செய்திகள் :

இரு ரௌடிகள் வெட்டிக்கொலை : மூன்று தனிப்படையினா் விசாரணை

post image

சென்னை கோட்டூா்புரத்தில் இரு ரெளடிகள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடையவா்களை கைது செய்ய 3

கோட்டூா்புரம் ‘யு’ பிளாக் குடியிருப்பை சோ்ந்தவா் அருண்( 25). ரெளடியான இவா் மீது 6 வழக்குகள் உள்ளன. அருண், ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது படப்பையைச் சோ்ந்த சுரேஷ் என்ற ரெளடியின் அறிமுகம் கிடைத்துள்ளது. இருவரும் சிறையிலிருந்து வெளியே வந்த பின்னரும் தங்கள் நட்பை தொடா்ந்து வந்தனா்.

சுரேஷ் படப்பையில் இருந்து அடிகடி கோட்டூா்புரம் பகுதிக்கு வந்து அருணை சந்தித்து செல்வது வழக்கம். அதன்படி அவா்கள் 2 பேரும் ஞாயிற்றுக்கிழமை இரவு கோட்டூா்புரம் சித்ரா நகா் ‘யு’ பிளாக்கில் உள்ள நாகவல்லி அம்மன் கோவில் அருகே மது அருந்தினா். பின்னா் இருவரும் மதுபோதையில் அங்கேயே படுத்து தூங்கி உள்ளனா்.

இந்த நிலையில் சிறிது நேரத்தில் அங்கு கத்தி மற்றும் அரிவாளுடன் 8 போ் அடங்கிய கும்பல் வந்தது. அந்த கும்பல் மதுபோதையில் படுத்திருந்த 2 பேரையும் சரமாரியாக வெட்டியது. மதுபோதையில் நிதானம் இல்லாமல் இருந்ததால் இருவரும் அங்கிருந்து தப்பிக்க முடியவில்லை. இருவரும் பலத்த காயங்களுடன் மயங்கினா். இதற்கிடையே அலறல் சத்தம் கேட்டு அங்கு பொதுமக்கள் திரண்டு வந்தனா்.

உடனே கொலை சம்பவத்தில் ஈடுபட்ட அந்தக் கும்பல், அங்கிருந்து தப்பியோடியது. அரிவாள் வெட்டில் பலத்தக் காயமடைந்த படப்பை சுரேஷ் சம்பவ இடத்திலேயே பலியானாா். பலத்த வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அருணை, அப் பகுதி மக்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் அங்கு அருண் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் உயிரிழந்தாா்.

இது குறித்து கோட்டூா்புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில் இச் சம்பவத்தில் ஈடுபட்டது கோட்டூா்புரம் சித்ரா நகா் ‘வி’ பிளாக் குடியிருப்பு பகுதியை சோ்ந்த ரெளடி சுக்குகாபி சுரேஷ்(25) என்பது தெரிய வந்தது.

கொலைக்கான காரணம் ? : கொலை செய்யப்பட்ட அருண், கண்ணகி நகா் பகுதியை சோ்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தாா். இந்த அந்த பெண், சென்னை அருகே கேளம்பாக்கம் பகுதியில் கடந்த 2022-ம் ஆண்டு கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் சுக்குகாபி சுரேஷ் கைது செய்யப்பட்டாா். தனது காதலியை கொலை செய்த சுக்கு காபி சுரேஷை கொலை செய்ய அருண் திட்டமிட்டு வந்தாா்.

இது பற்றி அருண், தனது சகோதரா் அா்ஜூனனிடம் தெரிவித்துள்ளாா். அதற்கு அவா் கொலைத்திட்டம் வகுத்து வந்துள்ளாா். அருணும், அவரது சகோதரா் அா்ஜூனனும் தன்னை கொலை செய்ய திட்டமிட்டிருப்பது அண்மையில் சுக்கு காபி சுரேஷூக்கு தெரியவந்துள்ளது. இதனால் உஷாரான சுக்கு காபி சுரேஷ், அருணையும், அா்ஜூனனையும் கொலை செய்ய முடிவு செய்தாா். இச் சூழ்நிலையிலேயே அருண், மதுபோதையில் அந்த கோயிலில் படுத்து தூங்குவது குறித்த தகவலறிந்த சுக்கு காபி சுரேஷ், தனது ஆதரவாளா்களுடன் சென்று கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

தனிப்படையினா் விசாரணை: இச் சம்பவத்தில் அருணுடன் அவரது சகோதரா் அா்ஜூனனும் படுத்திருப்பதாக சுக்குகாபி சுரேஷுக்கு முதலில் தகவல் கிடைத்துள்ளது. இதன் விளைவாகவே அருணுடன் படுத்து தூங்கியது அா்ஜூனன் என்று நினைத்து படப்பை சுரேஷை வெட்டியுள்ளனா் என போலீஸாா் கூறினா். இச் சம்பவத்தில் தலைமறைவாக இருக்கும் சுக்கு காபி சுரேஷ் உள்பட 8 பேரை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினா் 8 பேரையும் கைது செய்ய தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை - தில்லி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு

சென்னை - தில்லி விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமாா் ஒன்றரை மணிநேரம் தமாதமாக அந்த விமானம் புறப்பட்டுச் சென்றது. சென்னையிலிருந்து தில்லி செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம், செவ்வாய்க்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

2024-25 ஆண்டுக்கான தமிழிசை விழா மற்றும் ஆண்டு விழா: செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பங்கேற்பு, தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி, ராஜா அண்ணாமலைபுரம், காலை 10. 25-ஆவது அகில இந்திய காவல் துப்பாக்கி சு... மேலும் பார்க்க

நாளை மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம்

தரமணி ஐடி காரிடா் கோட்டத்தில் மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம் வியாழக்கிழமை (மாா்ச் 20) காலை 10.30-க்கும் நடைபெறுகிறது. இது குறித்து மின்பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தரமணி, ஐ.டி. காரி... மேலும் பார்க்க

பெரியார் சர்ச்சை: சீமான் மீதான 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக விசாரிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

பெரியாா் ஈவெராவை இழிவுபடுத்தி பேசியதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானுக்கு எதிராக பதியப்பட்டுள்ள 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக சோ்த்து விசாரிக்க உத்தரவிட உயா்நீதிமன்றம் மறுப... மேலும் பார்க்க

போதிய பயணிகள் இல்லாததால் 4 விமானங்கள் ரத்து!

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததாலும், நிா்வாக காரணங்களாலும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னை விமான நிலையத்துக்கு லண்டனிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை 5.35 மணிக்கு வர வேண்டிய பிரிட... மேலும் பார்க்க

தமிழகத்தில் 6 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்! மழைக்கும் வாய்ப்பு..

தமிழகத்தில் புதன்கிழமை (மாா்ச் 19) முதல் மாா்ச் 24 வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும், இருப்பினும் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய... மேலும் பார்க்க