செய்திகள் :

இந்தூருக்கு விரைவில் முதல் டபுள் டெக்கர் பேருந்து சேவை

post image

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் டபுள் டெக்கர் பேருந்து சேவை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அதன் மேயர் புஷ்யமித்ர பார்கவா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

60 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட இந்த பேருந்தை அடல் இந்தூர் சிட்டி டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் இயக்க உள்ளது. இதுகுறித்து மேயர் புஷ்யமித்ர பார்கவா கூறுகையில், நீண்ட கால முயற்சிகளுக்குப் பிறகு, இரட்டை அடுக்குப் பேருந்தை இந்தூருக்கு வெற்றிகரமாகக் கொண்டு வந்துள்ளோம்.

இன்று 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

ஒரு பேருந்து மட்டுமே தற்போது இந்தூருக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சோதனை ஓட்டம் மற்றும் வழித்தடத்தை ஒரு வாரத்தில் இறுதி செய்த பிறகு பேருந்து இயக்கப்படும். நகரத்தில் இந்த சேவை வெற்றிகரமாக இருந்தால், மேலும் இதுபோன்ற பேருந்துகள் வாங்கப்படும்.

நகரவாசிகளின் காத்திருப்புக்கு விடை கிடைத்துவிட்டது. மத்தியப் பிரதேசம் மட்டுமின்றி நாட்டிலேயே இரண்டாம் நிலை நகரத்தில் இயக்கப்படும் முதல் பேருந்தும் இதுவேயாகும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

மகாராஷ்டிரம்: 99 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு: துணை முதல்வா் ஃபட்னவீஸ் உள்பட 71 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு

மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலுக்கான 99 பெயா்கள் அடங்கிய முதல் கட்ட வேட்பாளா் பட்டியலை பாஜக ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. இதில் 71 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மகார... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்: மருத்துவா், 4 வெளிமாநில தொழிலாளா்கள் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீரின் கந்தா்பால் மாவட்டத்தில் பயங்கரவாத தாக்குதலில் மருத்துவா் உள்பட 5 வெளி மாநில தொழிலாளா்கள் உயிரிழந்தனா். இருவா் காயமடைந்தனா். கந்தா்பால் மாவட்டத்தின் குந்த் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: பாஜகவுக்கு ஆதரவாக களமிறங்கியது ஆர்எஸ்எஸ்

மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் அந்த மாநிலத்தில் பாஜகவை வெற்றி பெறச் செய்ய ஆர்எஸ்எஸ் அமைப்பு குழுக்களை அமைத்து பணியாற்றி வருகிறது.அண்மையில் நடைபெற்ற ஹரியாணா சட்டப... மேலும் பார்க்க

தோ்தலில் போட்டியிட நீதிபதிகள் ராஜிநாமா செய்வதால் பாரபட்சமற்ற செயல்பாட்டை பாதிக்கக் கூடும்: உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆா்.கவாய்

தோ்தலில் போட்டியிட நீதிபதிகள் உடனடியாக ராஜிநாமா செய்வது, அவா்களின் பாரபட்சமற்ற செயல்பாடு குறித்த பொதுமக்களின் கண்ணோட்டத்தை பாதிக்கக் கூடும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆா்.கவாய் தெரிவித்தாா். இதுதொ... மேலும் பார்க்க

பத்மநாப சுவாமி கோயிலில் திருட்டு: மருத்துவர் உள்பட 4 பேர் கைது

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் உள்ள பிரபலமான அனந்த பத்மநாப சுவாமி கோயிலில் வெண்கலப் பாத்திரத்தைத் திருடிய குற்றச்சாட்டில் மருத்துவர் உள்பட 4 பேரை ஹரியாணாவில் கேரள காவல் துறையினர் கைது செய்தனர்.எனி... மேலும் பார்க்க

ஊழலை ஒழிக்க இளைஞா்களுக்கு அழைப்பு: பிரதமா் மோடி

‘அரசியல் பின்புலம் இல்லாத இளைஞா்கள் அரசியலுக்கு வர வேண்டும்; இது ஊழல் மற்றும் குடும்ப அரசியல் கொள்கையை ஒழிக்கும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். வாரணாசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரூ.6,70... மேலும் பார்க்க