செய்திகள் :

கரூர் மரணங்கள்: "ஆனந்த் பேசிய ஆதராம் என்னிடம் இருக்கிறது; விஜய்தான் முழுப்பொறுப்பு" - வேல்முருகன்

post image

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் 4வது நாளாக இன்று நடைபெற்று வருகிறது.

இதில் கரூர் சம்பவம் குறித்துப் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், "நடிகர்களை நடிகராகப் பார்க்க வேண்டும். அவர்களைப் பார்க்கச் சென்று அப்பாவி மக்கள்தான் பலியாகியிருக்கிறார்கள். நடந்தது விபத்துதான், அதற்கு விஜய்தான் முழு பொறுப்பேற்க வேண்டும். அதைவிட்டுவிட்டு அரசையும், காவல்துறையையும் விஜய் குறை கூறுவது அபத்தமானது.

புஸ்ஸி ஆனந்த்
புஸ்ஸி ஆனந்த்

தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் காவல்துறையிடம் பேசிய ஆதாரம் என்னிடமிருக்கிறது. 'பிரசாரத்திற்கு கரூர் வேலுச்சாமிபுர இடத்தை காவல்துறை கொடுத்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நான் எந்தவித தொந்தரவுமில்லாமல் கூட்டத்தை நடத்திக் கொடுக்கிறேன். 10,000 பேர்தான் வருவார்கள். இந்த இடம் எங்களுக்குப் போதும்' என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் நன்றி தெரிவித்து பேசினார் ஆனந்த். அவர் காவல்துறையிடம் கலந்து ஆலோசித்த வீடியோ இருக்கிறது.

அந்த இடத்தில் பல கேமராக்கள், ட்ரோன்கள், மீடியாவின் நேரடி ஒளிபரப்பு என நடந்தவை எல்லாம் கண்காணிப்பில் இருந்திருக்கின்றன. ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. இத்தனையும் இருந்தும் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதைப் போல அனைத்திற்கும் காரணம் திமுக அரசுதான் என்று பழிபோடுகிறார்கள்.

வேல்முருகன் VS துரைமுருகன்
வேல்முருகன் VS துரைமுருகன்

அடுத்தவர்கள் மீது பழிபோட்டுவிட்டு தப்பித்துக் கொள்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்குத் தண்டனை வாங்கித் தர வேண்டும். முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தவறு செய்தவர்களை சட்டத்தின்முன் நிறுத்தி தண்டனை வாங்கித் தந்து இந்த விஷயத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்துப் பத்திரிகைகளும், ஊடகவியலாளர்களும் விஜய், தவெக கட்சியினர் மீதுதான் தவறு என்று கூறிவிட்டனர்.

அன்று 'பாசிசம், பாயாசம்' என்றெல்லாம் பாஜகவை விமர்சித்தவர்கள், இன்று ஆர்.எஸ்.எஸ், பாஜக ஆலோசனையில்தான் உச்ச நீதிமன்றத்தில் வாதாடுகிறார்கள்" என்று விஜய்யை விமர்சித்துப் பேசியிருக்கிறார் வேல்முருகன்.

குஜராத்: அமைச்சரான ரிவாபா ஜடேஜா `டு' இளம் துணை முதல்வர் - புதிய அமைச்சரவை!

குஜராத் அரசில் முதலமைச்சர் பூபேந்திர படேல் தலைமையில் 21 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்றனர். பதவியேற்பு விழாவில் பாஜக தலைவர் ஜே.பி நட்டா கலந்துகொண்டார். குஜராத் அரசில் இளைஞர்களுக்கும் புதியோருக்கும் ... மேலும் பார்க்க

ஆணவப் படுகொலை: ``கண்துடைப்பு ஆணையம்; 4.5 ஆண்டுகளில் அமைத்த ஆணையங்களால் என்ன பயன்?" - அண்ணாமலை கேள்வி

`நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆணவப் படுகொலைக்கெதிராக தனிச் சட்டம் கொண்டு வருவோம்' என்ற வாக்குறுதியோடு 2021 மே மாதம் முதல்வர் நாற்காலியில் அமர்ந்த ஸ்டாலின், சமீபத்தில் நெல்லை கவின் ஆணவக்கொலை தமிழ்நாட்டையே... மேலும் பார்க்க

`கிட்னிகள் ஜாக்கிரதை’ டு `உருட்டு கடை அல்வா’ - சட்டசபையில் திமுக அரசுக்கு எதிராக அதிமுகவினர்!

சட்டசபையில் திமுக அரசுக்கு எதிராக அதிமுகவினர்!சட்டசபையில் திமுக அரசுக்கு எதிராக அதிமுகவினர்!சட்டசபையில் திமுக அரசுக்கு எதிராக அதிமுகவினர்!சட்டசபையில் திமுக அரசுக்கு எதிராக அதிமுகவினர்!சட்டசபையில் திமு... மேலும் பார்க்க

ட்ரம்ப் - புதின் தொலைபேசியில் பேச்சுவார்த்தை; அடுத்து, ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்துவாரா ட்ரம்ப்?

நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் நீண்ட நேரம் தொலைபேசியில் உரையாடியிருக்கின்றனர். அதில் முக்கிய பேசுபொருளாக ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தம் மற்றும் வணிகம் இருந்துள்ளது. ட்ரம்ப் ... மேலும் பார்க்க

4 கும்கிகளுடன் சுற்றி வளைப்பு - சிக்கியது கோவை ரோலக்ஸ் யானை

கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் யானை, காட்டு மாடு, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம் இருக்கும். தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ... மேலும் பார்க்க

கரூர்: ``மாற்றி மாற்றி பேசும் மா.சு, ரகுபதி; உடற்கூராய்வு கணக்கில் ஏன் குழப்பம்?'' - அண்ணாமலை கேள்வி

தற்போது சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வருகிறது.நேற்று முன்தினம் கரூர் சம்பவம் குறித்து விவாதிக்கப்பட்டது.அப்போது, 'கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு ஏன், எப்படி வேகமாக உடற்கூராய்வு செய்யப்பட... மேலும் பார்க்க