செய்திகள் :

ஒடிசாவில் 2 மாவோயிஸ்ட் முகாம்கள் தகர்ப்பு! வெடிகுண்டு உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்!

post image

ஒடிசாவின் பாலங்கீர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளின் 2 முகாம்கள் தகர்க்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலங்கீரின் கந்தாமார்தன் மலைப்பகுதி மற்றும் சத்ராதண்டி வனப்பகுதிகளில், பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (மே 15) சோதனைகள் மேற்கொண்டனர்.

மாவட்ட தன்னார்வப் படை (DVF), மற்றும் சிறப்பு செயல்பாட்டுக் குழு (SOG) ஆகிய படைகள் மேற்கொண்ட இந்தச் சோதனைகளில் அப்பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த மாவோயிஸ்டுகளின் முகாம்கள் அடையாளம் காணப்பட்டன.

ஆனால், பாதுகாப்புப் படையினரின் வருகைக்கு முன்னரே அங்கிருந்த மாவோயிஸ்டுகள் தப்பி சென்றதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அந்த முகாம்கள் அனைத்தும் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, அங்கிருந்து ஏராளமான வெடிகுண்டுகள் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், ஐ.ஈ.டி. எனப்படும் நவீன வெடிகுண்டுகள் தயாரிப்பது குறித்த விவரங்கள் அடங்கிய குறிப்புகளும் அங்கிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, அடர்ந்த காடுகள் நிரம்பிய அப்பகுதியின் வழியாக அங்கு செயல்படும் மாவோயிஸ்டுகள் ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு இடையில் சென்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: துருக்கி ஆப்பிள் முதல் மார்பிள் வரை.. சரியும் இறக்குமதி! என்னவாகும் ஏற்றுமதி?

நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் வாழ்த்து!

புதிய சாதனை படைத்த இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.டைமண்ட் லீக் தடகளப் போட்டியில் புதிய சாதனை படைத்த நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட... மேலும் பார்க்க

மும்பையில் கொட்டித் தீர்த்த கோடைமழை.. வெப்பம் தணிந்தது!

மும்பை: மும்பையின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் கோடை மழை கொட்டித் தீர்த்தது. இத்தனை நாள் வாட்டி வந்த வெப்பம் தணிந்துள்ளது. மும்பை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இன்று நாள் முழுக்க மும்பை நகரில்... மேலும் பார்க்க

அமெரிக்கா மீது வரியைக் குறைத்த இந்தியா? டிரம்ப்பின் பேச்சால் மீண்டும் குழப்பம்!

அமெரிக்கா மீதான வரியை இந்தியா குறைக்கவுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டால், இரு நாடுகளுடனும் வர்த்தகம் செய்யப்போவ... மேலும் பார்க்க

பிகாரில் கயா நகரின் பெயரை மாற்றியது நிதீஷ் குமார் அரசு

பாட்னா: மிகவும் புனிதத் தலமாகக் கருதப்படும் கயா நகரின் பெயர் இனி கயா ஜி என்றே அழைக்கப்படும் என்று பிகார் அரசு அறிவித்துள்ளது.பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்த... மேலும் பார்க்க

புதிய சாதனை படைத்த நீரஜ் சோப்ரா!

டைமண்ட் லீக் தடகளப் போட்டியில் 90.23 மீ் தூரம் ஈட்டி எறிந்து, நீரஜ் சோப்ரா புதிய சாதனையைப் படைத்தார்.ஹரியாணாவை சோ்ந்த தடகள வீரரான நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதலில் சா்வதேச களத்தில் சிறந்து விளங்கி இந்தியா... மேலும் பார்க்க

‘காங்கிரஸுக்கு எதிா்காலம் இல்லை’: ப.சிதம்பரம் பேச்சை சுட்டிக்காட்டி பாஜக கருத்து

காங்கிரஸ் கட்சிக்கு எதிா்காலம் இல்லை என்பது அக்கட்சியின் மூத்த தலைவா் ப.சிதம்பரத்தின் கருத்தின் மூலம் வெளிப்பட்டுவிட்டது என்று பாஜக கூறியுள்ளது. முன்னதாக, எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி குறித்து கர... மேலும் பார்க்க