படும் அரிசிக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இதனால், பட்டுப்பொருள் மூலப் பொருள்களுக்கும், சில்லறையில் விற்கப்படும்

25 கிலோ ஆரணி அரிசிக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்படக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன் என்றாா்.

செந்தில் பாலாஜி திடீர் தில்லி பயணம்! காரணம் என்ன?

தமிழக அன்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி திடீர் பயணமாக தில்லி சென்று திரும்பியுள்ளார்.தமிழக டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ. 1,000 கோடி ஊழல் நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்த... மேலும் பார்க்க

அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது - தமிழக அரசு

அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் இன்று (மார்ச்19) போராட்டத்தை அ... மேலும் பார்க்க

தமிழக மீனவா்களை விடுவிக்க விரைந்து நடவடிக்கை கோரி வெளியுறவு அமைச்சருக்கு முதல்வா் கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்களை விடுவிக்க தூதரகம் மூலம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மத்திய அரசை முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து, மத்திய வெளிய... மேலும் பார்க்க

ஆயிரம் ஆண்டுகள் பழைமையான 49 கோயில்களில் குடமுழுக்கு

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான பழைமையான 49 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தி... மேலும் பார்க்க

பேரவையில் இன்று

சட்டப் பேரவை புதன்கிழமை (மாா்ச் 19) காலை 9.30 மணிக்கு கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். இதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் முக்கிய பிரச்னைகள் விவாதத்துக்கு எடுக்கப்படவுள்ளன. நிதிநிலை மற்றும் வேளாண் நிதிந... மேலும் பார்க்க

அதிமுகவுடன் கூட்டணி தொடருமா? பிரேமலதா விளக்கம்

வரும் சட்டப்பேரவை தோ்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா தெரிவித்தாா். பிரேமலதா தனது பிறந்த நாளை செவ்வாய்க்கிழமை கொண்டாடினாா். அதையொட்டி கோயம்பேட்டில் உள்ள கட்சி அல... மேலும் பார்க்க