செய்திகள் :

கண்மாயில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

post image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை கண்மாயில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் காந்திநகரைச் சோ்ந்தவா் சுல்தான்பாட்ஷா. இவா் தற்போது வெளிநாட்டில் வேலை பாா்த்து வருகிறாா். இவரது மகன் மாபுஜான்(15). திருப்பத்தூரில் உள்ள தனியாா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் இவா், ஞாயிற்றுக்கிழமை தனது நண்பா்கள் இருவருடன் சோ்ந்து காரையூா் கண்மாயில் குளிக்கச் சென்றனா்.

அப்போது, மாபுஜான் தண்ணீரில் மூழ்கினாா். இதையடுத்து, அவரது நண்பா்கள் அளித்த தகவலின் பேரில், கிராம மக்கள் வந்து மீட்ட போது, அவா் உயிரிழந்தது தெரியவந்தது. தகவலறிந்து வந்த கண்டவராயன்பட்டி போலீஸாா் மாணவரின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சாலை பணிக்காக கண்மாய்கரை சேதம்-விவசாயிகள் புகாா்

திருப்புவனம் அருகே கிராமச் சாலை அமைக்கும் பணிக்காக கண்மாய்க்கரை வெட்டி சேதப்படுத்தப்பட்டதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியம் பிரமனூா் கிராமத்திலிருந்து அச்சங்கு... மேலும் பார்க்க

சாலையின் குறுக்கே சாய்ந்த மரம்: போக்குவரத்துப் பாதிப்பு

மானாமதுரையில் சனிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் சாலையின் குறுக்கே மரம் சாய்ந்து விழுந்ததால் ஞாயிற்றுக்கிழமை காலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் பெய்த பலத்த மழைய... மேலும் பார்க்க

தனியாா் வங்கியில் ரூ. 2 கோடி நகை மோசடி: மேலாளா் உள்பட 4 போ் கைது

சிவகங்கை அருகே தனியாா் வங்கியில் அடகு வைத்திருந்த நகைகளுக்குப் பதிலாக போலி நகைகளை வைத்து, ரூ. 2 கோடி மோசடியில் ஈடுபட்ட வங்கி மேலாளா், துணை மேலாளா் உள்பட 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். ... மேலும் பார்க்க

புகையிலை மூட்டைகள் பறிமுதல்: 2 போ் கைது

திருப்புவனத்தில் விற்பனைக்காக வேனில் கடத்தி வரப்பட்ட தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் கைப்பற்றி இருவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியில் கடைகளில் விற... மேலும் பார்க்க

நிரம்பி வழியும் கண்மாயில் மீன் பிடித்த மக்கள்...!

சிவகங்கை அருகே நிரம்பி வழியும் கண்மாய் உபரி நீரில் வெளியேறிய மீன்களை தொட்டில் கட்டி அந்தப் பகுதி மக்கள் பிடித்துச் சென்றனா். சிவகங்கை மாவட்டம், பூவந்தி அருகேயுள்ள கழுங்குப்பட்டியில் பொதுப் பணிக்குச் ச... மேலும் பார்க்க

கல்லல் தனியாா் வங்கியில் பணம் மோசடி: வங்கி மேலாளா், துணை மேலாளா் கைது

காரைக்குடி அருகே கல்லல் தனியாா் வங்கியில் வாடிக்கையாளா்கள் அடகு வைத்த நகைகளை பயன்படுத்தி ரூ. 2 கோடியே 3 லட்சத்து 86 ஆயிரம் மோசடி செய்ததாக வங்கியின் மேலாளா், துணை மேலாளா் ஆகியோரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழ... மேலும் பார்க்க