செய்திகள் :

கரூர் மரணங்கள்: "நாங்களே மன கஷ்டத்தில் இருக்கிறோம்" - எஸ்.ஏ. சந்திரசேகர்

post image

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் அம்மா அம்சவேணி (83) வயது மூப்பு காரணமாக இன்று (அக்.8) காலமானார்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள அம்சவேணியின் மகன் எல்.கே. சுதீஷின் இல்லத்தில் அம்சவேணியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் பொருளாளர் எல்.கே. சுதீஷ் தலைமையில் ஈரோட்டில் பூத் முகவர்கள் ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற இருந்த நிலையில் அவர்களது தாயார் மறைவைத் தொடர்ந்து சென்னை புறப்பட்டனர்.

பிரேமலதா விஜயகாந்தின் அம்மா அம்சவேணி
பிரேமலதா விஜயகாந்தின் அம்மா அம்சவேணி

இல்லத்தில் இருந்து இறுதி ஊர்வலம் நாளை (08.10.2025) மதியம் 1 மணி அளவில் தொடங்கி வடபழனி ஏவிஎம் மின்மயானத்தில் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் தவெக தலைவர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருக்கிறார்.

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "பிரேமலதா, அவரின் அம்மாவை நன்றாகத்தான் பார்த்துக்கொண்டிருந்தார்.

நேற்று வரைக்குமே அவர் நன்றாகத்தான் இருந்திருக்கிறார். அதனால்தான் பிரேமலதா அவர்களும் மீட்டிங் சென்றிருக்கிறார்.

என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பேசியிருக்கிறார்.

எஸ்.ஏ சந்திரசேகர்
எஸ்.ஏ சந்திரசேகர்

தொடர்ந்து கரூர் சம்பவம் குறித்து கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்குப் பதிலளித்த அவர், "ஏற்கனவே நாங்கள் மனக்கஷ்டத்தில் இருக்கிறோம். நாங்கள் இறப்பு வீட்டிற்கு வந்திருக்கிறோம். எந்த நேரத்தில் என்ன கேள்வி கேட்க வேண்டும் என்று தெரியாதா?" என்று காட்டமாகப் பேசியிருக்கிறார்.

பீகார் சட்டமன்றத் தேர்தல்: தொகுதி பங்கீட்டில் இழுபறி; முட்டி மோதும் கட்சிகள்; என்ன நடக்கிறது?

பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய இரண்டு தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கிறது. தொடர்ந்து நிதீஷ் குமார் முதல்வராக இருப்பதால் இத்தேர்தல் எதிர்க்கட்சிகளுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக இ... மேலும் பார்க்க

அரசு கேபிளில் இருந்து புதிய தலைமுறை சேனல் முடக்கம்: வலுக்கும் கண்டனம்; ஆசிரியர் சமஸ் சொல்வது என்ன?

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த 2016-ம் ஆண்டு முதல்வராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். அதைத் தொடர்ந்து 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதன்முறையாக முதல்வர் அரியணையில் ஏறினார் இப்போதைய எதிர்... மேலும் பார்க்க

புதிய தலைமுறை: "கருத்துச் சுதந்திரம் என வாய்கிழியப் பேசிவிட்டு ஊடகங்கள் மீது ஆதிக்கம்" - சீமான்

தமிழில் முன்னணி செய்தி சேனல்களில் ஒன்றான `புதிய தலைமுறை' சேனல், அரசு கேபிளில் முடக்கம் செய்யப்பட்டிருப்பதாக சேனல் நிர்வாகம் குற்றச்சாட்டு முன்வைத்திருக்கிறது.இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள்... மேலும் பார்க்க

"சாதிவாரி கணக்கெடுப்புப் பணிகள் அக்., 18 வரை நீட்டிப்பு; அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை" - சித்தராமையா

காங்கிரஸ் கட்சியானது நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பும் சரி, தேர்தலின்போதும் சரி, தேர்தலுக்குப் பிறகும் சரி தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனத் தொடர்ச்சியாக வலியுறுத்... மேலும் பார்க்க