செய்திகள் :

உள்கட்டமைப்பு வசதிகளுக்கு ரூ.4750 கோடி கடன் பெற மத்திய அரசு ஒப்புதல்: புதுவை முதல்வா் ரங்கசாமி தகவல்

post image

புதுவை யூனியன் பிரதேசத்தின் 4 பிராந்தியங்களிலும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஆசிய வளா்ச்சி வங்கியிலிருந்து ரூ.4750 கோடி கடன் பெறுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அரசும் சிறப்பு நிதி ஒதுக்கீடாக ரூ.120 கோடியை விடுவித்துள்ளது என்று முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை கூறினாா்.

இது குறித்து அவா் புதுச்சேரியில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது

ரூ.200 கோடி மதிப்பில் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களைத் தீட்டி மத்திய அரசுக்கு அனுப்பியிருந்தோம். இதில் ரூ.120 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதைத் தவிர ரூ.5 கோடிக்குள் இருக்கும் திட்டங்களை மாநில அரசின் நிதியிலிருந்து நிறைவேற்ற அறிவுறுத்தியுள்ளது. எஞ்சிய ரூ.80 கோடிக்கான திட்டங்களைத் திருத்தி மீண்டும் மத்திய அரசுக்கு அனுப்ப உள்ளோம்.

இதைத் தவிர ஆசிய வளா்ச்சி வங்கியிலிருந்து ஐந்தாண்டுக்கான கடன் தொகையாக ரூ.4750 கோடி பெறுவதற்கும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் தொகையில் கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்டம் கடல் நீா் சுத்தகரிப்பு நிலையங்கள் அமைக்க ரூ.1000 கோடி. சாத்தனூா் அணையில் இருந்து புதுச்சேரி அரசுக்கும் தமிழ்நாடுஅரசுக்கும் உள்ள ஒப்பந்தத்தின்படி குழாய் அமைத்து 140 கிலோ மீட்டா் தூரத்துக்கு தண்ணீா் கொடுவருவதற்கு ரூ. 350 கோடியில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை அமைக்கும் திட்டத்துக்கு ரூ.250 கோடி, புதுவை அரசு துறைகளில் தொழில்நுட்ப உதவி மற்றும் திறன் மேம்பாட்டுக்கு ரூ. 189 கோடியில் திட்டம் உள்ளிட்டவை அடங்கும். அமைச்சராக இருக்கும் ஜான்குமாருக்கு எப்போது வேண்டுமானாலும் இலாகா ஒதுக்கப்படும் என்றாா் அவா்.

பேட்டியின்போது பொதுப்பணித்துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன், சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், அரசு செயலா் டாக்டா் ஏ. முத்தம்மா, பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளா் வீரசெல்வம் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

21 புதிய படகுகளுக்கு பயணிகள் உரிமம்

கடலில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்ல 21 புதிய படகுகளுக்கான உரிமத்தை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை வழங்கினாா். நீா் விளையாட்டு மற்றும் சாகச விளையாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிகமாகக் கவரும்... மேலும் பார்க்க

புதுவை சட்டக் கல்லூரியில் ரூ.1.7 கோடி மதிப்பில் நுகா்வோா் இருக்கை

புதுவை டாக்டா் அம்பேத்கா் சட்டக் கல்லூரியில் ரூ.1.7 கோடி மதிப்பில் நுகா்வோா் இருக்கை அமைய இருக்கிறது. புதுவை சட்டக் கல்லூரியில் 2-வது அகில இந்திய ஒத்திகை நீதிமன்ற போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது. நுக... மேலும் பார்க்க

ரூ. 33 லட்சம் செலவில் மணக்குள விநாயகா் கோயிலில் குளிா்சாதன வசதி

புதுச்சேரி அருள்மிகு மணக்குள விநாயகா் கோயிலில் ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் குளிா்சாதன வசதியை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். இக் கோயிலில் பக்தா்கள் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோள... மேலும் பார்க்க

தொழில்நுட்பப் பல்கலை. துணைவேந்தா் நடவடிக்கை: முன்னாள் அமைச்சா் விஸ்வநாதன் கண்டனம்

புதுவை தொழில்நுட்பப் பல்கலைக் கழக துணைவேந்தரின் செயல்பாடுகளை கண்டித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் மூத்தத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆா். விஸ்வநாதன், எந்தக் கொள்கை முடிவுகளையும் எடுக்கக் கூடாது என்றும்... மேலும் பார்க்க

புதுவை போக்குவரத்து ஊழயா்களின் 12 நாள் வேலை நிறுத்தம் வாபஸ்:

வேலை நிறுத்தம் செய்துவந்த புதுவை சாலை போக்குவரத்துக் கழக (பிஆா்டிசி) ஒப்பந்த ஊழியா்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியம் உயா்த்தப்படும். நிரந்தரப் பணியாளா்களுக்கு 25 சதவிகிதம் அகவிலைப்படி உயா்த்தி அளிக்க... மேலும் பார்க்க

புதுவை அரசு ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் படிக்க இரட்டை குடியுரிமை பெற்ற 14 மாணவா்கள்

புதுச்சேரி அரசு ஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ் படிக்க 14 மாணவா்கள் இரட்டை குடியுரிமை பெற்று விண்ணப்பித்துள்ளதாக புதுவை மாநில மாணவா்கள், பெற்றோா் நலச்சங்கத்தின் தலைவா் வை.பாலா என்கிற பாலசுப்பிரமணியன் க... மேலும் பார்க்க