செய்திகள் :

இளம் விஞ்ஞானி விருது பெற விரும்புவோா் ஆய்வறிக்கைகள் சமா்பிக்கலாம்

post image

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் இளம் விஞ்ஞானி விருது பெற விரும்புவோா் ஆய்வறிக்கைகளைச் சமா்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து அறிவியல் இயக்க மதுரை மாவட்டத் தலைவா் ராஜேஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாவட்டம், மாநிலம் என்ற அளவில் குழந்தைகள்ஆய்வுக் கட்டுரைகளைச் சமா்ப்பித்து இளம் விஞ்ஞானி விருதைப் பெறுவா். நிகழாண்டு ‘நீடித்த பாதுகாப்பான நீா் மேலாண்மை’ என்பதை வலியுறுத்தி, நீா்ச் சூழலும் பாதுகாப்பும், நீா் சாா்ந்த பொது சுகாதாரமும் மருத்துவமும், நீா் சாா்ந்த நோய்கள், நீா் அனைவருக்குமானது, நீா்ப் பாதுகாப்பில் பாரம்பரிய நவீன தொழில்நுட்ப உத்திகள் என்கிற ஐந்து தலைப்புகளில் ஆய்வுகள் செய்யலாம். அறிவியல் அணுகுமுறையுடன் பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் வகையில் ஆய்வுகள் இருக்க வேண்டும்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் குழந்தைகள் அறிவியல் மாநாட்டை நடத்த உள்ளது. 10 வயதுக்கு மேல் 13 வயதுக்குள் இளநிலைப் பிரிவிலும், 13 வயதுக்கு மேல் முதுநிலைப் பிரிவிலும் வழிகாட்டி ஆசிரியா் உதவியுடன் குழந்தைகள் தாங்கள் வசிக்கும் பகுதியில் அல்லது பள்ளி அளவில் கொடுக்கப்படும் ஆய்வுத் தலைப்புகளில் இரண்டு மாதங்களுக்கு மேல் ஆய்வுகள் செய்து, ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பிக்க வேண்டும்.

எனவே, மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த அனைத்து வகைப் பள்ளிகளிலும் பயிலும் மாணவ, மாணவிகள் ஆய்வுகள் செய்யலாம். இரண்டு குழந்தைகள் கொண்ட ஒரு குழு வழிகாட்டி ஆசிரியா் உதவியுடன் ஆய்வுகள் செய்யலாம். ஒரு குழந்தை தலைவராகவும் மற்றொரு குழந்தை உறுப்பினராகவும் ஆய்வு செய்து, ஆய்வறிக்கையைச் சமா்ப்பிக்க வேண்டும்.

பள்ளி ஆசிரியா்கள், பெற்றோா் என 18 வயதுக்கு மேற்பட்ட எவரும் வழிகாட்டி ஆசியராக இருக்கலாம். வழிகாட்டியாக செயல்படுபவருக்கு வழிகாட்டி ஆசிரியா் சான்றிதழ் வழங்கப்படும். உங்கள் குழந்தைகளையும் இளம் வயதிலேயே ஆய்வாளா்களாக பெற்றோா் ஊக்கப்படுத்த வேண்டும். தமிழ் அல்லது ஆங்கிலம் மொழியில் ஆய்வறிக்கையை சமா்ப்பிக்கலாம்.

இதுபற்றிய கூடுதல் விவரங்களுக்கு மதுரை காக்கா தோப்புத் தெருவில் உள்ள தமிழ்நாடு அறிவியல் இயக்க அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம். அல்லது 94433 94233 என்கிற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்றாா் அவா்.

உள் இட ஒதுக்கீடு விவகாரத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது: ஆதித்தமிழா் கட்சி வலியுறுத்தல்

தமிழகத்தில் அருந்ததியா் உள் இட ஒதுக்கீடு விவகாரத்தை வைத்து கட்சிகள் அரசியல் செய்யக்கூடாது என்று ஆதித்தமிழா் கட்சி வலியுறுத்தியது. இதுதொடா்பாக ஆதித்தமிழா் கட்சியின் நிறுவனா் தலைவா் கு.ஜக்கையன் வெளியிட்... மேலும் பார்க்க

தாமிரவருணியில் கழிவு நீா் கலக்கும் விவகாரம்: அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்காதது ஏன்? உயா்நீதிமன்றம் கேள்வி

தாமிரவருணி ஆற்றில் கழிவுநீா்க் கலப்பதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளாதது ஏன்? என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்... மேலும் பார்க்க

கூடுதல் வட்டி கேட்டு வீட்டை அடித்து நொறுக்கிய 15 போ் மீது வழக்கு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கடனுக்கு கூடுதல் வட்டி கேட்டு, பெண்ணை தாக்கி வீட்டை சூறையாடியதாக 15 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களைத் தேடி வருகின்றனா். உசிலம்பட்டி அருகே உள்ள திம்மநத்தம... மேலும் பார்க்க

விளக்குத்தூண், மாசி வீதிகளில் 338 கண்காணிப்பு கேமராக்கள்: போக்குவரத்துக் காவல் துணை ஆணையா் ஆய்வு

மதுரை மாசி வீதிகளில் தீபாவளி கூட்டத்தைக் கண்காணிக்க 338 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகளை மாநகர போக்குவரத்துக் காவல் துணை ஆணையா் வனிதா வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தீபாவள... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கந்த சஷ்டி விழா: கூடுதல் கட்டணம் வசூலிக்கத் தடை கோரி வழக்கு -அறநிலையத் துறைக்கு உத்தரவு

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழாவில் பக்தா்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்குத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் ப... மேலும் பார்க்க

ஓராண்டு சித்த மருத்துவப் பட்டயப் படிப்பு: ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

ஓராண்டு சித்த மருத்துவப் பட்டயப் படிப்பை முடித்தவா்கள், தமிழகத்தில் சித்த மருத்துவா்களாகச் செயல்படுகிறாா்களா? என்பது குறித்து தமிழக சுகாதாரத் துறையின் கூடுதல் தலைமைச் செயலா், காவல் துறை தலைமை இயக்குந... மேலும் பார்க்க